மேலும் அறிய

Election Commission : தேர்தல் ஆணையர்கள் நியமனம்: பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் நடந்தது என்ன? காங்கிரஸ் பகீர்..

தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வதற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் இருவரை தேர்வு செய்துள்ளதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. காலியாக இருந்த 2 தேர்தல் ஆணையர்கள் பதவியை தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலை கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பங்கேற்றனர்.  

பரபரப்பை கிளப்பிய தேர்தல் ஆணையர்கள் விவகாரம்:

கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" என தகவல் வெளியிட்டார். இதுதொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படாத நிலையில், இருவர் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளார் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி.

தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்வதற்கான குழுவில் இருந்து இந்திய தலைமை நீதிபதி நீக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "இந்தக் கமிட்டியில் இந்திய தலைமை நீதிபதி இருந்திருக்க வேண்டும். கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம், கூட்டத்தை சம்பிரதாயமாக குறைத்து விட்டது. குழுவில் அரசுக்கு பெரும்பான்மையாக உள்ளது. அவர்கள் நினைத்தது நடக்கும்.

தேர்தல் ஆணையர்களை இறுதி செய்வதற்கு பெயர் பட்டியலைக் கேட்டிருந்தேன். ஆனால், எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் நள்ளிரவில் டெல்லி சென்றடைந்தேன். கூட்டம் இன்று மதியம். எனக்கு 212 பெயர்கள் வழங்கப்பட்டன. ஒரு நாளில் இவ்வளவு விண்ணப்பதாரர்களை ஒருவர் எப்படி பரிசோதிக்க முடியும்? சந்திப்புக்கு பத்து நிமிடங்களுக்கு முன், எனக்கு 6 பெயர்கள் அடங்கிய பட்டியல் கொடுக்கப்பட்டது.

காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு:

இருவரை ஏற்கனவே தேர்வு செய்துவிட்டனர் என்பதே உண்மை. இருப்பினும், தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் அமைப்பை வலுப்படுத்தும் வகையில் நான் உரிய முறையில் அதில் தலையிட முயற்சித்தேன். அதனால்தான், நான் டெல்லிக்கு வருவதற்கு முன், தேர்தல் ஆணையர்களை இறுதி செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களின் பட்டியலைத் கேட்டேன். 

212 பேர் கொண்ட பெயர் பட்டியலை அவர்கள் என்னிடம் கொடுத்தனர். ஒரே இரவில், 212 பேரின் பெயர்களை ஆய்வு செய்து அவர்களில் மிகவும் திறமையான நபரைக் கண்டுபிடிப்பது மனிதர்களால் சாத்தியமா என்பதை இப்போது நீங்கள் கற்பனை செய்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் எனது எதிர்ப்பை பதிவு செய்தேன்" என்றார்.

தேர்தல் ஆணையராக பதவி வகித்த அருண் கோயல் ராஜினாமா செய்தது குறித்து கேள்வி எழுப்பிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "கோயல் நியமிக்கப்பட்ட போது, ​மின்னல் வேகத்தில் நியமனம் நடந்ததாக ​உச்ச நீதிமன்றம் கூறியது. மின்னல் வேகத்தில் வந்து டிஜிட்டல் வேகத்தில் அவர் ராஜினாமா செய்துவிட்டார்" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget