மேலும் அறிய

எல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்கள்.. நடந்தது என்ன? - அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

அருணாச்சால பிரதேசத்தில் தவாங் பகுதியில் சீன படை ஊடுருவ முயற்சித்ததால் இந்திய மற்றும் சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்துள்ளார்.

டிசம்பர் 9ஆம் தேதி அருணாச்சால பிரதேசத்தில் தவாங் பகுதியில் சீன படை ஊடுருவ முயற்ச்சித்ததால் இந்திய மற்றும் சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்துள்ளார்.  

மாநிலங்களவை குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் கடந்த வாரம் தவாங் பகுதியில் இந்திய மற்றும் சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளிக்க எதிர்கட்சி தர்ப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிற்பகலில் பதிலளிப்பார் என மத்திய அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் மத்திய அர்சின் விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார். 

சீன படை அருணாச்சல பிரதேசத்தில் எல்லையில் ஊடுருவ முயற்சி செய்ததாகவும், அதனை உறுதி செய்த இந்திய ராணுவ வீரர்கள் அதற்கு பதிலளிக்கும் வகையில் மோதலில் ஈடுபட்டதாகவும் கூறினார். மேலும் எல்லையில் ஊடுருவ முயற்சி செய்த சீன படைக்கு எதிராக வலுவான பதிலடி கொடுத்ததாகவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார்.  

இந்திய மற்றும் சீன படைகள் கடந்த வாரம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கட்டுப்பாட்டு கோட்டில் (எல்ஏசி) சிறிது நேரம் மோதிக்கொண்டனர் .

டிசம்பர் 9 அன்று நடந்த மோதலில் இரு தரப்பிலிருந்தும் ஒரு சில வீரர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் உடனடியாக அந்தப் பகுதியிலிருந்து வெளியேறினர். அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் இந்தச் சண்டை நடந்தது.

சீன படைகள் LAC ஐக் கடந்ததை தொடர்ந்து இந்திய வீரர்கள் அதனை துணிந்து எதிர்கொண்டு சண்டையிட்டனர். கிழக்கு லடாக்கில் நடந்த மோதலுக்குப் பிறகு, இந்திய-சீனப் படைகளுக்கு இடையே இதுபோன்ற மோதல்கள் இடம்பெற்றுள்ளது இதுவே முதல்முறையாகும்.  2020 ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சம்பவம், இதுவரை நடந்த மோதல்களில் மிக மோசமானது, நாட்டிற்காக 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் 40 க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கொல்லப்பட்டனர் அதில் சிலர் காயமடைந்தனர்.இந்த சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ச்சியான மோதல்களை ஏற்படுத்தியது, இதில் ஒன்று பாங்காங் ஏரியின் தென் கரையில் நடந்தது.

ராணுவத் தளபதிகளுக்கு இடையேயான பல சந்திப்புகளுக்குப் பிறகு, லடாக்கில் உள்ள கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளில் இருந்து இந்திய மற்றும் சீன படைகள் பின்வாங்கின. அரசாங்க வட்டாரங்களின்படி, 2006 ஆம் ஆண்டிலிருந்து இதுபோன்ற மோதல்கள் கருத்து வேறுபாடு காரணமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங் செக்டரில் எல்ஏசியை ஒட்டிய சில பகுதிகளில், இரு தரப்பினரும் தங்கள் கட்டுப்பாட்டு எல்லை வரை ரோந்துப் பணியில் ஈடுபட்டுவது வழக்கம்.  09 டிசம்பர் 2022 அன்று, சீனத் துருப்புக்கள் தவாங் செக்டரில் உள்ள எல்ஏசியைத் நெருங்கியபோது இந்திய ராணுவ வீரர்கள் அதனை துணிச்சலுடன் கையாண்டனர் என அந்த வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.  இந்த சம்பவத்திற்கு பின், அப்பகுதிக்கு ராணுவ தளபதி, சீன அதிகாரிகளிடம் கொடி சந்திப்பு நடத்தி  அமைதியை உறுதி செய்தார்.        

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ghibli Art: அட.. இது சூப்பரா இருக்கே.. லேட்டஸ்ட் ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி...
அட.. இது சூப்பரா இருக்கே.. லேட்டஸ்ட் ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி...
Gold Rate Unstoppable: கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
CSK Coach on Dhoni: “தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aniket Verma | ”தடைகள் எதையும் மகனே வென்று வா” தாய்க்கு செய்த சத்தியம்! யார் இந்த அனிகேத் வர்மா?ADMK BJP Alliance | ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?செங்கோட்டையனை வைத்து செக்! BACK அடிக்கும் எடப்பாடி | Sengottaiyan | Edappadi Palanisamy | Amishah | Rajiya Sabha SeatSengottaiyan | செங்கோட்டையனுக்கு V. K. Pandian:

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ghibli Art: அட.. இது சூப்பரா இருக்கே.. லேட்டஸ்ட் ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி...
அட.. இது சூப்பரா இருக்கே.. லேட்டஸ்ட் ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி...
Gold Rate Unstoppable: கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
CSK Coach on Dhoni: “தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
Ruthuraj on CSK Defeat: நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
Embed widget