மேலும் அறிய

Arvind Kejriwal: சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜரான அரவிந்த் கெஜ்ரிவால்..! ஆம் ஆத்மி போராட்டம்..! டெல்லியில் பதற்றம்..!

புதிய மதுபான கொள்கை வழக்கில் டெல்லி  மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,  சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார். 

புதிய மதுபான கொள்கை வழக்கில் டெல்லி  மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,  சிபிஐ அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார். 

முன்னதாக இந்த வழக்கில் ஆஜராக கூறி இரு தினங்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இன்றைய தினம் அவர் ஆஜராவதற்கு முன்பு ராஜ்காட்டில் உள்ள  மகாத்மா காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தினார். இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தப்படுவதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். 

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், சில தேச விரோத சக்திகள் இந்தியா வளர்ச்சியடைவதை விரும்பவில்லை. நாடு தொடர்ந்து முன்னேறும் என்பதை இந்த சக்திகளுக்கு நான் சொல்ல விரும்புகிறேன் என கூறினார். மேலும் மதுபான கொள்கை தொடர்பாக எங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில், விசாரணை அமைப்புகள் பொய் கூறுகிறது. பாஜக உத்தரவுப்படி சிபிஐ செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். 

நான் ஊழல்வாதி என்று நீங்கள் (பாஜக) சொல்கிறீர்கள். நான் வருமான வரித்துறையில் கமிஷனராக இருந்த போது வேண்டுமானால் கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்கலாம். அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் செய்தார் என்று சொன்னால் இந்த உலகில் நேர்மையானவர்கள் யாரும் இல்லை என்பது போன்றது எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ அலுவலகம் செல்வதற்கு முன்பு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அவரது இல்லத்திற்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

புதிய மதுபான கொள்கை வழக்கு 

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இதனிடையே கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் மாநில அரசு  புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. இதனைத் தொடர்ந்து டெல்லி பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. 

இதற்கு பல தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு எழுந்த நிலையில்,  2021ஆம் ஆண்டு ஜூலையில் புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது. ஆனால் மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம்சாட்டினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துணைநிலை ஆளுநரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, முன்னாள் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வழக்கு பதிவு செய்தது. 

பின்னர் கடந்தாண்டு ஆகஸ்டில்  மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள்  சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் சிபிஐ அதிகாரிகள்  மணிஷ் சிசோடியாவை  கைது செய்தனர். அவர் தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
HOLIDAY: 2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
Embed widget