மேலும் அறிய

Dowry Deaths: நாட்டில் நாள் ஒன்றுக்கு இத்தனை வரதட்சணை மரணமா? தமிழ்நாட்டில் இவ்வளவா? மத்திய அரசு அதிர்ச்சி தகவல்..!

வரதட்சணையால் நிகழ்ந்த மரணம் குறித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்பட்டது.

நாட்டில் வரதட்சணை கொடுமையால் பல் பெண்கள் தங்கள் வாழ்க்கையினை இழந்துள்ளனர். வரதட்சணை கேட்டு பெண்களை கொலை செய்வது அல்லது அவர்களை கொடுமைபடுத்தி தற்கொலை செய்ய வைப்பது இன்று வரை தொடர்ந்து வருகிறது.

மத்திய, மாநில அரசுகள், அரசு சாரா அமைப்புகளின் தொடர் நடவடிக்கையின் காரணமாக அது தற்போது குறைந்துள்ளது. கடந்த 1961ஆம் ஆண்டு, மே 1ஆம் தேதி, வரதட்சணை தடைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் வரதட்சணை பெறுவது அல்லது கொடுப்பது ஒரு வன்செயல் குற்றமாகக் கருதப்படுகிறது. 

வரதட்சணை தடைச் சட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். ஒரு நபர் வரதட்சணை கொடுத்தாலோ அல்லது வாங்கினாலோ அல்லது கொடுப்பதற்கோ வாங்குவதற்கோ ஊக்கமளித்தால், அவர் ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனையும், பதினைந்தாயிரம் ரூபாய்க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்படும்.

ஒப்பிட்டளவில் அது தற்போது குறைந்திருந்தாலும் அது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், வரதட்சணையால் நிகழ்ந்த மரணம் குறித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்பட்டது.

2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை, நாட்டில் நாள் ஒன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்ததாக மத்திய அரசு பதில் அளித்துள்ளனது.

காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கே.சி. வேணுகோபால் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, 2017 முதல் 2021 வரை நாட்டில் 35,493 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன.

2017 ஆம் ஆண்டில், 7,466 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன. 2018 இல் 7,167 மரணங்களும் 2019 இல் 7,141 மரணங்களும் 2020 இல் 6,966 மரணங்களும் மற்றும் 2021 இல் 6,753 மரணங்கள் நிகழ்ந்ததாக எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த ஐந்து ஆண்டுகளில் உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 11,874 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன. அதாவது, அங்கு நாள் ஒன்றுக்கு ஆறு வரதட்சணை மரணங்கள் நிகழ்கிறது. 

2017 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில், பீகாரில் 5,354, மத்தியப் பிரதேசத்தில் 2,859, மேற்கு வங்கத்தில் 2,389 மற்றும் ராஜஸ்தானில் 2,244 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 

தமிழ்நாட்டை பொறுத்தவரை, 2017ஆம் ஆண்டு 48 வரதட்சணை மரணங்களும் 2018ஆம் ஆண்டு 55 மரணங்களும் நிகழ்ந்துள்ளன.

2019ஆம் ஆண்டு, 28 பேரும் 2020ஆம் ஆண்டு, 40 பேரும் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்தனர். 2021ஆம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 27 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வாஷிங்டன் டிசி மேயர் தேர்தலில் தேனி பெண் சாதனை! முதல் தெற்காசிய பெண் வெற்றி பெறுவாரா?
வாஷிங்டன் டிசி மேயர் தேர்தலில் தேனி பெண் சாதனை! முதல் தெற்காசிய பெண் வெற்றி பெறுவாரா?
ஐய்யோ, 6 லட்சம் பீப்பாயாச்சே.?! இந்தியா வர இருந்த கப்பல் சீனாவுக்கு திருப்பப்பட்டதா.? மத்திய அரசு விளக்கம்
ஐய்யோ, 6 லட்சம் பீப்பாயாச்சே.?! இந்தியா வர இருந்த கப்பல் சீனாவுக்கு திருப்பப்பட்டதா.? மத்திய அரசு விளக்கம்
பெங்களூரு-திருவனந்தபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு: தமிழக பயணிகளுக்கு கொண்டாட்டம்! முன்பதிவு விவரம் இதோ!
பெங்களூரு-திருவனந்தபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு: தமிழக பயணிகளுக்கு கொண்டாட்டம்! முன்பதிவு விவரம் இதோ!
Top 10 News Headlines: தங்கம் விலை உயர்வு, சென்னை விரையும் அண்ணாமலை, ஏப்.16-ல் நாடாளுமன்றம், ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
தங்கம் விலை உயர்வு, சென்னை விரையும் அண்ணாமலை, ஏப்.16-ல் நாடாளுமன்றம், ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்ய 2 நாள்தான் இருக்கு! நாளுக்கு நாள் அனல் பறக்கும் தமிழ்நாடு!
TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்ய 2 நாள்தான் இருக்கு! நாளுக்கு நாள் அனல் பறக்கும் தமிழ்நாடு!
Tirumavalavan: “நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - திருமாவளவன் அந்தர் பல்டி - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?
“நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - திருமாவளவன் அந்தர் பல்டி - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
கருணாநிதி வீட்டுச் சிறையில் இருந்தாரா?: திமுக மீது பாயும் நடவடிக்கை? - எடப்பாடி பழனிசாமி அதிரடி
கருணாநிதி வீட்டுச் சிறையில் இருந்தாரா?: திமுக மீது பாயும் நடவடிக்கை? - எடப்பாடி பழனிசாமி அதிரடி
IPL 2026 CSK vs RCB: ஆர்சிபி - சிஎஸ்கே போட்டி! பெங்களூரில் மெட்ரோ சேவை நள்ளிரவு வரை நீட்டிப்பு!
IPL 2026 CSK vs RCB: ஆர்சிபி - சிஎஸ்கே போட்டி! பெங்களூரில் மெட்ரோ சேவை நள்ளிரவு வரை நீட்டிப்பு!
Sameer Rizvi: பொடியன் இல்ல ரிஸ்வி..! டெல்லி அணியின் கில்லி! மும்பையை முடிச்சுவிட்ட 22 வயது இளைஞன்!
Sameer Rizvi: பொடியன் இல்ல ரிஸ்வி..! டெல்லி அணியின் கில்லி! மும்பையை முடிச்சுவிட்ட 22 வயது இளைஞன்!
பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்
பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
Embed widget