மேலும் அறிய

வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவு.. பொருளாதாரம் மோசமடையும் அபாயம்!

கடந்த 2010 முதல் 2020 வரையிலான ஆண்டில், இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை சுமார் 26 சதவிகிதத்தில் இருந்து 19 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாக உலக வங்கி வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பல கோடிக்கணக்கான பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் பறிபோயுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா தொற்றைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, வெகுசில வாரங்களில், நாடு முழுவதும் சுமார் 10 கோடி பேர் வேலை இழந்ததோடு, தங்கள் கிராமங்களுக்குத் திரும்பினர். 

தற்போதைய சூழலில், உலகம் மீண்டும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துகொண்டிருக்கும் நிலையில், பொருளாதார அறிஞர்கள் மீண்டும் ஒரு பிரச்னைக்குரிய விவகாரத்தைச் சுட்டிக்காட்டுகின்றனர். நாடு முழுவதும் தொழிலாளர்களுள் பெண்கள் பணிக்குத் திரும்பாதது சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் இருந்து பல ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்புக்குக் காரணமாக அமையும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தொற்றுக்குப் பிறகு, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெண்கள் பணிகளில் இருந்து விலகியிருப்பது இந்தியாவைப் போரால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏமன் நாட்டைப் போல மாற்றியுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. 

வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவு.. பொருளாதாரம் மோசமடையும் அபாயம்!

கடந்த 2010 முதல் 2020 வரையிலான ஆண்டில், இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை சுமார் 26 சதவிகிதத்தில் இருந்து 19 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாக உலக வங்கி வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றுக்குப் பிறகு ஏற்பட்ட சூழல் காரணமாக, 2022ஆம் ஆண்டில் பணிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை சுமார் 9 சதவிகிதமாகக் குறைந்ததாகக் கூறப்படுகிறது. 

கொரோனா பெருந்தொற்றுக்கு முன் இந்தியாவின் பொருளாதாரம் மந்தமடைந்திருந்த நிலையில், தற்போதைய இந்தத் தரவுகள் இந்தியப் பொருளாதாரம் மோசமடையவுள்ளதைக் குறிப்பதாக பொருளாதார அறிஞர்கள் கூறியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். எனினும், அவரது நிர்வாகத்தின் கீழ், பணிக்குச் செல்லும் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இந்தியாவின் கிராமப்புறங்களில் சுமார் 100 கோடி மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், பழமைவாதம் காரணமாக பெண்கள் பணிக்குச் செல்வது இல்லை. இந்தியாவின் பொருளாதார மாற்றங்களுக்குப் பிறகு, நகர்ப்புறங்களின் பெண்கள் பல்வேறு கடினமான முயற்சிகளுக்குப் பிறகு பணிக்குச் செல்கின்றனர். 

வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவு.. பொருளாதாரம் மோசமடையும் அபாயம்!

பணிக்குச் செல்லும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான இடைவேளை சுமார் 58 சதவிகிதமாக இருப்பதால், இது 2050ஆம் ஆண்டின் போது இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம். மேலும், இந்தியா முழுவதும் பெண்களின் மக்கள்தொகை சுமார் 48 சதவிகிதம் இருந்தாலும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பெண்களின் பங்கு சுமார் 17 சதவிகிதமாக மட்டுமே இருக்கிறது. சீனாவில் இதே பங்கு சுமார் 40 சதவிகிதமாக உள்ளது.

அதிகரிக்கும் வீட்டு வேலைகள், குழந்தைகள் பாதுகாப்புக்கான போதிய இடங்கள் இல்லாமை, அதிகரிக்கும் திருமணங்களின் எண்ணிக்கை முதலானவையே பணிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்துள்ளது. பெண்களைப் பணிக்கு அனுப்புவதைக் கௌரவ குறைச்சலாக பார்க்கும் இந்தியக் கலாச்சாரப் பின்னணிக்கும் இதில் தொடர்புண்டு. 

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Embed widget