மேலும் அறிய

Crime: ஸ்விகி, சோமோட்டோ ஊழியர் போல கெட்டப்; போதைப்பொருளை டோர் டெலிவரி செய்த நபர் கைது..!

ஸ்விகி, சோமேட்டோ ஊழியர் போல் மாறுவேடத்தில் போதைப்பொருளை விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திரா மாநிலத்தில் ஸ்விகி, சோமேட்டோ ஊழியர் போல் மாறுவேடத்தில போதைப்பொருளை விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் அவர் அணிந்திருந்த சோமேட்டோ, ஸ்விகி நிறுவனத்தின் ஆடைகள், வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன.

போதைப்பொருட்கள்:

இரண்டு பேர் இதில் ஈடுபட்டுள்ளதாகவும், ஒருவர் தலைமறைவாக உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக  பெங்களூரு காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி " ஒயிட்ஃபீல்ட் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் தனிப்படையினர் நடத்திய அதிரடி சோதனையை தொடர்ந்து, பீகாரைச் சேர்ந்த குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் Zomato மற்றும் Swiggy சட்டை அணிந்திருந்தார், மேலும் அவர் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை வைத்திருந்தது கண்டறியப்பட்டது.


Crime: ஸ்விகி, சோமோட்டோ ஊழியர் போல கெட்டப்; போதைப்பொருளை டோர் டெலிவரி செய்த நபர் கைது..!

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் உணவு விநியோக நிறுவனங்களிடம் டெலிவரி ஏஜென்டாக முன்பு பணிபுரிந்தார். டெலிவரி வேலையை விட்ட இவர், மாறுவேடத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர்மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பீகாரைச் சேர்ந்த ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருவதாக” அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவு டெலிவரி போல் நடிப்பு:

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உணவு விநியோக முகவர்கள் போல் நடித்து, கொரோனா காலத்தில் இருந்தே போதைப்பொருளை விற்பனை செய்து வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நபர் கைது செய்யப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. 14 வினாடிகள் கொண்ட வீடியோவில், அந்த நபரிடம் தனது ஸ்விகி பையில் போதைப் பொருட்களை வைத்திருப்பது தெரியவந்தது. உணவு டெலிவரி நிறுவனங்களை போல் போதைப் பொருட்களை விற்பனை செய்யும் சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் போதைப்பொருட்களுக்கு எதிராக அந்தந்த மாநில காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தமிழகத்தின் சென்னையில்  போதைப் பொருள் விற்பனையை தடுக்க ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படைகள் கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடத்திய சோதனையில் போதைப் பொருள் விற்பனை செய்ததாக 14 வழக்குகள் பதியப்பட்டு, 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா, 915 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


மேலும் படிக்க

Kerala: கேரளா: பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதா நிறைவேற்றம்..!

Malala: ”எப்பவும் பெத்தவங்க ஆசைப்படி நடந்துக்கணும்னு இல்ல, மலாலா மாதிரி இருங்க..” : உயர்நீதிமன்றம் அறிவுரை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget