Viral Video: "உங்க கூடவே இருப்பேன்” : உரிமையாளருடன் செல்லும் செல்ல நாய்.. எதற்கு தெரியுமா? கொண்டாடும் நெட்டிசன்கள் (வீடியோ)
தன் நண்பரும் உரிமையாளருமான உணவு டெலிவரி செய்யும் நபருடன் அவரது செல்ல நாய் பீட்சா டெலிவரி செய்ய செல்லும் காட்சி நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளது.

வாய் பேச முடியாவிட்டாலும் தங்கள் செய்கைகளால் அன்பை வெளிப்படுத்த விலங்குகள் என்றும் தவறுவதில்லை.
அந்த வகையில் நாய் ஒன்று தன் உரிமையாளரின் மீதான அன்பை வெளிப்படுத்தும் வீடியோ நெட்டிசன்களை உணர்ச்சிப் பெருக்கில் தள்ளியுள்ளது.
முன்னதாக இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில் தன் நண்பரும் உரிமையாளருமான உணவு டெலிவரி செய்யும் நபருடன் அவரது செல்ல நாய் பீட்சா டெலிவரி செய்ய செல்லும் காட்சி நெட்டிசன்களை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
இந்த வீடியோ இணையத்தில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும் 1.5 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்களையும் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
"Thank you for your Service Axel"#ChinarCorps salutes the valour & sacrifice of Army Dog No 74B7 AXEL (Aslt Canine) who laid down his life in the line of duty in Op Wanigambala, #Baramulla on 30 Jul 22.#Kashmir@adgpi@NorthernComd_IA https://t.co/X9KRKK30b0 pic.twitter.com/H3dazqVDpP
— Chinar Corps🍁 - Indian Army (@ChinarcorpsIA) July 30, 2022
முன்னதாக மும்பை காவல்துறை பாம் ஸ்குவாடைச் சேர்ந்த மோப்ப நாய் ராணா உயிரிழந்ததற்கு பயிற்றுனர்கள், காவலர்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தது காண்போரை நெகிழவைத்தது.
ராணாவுக்கு வயது 7. லாப்ரடார் இனத்தைச் சேர்ந்த ராணாவின் மோப்ப சக்தி அபாரம் என்கின்றனர் அதனை பராமரித்த படையினர். 2016ல் பணியில் சேர்ந்த ராணா தனது பணிக் காலத்தில் வெகு சிறப்பாக செயல்பட்டது. கடந்த ஜூலை 22 ஆம் தேதி ராணாவுக்கு உடல்நலன் குன்றியது. வயிறு உபாதைகள் காரணமாக ராணா மும்பை பாய் சக்கர்பாய் தீன்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்றுவந்த ராணா 17ஆம் தேதி காலை 10.35 மணியளவில் உயிரைத் துறந்தது.
இறுதி மரியாதை:
ராணாவுக்கு முறையாக இறுதி மரியாதை செய்யப்பட்டது. ஒரு காவல் அதிகாரி உயிரிழந்தால் எந்த மாதிரியான கார்ட் ஆஃப் ஹானர் பின்பற்றப்படுமோ அதே அளவிலான மரியாதை ராணாவுக்கும் வழங்கப்பட்டது. ராணாவுக்கு மும்பை காவல்துறை (நிர்வாகம்) இணை ஆணையர், வெடிகுண்டு நிபுணர் குழு மூத்த ஆய்வாளர் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
Chinese Spy Ship: இலங்கையில் சீன ‘உளவு’ கப்பல்.. இந்தியாவின் ப்ளான் என்ன? நிலைமையைச் சொன்ன அமைச்சர் ஜெய்சங்கர்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

