மேலும் அறிய

EWS இடஒதுக்கீடு பயனாளிகளை அடையாளம் காண எந்தவித கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை...பல்டி அடித்த மத்திய அரசு...!

EWS இடஒதுக்கீடு பயனாளிகள் குறித்து நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சஜிதா அகமது கேள்வி எழுப்பியிருந்தார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்டவர்களுக்கான (EWS) இடஒதுக்கீட்டின் கீழ் வரும் பயனாளிகளை கண்டறிய நிதி ஆயோக் தரவுகளை நம்பி இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால், நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது மத்திய அரசு வேறு விதமான பதிலை அளித்துள்ளது.

EWS இடஒதுக்கீடு பயனாளிகள் குறித்து நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சஜிதா அகமது கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. 

அதாவது, பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு பயனாளிகளை கண்டறிய கண்கெடுப்பு எதவும் நடத்தப்படவில்லை என்றும் அதேபோல பயனாளிகளை கண்டறிய கணக்கெடுப்பு நடத்தும் திட்டம் எதவும் இல்லை என்றும் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, EWS இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, வாய்மொழியாக விளக்கம் அளித்த மத்திய அரசு, "EWS இடஒதுக்கீட்டுக்கு கீழ் வரும் பொது பிரிவினரின் 18.2 சதவிகிதம் பேரை அடையாளம் காண நிதி ஆயோக்கின் பல பரிமாண வறுமைக் குறியீட்டில் தொகுக்கப்பட்ட தரவுகளை நம்பி இருக்கிறோம்" என குறிப்பிட்டது.

ஆனால், நீதிபதி தினேஷ் மகேஷ்வரி எழுதிய வழக்கின் தீர்ப்பில், "பொருளாதாரத்தில் பின்தங்கியவர் என்ற வகைப்படுத்தல் சம்பந்தப்பட்ட தரவுகள் மற்றும் காரணிகள் அடிப்படையிலேயே அமையும். 

அது யாருக்கு எல்லாம் பொருந்தும் என்பது தேவைப்படும்போது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.  இந்த விவகாரத்தில் அரசின் அதிகாரத்தை விரிவடைய செய்யும் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை கேள்வி கேட்க முடியாது" என குறிப்பிட்டது.

EWS இடஒதுக்கீட்டிற்கான வருமான அளவுகோலை கேள்விக்கு உட்படுத்திய உச்ச நீதிமன்றம், "குடும்ப ஆண்டு வருமானத்திற்கான 8 லட்சம் ரூபாய் அளவுகோலை நிர்ணயிப்பதற்கு என்ன தரவுகள் பரிசீலிக்கப்பட்டன. எந்த அடிப்படையில் 10 சதவிகிதம் பேருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது" 

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரீமிலேயரில் வருமான வரம்பை மத்திய அரசு நீக்கிவிட்டதா என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், "EWS பிரிவின் கீழ் தகுதி பெற்றவர்கள் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலையில் இல்லை என்பதால் இது, நியாயமற்றதாக இருக்கும்"

கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் என தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த இட ஒதுக்கீடு பாகுபாடற்றவை என்றும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்றவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget