மேலும் அறிய

தெலங்கானா உள்பட 5 மாநில தேர்தல் தேதி இன்று அறிவிப்பு.. 12 மணிக்கு வெளியிடும் தேர்தல் ஆணையம்..!

தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நண்பகல் 12 மணிக்கு 5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலங்கானா உள்பட 5 மாநில தேர்தல் தேதியை இன்று பகல் 12 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. அதன்படி, தெலங்கானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட இருக்கிறது. 

தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நண்பகல் 12 மணிக்கு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும். இதன்பிறகு, 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொள்ளும். 


தெலங்கானா உள்பட 5 மாநில தேர்தல் தேதி இன்று அறிவிப்பு.. 12 மணிக்கு வெளியிடும் தேர்தல் ஆணையம்..!

கடந்த வாரம் மாநில தேர்தல் பார்வையாளர்களை வரவழைத்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை ஆயுட்காலம் வருகின்ற நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் முடிவடைகிறது. 

2018 ஆம் ஆண்டில், இந்த ஐந்து மாநிலங்களில் நான்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது, அதே நேரத்தில் சத்தீஸ்கரில் நக்சல் பிரச்சனையைக் கருத்தில் கொண்டு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. 

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. மத்தியப் பிரதேசத்தில் பாஜக கட்சி ஆட்சி செய்யும் நிலையில், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அடுத்த மாதத்தில் இருந்து டிசம்பர் மாதத்திற்குள் 5 மாநில சட்டபேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு 5 மாநில தேர்தல் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. 

25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றனர். இது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தை எதிர்கொள்வதற்காக எதிர்க்கட்சிகள் அமைத்த முக்கிய வியூகமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் தங்கள் பிரதமர் வேட்பாளர் மற்றும் தொகுதி பங்கீடு குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும், சட்டசபை தேர்தலில் பெரும்பாலான கட்சிகள் தனித்து போட்டியிடுவதால், நாடாளுமன்ற தேர்தலுக்கு மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என தெரிகிறது.

5 மாநிலம் ஒரு பார்வை: 

மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகள் உள்ளன, 2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களைக் கைப்பற்றியது, அதே நேரத்தில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி வெறும் 109 இடங்களைப் பெற்றது. இருப்பினும், காங்கிரஸால் அதன் ஆட்சி மற்றும் அதிகாரத்தை அதிக நாட்கள் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. காங்கிரஸை சேர்ந்த முதலமைச்சர் கமல்நாத், 15 மாதங்களுக்குப் பிறகு ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக பொறுப்பேற்று ஆட்சி செய்து வருகிறார். 

மிசோரம் சட்டப் பேரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. வடகிழக்கு மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி ஆட்சி செய்கிறது.

தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் சட்டப் பேரவைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் தனித்தனி நாட்களில் முடிவடைகிறது.

தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) ஆட்சி செய்து வரும் நிலையில், மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget