மேலும் அறிய

Chandrayaan Moon Southpole : நிலவின் தென்துருவத்தை உலக நாடுகள் குறிவைப்பது ஏன்? சந்திரயான் 3 மூலம் இந்தியா சாதிக்க உள்ளது என்ன!?

நிலவின் தென் துருவத்தை உலக நாடுகளை சேர்ந்த அனைத்து ஆராய்ச்சி நிறுவனங்களும் குறிவைப்பது ஏன் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

நிலவின் தென் துருவத்தை உலக நாடுகளை சேர்ந்த அனைத்து ஆராய்ச்சி நிறுவனங்களும் குறிவைப்பது ஏன் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

சாதித்த இந்தியா..!

நீண்டகால கடும் உழைப்புடன் 140 கோடி இந்தியர்களின் கனவை சுமந்து கொண்டு,  40 நாட்களில் பல ஆயிரம் கிலோமீட்டர்களை கடந்து திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது சந்திரயான் 3 விண்கலம். இதன் மூலம் நிலவின் மேற்பரபில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவை தொடர்ந்து இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது. அதேநேரம், நிலவின் தென்துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமை இந்தியா பெற்றுள்ளது. அந்த தென்துருவம் என்பதுதான் மிகுந்த கவனத்தில் கொள்ளவேண்டியதாக உள்ளது. அது ஏன் என்பது தான் இங்கு விரிவாக விளக்கப்பட உள்ளது. 

தண்ணீர்.. தண்ணீர்..!

நிலவு தொடர்பாக இதுவரை அறியப்படாத பல்வேறு தகவல்களை சந்திரயான் 3 வழங்கும் என்பதோடு, சந்திரனின் மிகவும் மதிப்புமிக்க வளங்களில் ஒன்றான நீர் பனி பற்றிய ஏராளமான தகவல்கள் தென் துருவத்தில் இருந்து கிடைக்கப்பெறலாம் என்பதே இத்திட்டத்தின் மீதான மிகப்பெரிய எதிர்பார்ப்பாகும். இதன் காரணமாகவே விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளும்,  தனியார் நிறுவனங்களும், நிலவின் வளங்கள் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கான சாத்தியமான பயணங்களுக்கான திறவுகோலாக சந்திரயான் 3 வெற்றியை பார்க்கின்றன.

நிலவில் தண்ணீர் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

1960களின் முற்பகுதியில் அதாவது அமெரிக்காவின் முதல் அப்பல்லோ தரையிறங்குவதற்கு முன்பு,  நிலவில் தண்ணீர் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினர். ஆனால், 1960-களின் பிற்பகுதியிலும் 1970-களின் தொடக்கத்திலும்,  அப்பல்லோ குழுவினர் பகுப்பாய்வுக்காக கொண்டு வந்த மாதிரிகளை பரிசோதித்தபோது அது உலர்ந்ததாகவே தோன்றியது. 2008 ஆம் ஆண்டில் பிரவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதிய தொழில்நுட்பத்துடன், அந்த நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட மாதிரிகளை மறுபரிசீலனை செய்தனர். அப்போது, எரிமலை துண்டுகளில் ஹைட்ரஜன் இருப்பதை கண்டறிந்தனர். 2009 ஆம் ஆண்டில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சந்திரயான்-1 தொடர்பான ஆய்வில் இருந்த நாசா சந்திரனின் மேற்பரப்பில் நீர் இருந்தை கண்டறிந்தது. அதே ஆண்டு நாசா மேற்கொண்ட மற்றொரு ஆய்விலும் நிலவின் தரைப்பகுதிக்கு அடியில் நீர் இருப்பதை உறுதி செய்தது. முன்னதாக, நிலவு தொடர்பாக ஆராய 1998ம் ஆண்டு அமெரிக்கா தனது மூன்றாவது திட்டத்தை செயல்படுத்தியது. அதன் மூலம்,  நிலவின் தென்ருதுவத்தில் நிழல் படிந்த பள்ளங்களில் உறைந்த பனி வடிவில் அதிகப்படியான தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்தது.

சந்திரனில் உள்ள நீர் ஏன் முக்கியமானது?

நிலவில் உள்ள நீராதாரங்களை ஆராய ஆராய்ச்சியாளர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.  அவை நிலவில் உள்ள எரிமலைகள், வால்மீன்கள், நிலவில் இருந்து பூமிக்கு வந்த எரிகற்கள் மற்றும் கடல்களின் தோற்றம் ஆகியவை தொடர்பான பல்வேறு தரவுகள் கிடைக்கபெறும் என்பதே இதற்கு காரணமாகும்.

நீர் பனி போதுமான அளவில் இருந்தால் அது நிலவை ஆராய்ச்சி செய்ய செல்வோருக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கலாம் மற்றும் ஆராய்ச்சிக்கான சாதனங்களை குளிரூட்டவும் உதவும். அதோடு நிலவில் சுரங்கம் அமைக்கவும், செவ்வாய் கிரகத்திற்கான பயணம் செய்யும்போதும் தேவைப்படும் எரிபொருட்களுக்கான ஹைட்ரஜனை உருவாக்கவும், சுவாசிப்பதற்கான ஆக்சிஜனை உருவாக்கவதற்காகவும் இந்த பனிப்பாறைகள் உடைக்கப்படலாம்.   1967ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகளின் விண்வெளி ஒப்பந்தத்தின்படி,  எந்தவொரு தனிநாடும் நிலவின் உரிமையை கோரமுடியாது. அங்கு வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. இந்த சூழலில் சந்திரயான் 3 திட்டம் வெற்றிகரமாக செய்து முடித்து இருப்பதன் மூலம், விண்வெளி சார்ந்த வணிகத்தில் இந்தியா எதிர்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும். 

தென் துருவத்தை ஆராய்வதில் உள்ள சிரமம் என்ன?

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் முந்தைய முயற்சிகள் தோல்வியை சந்தித்துள்ளன. அதில் இந்தியாவின் சந்திரயான் 2 மற்றும் ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் ஆகியவையும் அடங்கும். காரணம் இந்த தென் துருவமானது முந்தைய பயணங்களால் குறிவைக்கப்பட்ட பூமத்திய ரேகைப் பகுதியிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. அதோடு, அங்கு பள்ளங்கள் மற்றும் ஆழமான அகழிகள் நிறைந்துள்ளன. நிலவின் மற்ற பகுதிகளில் உலக நாடுகள் லேண்டரை தரையிறக்கிய தரவுகள் உள்ளன. ஆனால், நிலவின் தென்துருவ பயணத்திற்கு திட்டமிட எந்தவித தரவுகளும் இல்லை. எப்போதும் நிழல் சூந்த பகுதியாக இருப்பதால், இது நிலவின் கருப்பு பகுதியாக என அழைக்கப்படுகிறது. இதனால்,  தரையிறக்கத்தின் போது அங்குள்ள பாறைகள் மீது லேண்டர் மோதி பள்ளங்களில் கவிழலாம். இப்படிப்பட்ட பல்வேறு ஆபத்துகளையும் தாண்டித்தான் இந்திய தனது விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கியுள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு அமெரிக்காவும் சீனாவும் நிலவின் தென் துருவத்திற்கு பயணங்களைத் திட்டமிட்டுள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget