மேலும் அறிய

Delhi CM Kejriwal: ”அமலாக்கத்துறை விசாரணைக்கு நான் ரெடி; ஆனா ஒரு கண்டிஷன்” - அர்விந்த் கெஜ்ரிவால் அதிரடி

Delhi CM Kejriwal: மார்ச் 12ம் தேதிக்குப் பிறகு அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக தயார் என, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Delhi CM Kejriwal: அமலாக்கத்துறை விசாரணைக்கு காணொலி வாயிலாக ஆஜராக தயார் என, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை விசாரணைக்கு தயார் - கெஜ்ரிவால்:

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை இயக்குநரகம் அனுப்பிய சம்மனுக்கு பதிலளிக்க தயாராக இருப்பதாகவும், மார்ச் 12 ஆம் தேதிக்குப் பிறகு தேதி கேட்டுள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி விசாரணையில்,  கடந்த வாரம் அமலாக்கத்துறை அனுப்பிய எட்டாவது சம்மனுக்கு ஆம் ஆத்மி தரப்பில் தற்போது பதில் வந்துள்ளது.

”அமலாக்கத்துறைக்கு ஒரு கண்டிஷன்”

இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அமலாக்க இயக்குனரகத்திற்கு பதில் அனுப்பியுள்ளார். சம்மன் சட்டவிரோதமானது என்றும் ஆனால் அதற்கு பதிலளிக்க தயாராக இருக்கிறார்.  மார்ச் 12ம் தேதிக்கு பிறகு விசாரணைக்கு ஆஜராக நேரம் ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளார். காணொலி வாயிலாக மட்டுமே விசாரணைக்கு ஆஜராவேன் என அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாகவும்” குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை ஏழு சம்மன்களைத் தவிர்த்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவரான கெஜ்ரிவால், இன்று நேரில் ஆஜராகும்படி பிப்ரவரி 27 ஆம் தேதி எட்டாவது முறையாக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்த நிலையில், இந்த விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.  முன்னதாக, நீதிமன்றம் உத்தரவிட்டால் அமலாக்கத்துறை முன் ஆஜராவேன் என்று அவர் கூறியிருந்தார். 

நிதிமன்றத்தில் வழக்கு:

டெல்லி முதலமைச்சர் விசாரணைக்கான சம்மன்களை தொடர்ந்து புறக்கணித்து வந்ததால்,  அமலாக்கத்துறை தலைநகர் டெல்லியில் உள்ள நகர நீதிமன்றத்தை அணுகியது.  இந்த விவகாரத்தில் விசாரணை நிறுவனமே நீதிமன்றத்தை நாடியதாகவும், அதன் உத்தரவுக்காக அவர்கள் காத்திருக்க வேண்டும் என்றும் கெஜ்ரிவால் கூறினார். மத்திய அரசும், அமலாக்கத்துறை அமைப்பும் நீதிமன்றத்தை நம்பவில்லையா எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.  இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தும், மத்திய அமலாக்கத்துறை தனக்கு  தொடர்ந்து சம்மன் அனுப்பி வருவதாகவும் கெஜ்ரிவால் சாடுகிறார்.  இந்த சம்மன்கள் "சட்டவிரோதமானது" என்றும், எதிர்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு கருவி என்றும் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
மஹிந்திரா கார்களுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் வரை சலுகை! முந்துங்கள்!..
மஹிந்திரா கார்களுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் வரை சலுகை! முந்துங்கள்!..
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
Embed widget