மேலும் அறிய

சஞ்சய் ராவத் கைது... குறி வைக்கப்படுகிறாரா உத்தவ் தாக்கரே?

இருமுறை சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறை இயக்குனரக அலுவலர்கள் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.

பணமோசடி வழக்கில் விசாரணைக்கு இருமுறை சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறை இயக்குனரக அலுவலர்கள் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை மேற்கோள் காட்டி இருமுறை சம்மன் அனுப்பியும், சஞ்சய் ராவத் ஆஜராகவில்லை.

இதையடுத்து, ஜூலை 27 அன்று அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. காலை 7 மணியளவில், சிஐஎஸ்எஃப் அலுவலர்கள் அடங்கிய புலனாய்வு குழுவினர் மும்பையின் கிழக்குப் புறநகர்ப் பகுதியில் உள்ள பாண்டப்பில் உள்ள ராவத்தின் வீட்டிற்குச் சென்று விசாரணையை தொடங்கினர். 

மும்பை குடியிருப்பு வளாகத்தின் மறுசீரமைப்பு பணிகள், அது தொடர்பான ராவத்தின் மனைவி மற்றும் நெருங்கிய உதவியாளர்களின் பண பரிவர்த்தனை குறித்து சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள விரும்புகிறது. உத்தவ் தாக்கரேவின் ஆதரவாளரான ராவத், எந்த தவறும் செய்யவில்லை என்றும், அரசியல் பழிவாங்கல் காரணமாக தான் குறிவைக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

“தவறான நடவடிக்கை, பொய்யான ஆதாரம். சிவசேனாவை விட்டு விலக மாட்டேன். நான் இறந்தாலும் சரணடைய மாட்டேன். எனக்கும் எந்த ஊழலுக்கும் சம்பந்தம் இல்லை என சிவசேனா தலைவர் பாலாசாஹேப் தாக்கரே மீது சத்தியம் செய்து கூறுகிறேன். பாலாசாஹேப் எங்களுக்கு போராட கற்றுக்கொடுத்தார். சிவசேனாவுக்காக நான் தொடர்ந்து போராடுவேன்" என விசாரணை முகமை அலுவலர்கள் அவரது வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்திலேயே ராவத் ட்வீட் செய்தார்.

சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ராவத்திற்கு பதிலடி கொடுத்த பாஜக, "அவர் நிரபராதி என்றால் அவர் ஏன் அமலாக்கத்துறை இயக்குநரகத்திற்கு பயப்படுகிறார்? செய்தியாளர் சந்திப்பு நடத்த அவருக்கு எல்லா நேரமும் உள்ளது. ஆனால் விசாரணைக்கு விசாரணை முகமை அலுவலகத்திற்குச் செல்ல நேரமில்லை" என சாடியுள்ளது.

ஏராளமான சிவசேனா தொண்டர்கள் ராவுத்தின் இல்லத்திற்கு வெளியே கூடி, அமலாக்கத்துறை மற்றும் பாஜகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மாநிலங்களவை எம்பி ராவத்திடம் ஜூலை 1ஆம் தேதி சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, பணமோசடி தடுப்புச் சட்ட குற்றப் பிரிவுகளின் கீழ் அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம், அமலாக்கத்துறை இயக்குனரகம் தனது விசாரணையின் ஒரு பகுதியாக ராவத்தின் மனைவி வர்ஷா ராவத் மற்றும் அவரது உதவியாளர்கள் இருவரின் 11.15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்தது.

பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் வர்ஷா ரவுத் தாதரில் உள்ள ஒரு பிளாட், அலிபாக்கில் உள்ள கிஹிம் கடற்கரையில் வர்ஷா ரவுத் மற்றும் சஞ்சய் ராவத்தின் நெருங்கிய நண்பர் சுஜித் பட்கரின் மனைவி ஸ்வப்னா பட்கர் ஆகியோர் இணைந்து வைத்திருக்கும் எட்டு மனையும் அடங்கும். 1,034 கோடி ரூபாய் நிலம் மோசடி தொடர்பான விசாரணையில் பிரவின் சிராவத் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
Guru Purnima 2025 Wishes: குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
குடும்பத்துடன் முற்றுகையா? வாக்குறுதி என்னாச்சு? அண்ணாமலை பல்கலை. ஊழிர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை! 
குடும்பத்துடன் முற்றுகையா? வாக்குறுதி என்னாச்சு? அண்ணாமலை பல்கலை. ஊழிர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை! 
Embed widget