மேலும் அறிய

Dowry Deaths: நாட்டில் நாள் ஒன்றுக்கு இத்தனை வரதட்சணை மரணமா? தமிழ்நாட்டில் இவ்வளவா? மத்திய அரசு அதிர்ச்சி தகவல்..!

வரதட்சணையால் நிகழ்ந்த மரணம் குறித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்பட்டது.

நாட்டில் வரதட்சணை கொடுமையால் பல் பெண்கள் தங்கள் வாழ்க்கையினை இழந்துள்ளனர். வரதட்சணை கேட்டு பெண்களை கொலை செய்வது அல்லது அவர்களை கொடுமைபடுத்தி தற்கொலை செய்ய வைப்பது இன்று வரை தொடர்ந்து வருகிறது.

மத்திய, மாநில அரசுகள், அரசு சாரா அமைப்புகளின் தொடர் நடவடிக்கையின் காரணமாக அது தற்போது குறைந்துள்ளது. கடந்த 1961ஆம் ஆண்டு, மே 1ஆம் தேதி, வரதட்சணை தடைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் வரதட்சணை பெறுவது அல்லது கொடுப்பது ஒரு வன்செயல் குற்றமாகக் கருதப்படுகிறது. 

வரதட்சணை தடைச் சட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். ஒரு நபர் வரதட்சணை கொடுத்தாலோ அல்லது வாங்கினாலோ அல்லது கொடுப்பதற்கோ வாங்குவதற்கோ ஊக்கமளித்தால், அவர் ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனையும், பதினைந்தாயிரம் ரூபாய்க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்படும்.

ஒப்பிட்டளவில் அது தற்போது குறைந்திருந்தாலும் அது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், வரதட்சணையால் நிகழ்ந்த மரணம் குறித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்பட்டது.

2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை, நாட்டில் நாள் ஒன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்ததாக மத்திய அரசு பதில் அளித்துள்ளனது.

காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கே.சி. வேணுகோபால் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, 2017 முதல் 2021 வரை நாட்டில் 35,493 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன.

2017 ஆம் ஆண்டில், 7,466 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன. 2018 இல் 7,167 மரணங்களும் 2019 இல் 7,141 மரணங்களும் 2020 இல் 6,966 மரணங்களும் மற்றும் 2021 இல் 6,753 மரணங்கள் நிகழ்ந்ததாக எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த ஐந்து ஆண்டுகளில் உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 11,874 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன. அதாவது, அங்கு நாள் ஒன்றுக்கு ஆறு வரதட்சணை மரணங்கள் நிகழ்கிறது. 

2017 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில், பீகாரில் 5,354, மத்தியப் பிரதேசத்தில் 2,859, மேற்கு வங்கத்தில் 2,389 மற்றும் ராஜஸ்தானில் 2,244 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 

தமிழ்நாட்டை பொறுத்தவரை, 2017ஆம் ஆண்டு 48 வரதட்சணை மரணங்களும் 2018ஆம் ஆண்டு 55 மரணங்களும் நிகழ்ந்துள்ளன.

2019ஆம் ஆண்டு, 28 பேரும் 2020ஆம் ஆண்டு, 40 பேரும் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்தனர். 2021ஆம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 27 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget