மேலும் அறிய

Covid-19 Third Wave : இந்தியாவில் 3வது அலை தவிர்க்க முடியாதது; முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் விஜய் ராகவன்

முந்தைய நோய்த்தொற்றுகளும், தடுப்பூசிகளும் ஏற்படுத்திய அழுத்தம் காரணமாக சார்ஸ்-கோவி-2 கொரோனா வைரஸ் அதிக மாறுபாடுகள் கொண்டதாக உருவாகும். அதை மனதில் வைத்துக் கொண்டு அறிவியல் பூர்வமாக தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Covid-19 Third Wave is Inevitable:  சார்ஸ்-கோவி-2 கொரோனா வைரஸின் பரவலை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாததாக உள்ளது என இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் விஜய் ராகவன் தெரிவித்தார்.  இருப்பினும், மூன்றவாது அலையின் கால அளவை கணிக்க இயலாது என்றும் கூறினார். 

கொரோன வைரஸ் தொடர்பான கேள்விகளுக்கு செய்தியாளர்களிடம் பதிலளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 

முந்தைய நோய்த்தொற்றுகளும், தடுப்பூசிகளும் ஏற்படுத்திய அழுத்தம் காரணமாக சார்ஸ்-கோவி-2 கொரோனா வைரஸ் அதிக மாறுபாடுகள் கொண்டதாக உருவாகும். அதை மனதில் வைத்துக் கொண்டு அறிவியல் பூர்வமாக தயாராக இருக்க வேண்டும் என்று குறிபிட்டார்.

Covid-19 Third Wave : இந்தியாவில் 3வது அலை தவிர்க்க முடியாதது; முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் விஜய் ராகவன் 

வைரஸின் இந்த மரபியல் மாறுபாடுகள் இயற்கையானது. இது அனைத்து நாடுகளிலும் காணப்படுகிறது. மேலும், மாறுபாடுகளுடன் கூடிய கொரோனா வைரஸ் முந்தைய கொரோனா வைரஸ் போல்தான் பெரும்பாலும் கடத்தப்படும். இந்த மாறுபாடுகளுடன் கூடிய வைரஸ், பாதிப்பை அதிகரிக்கச் செய்யும் விதமாகத் தான் செயல்படும் என்று தெரிவித்தார். 

முன்னதாக, இந்தியாவில் மாறுபாடுகளுடன் கூடிய கொரோனா வைரசை, மரபியலுக்கான இந்திய கொரோனா கூட்டமைப்பு (INSACOG) பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.   

மரபியலுக்கான இந்திய கொரோனா கூட்டமைப்பின் கீழ் (INSACOG) 10 தேசிய பரிசோதனைக் கூடங்கள் அடங்கிய குழுவை  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்தாண்டு டிசம்பர் 25ம் தேதி அமைத்தது.  அப்போது முதல், நாட்டின் பல பகுதிகளில் இருந்து அனுப்பப்படும் கொவிட்-19 வைரஸ் மாதிரிகளில் வேறுபாடுகள் உள்ளதா என ‘இன்சாகாக்’ ஆய்வு செய்து வருகிறது.   

மாநிலங்கள்,  யூனியன் பிரதேசங்கள் அனுப்பிய 10,784 கொவிட் வைரஸ் மாதிரிகளில், 771 மாதிரிகள் மரபியல் வேறுபாடுகளுடன் இருந்தது கண்டறியப்பட்டது. 

இவற்றில் 736 மாதிரிகள் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்.  34 மாதிரிகள் தென் ஆப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட வைரஸ் வகையைச் சேர்ந்தது. ஒரே ஒரு மாதிரி, பிரேசிலில் கண்டறிப்பட்ட கொரோனா வைரஸ் மாதிரி.  இந்த மாறுபட்ட வைரஸ் மாதிரிகள், 18 மாநிலங்களில் கண்டறியப்பட்டன.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் எடுக்கப்படும் மாதிரிகளும், இன்சாகாக் கூட்டமைப்பில் உள்ள 10 பரிசோதனைக் கூடங்களில் மரபியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

மகாராஷ்ராவில் இருந்து அனுப்பப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, அவை 2020 டிசம்பர் மாதம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளுடன் ஒப்பிடப்பட்டன.

இதில் மாறுபாடுகள் அதிகரித்து இருந்தது தெரியவந்தது. இந்த மாறுபாடுகளுடன் கூடிய வைரஸ், பாதிப்பை அதிகரிக்கச் செய்தன.  15 முதல் 20 சதவீத மாதிரிகளில் இந்த மாறுபாடுகள் இருந்தன. இவை பழைய மாதிரிகளுடன் ஒத்துப் போகவில்லை. கொரோனா பாதிப்பு ஏற்பட்டவருடன், நெருங்கி பழகியவர்களுக்கும், தேசிய கொரோனா சிகிச்சை நெறிமுறைப்படி பரிசோதனை அதிகரிக்கப்பட்டு, பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. 

கேரளாவின் 14 மாவட்டங்களில் இருந்து வந்த 2032 கொரோனா வைரஸ் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், 11 மாவட்டங்களைச் சேர்ந்த 123 மாதிரிகள்  N440K வகையைச் சேர்ந்தவை. இதே வகை வைரஸ், ஆந்திராவில் இருந்து சேகரிக்கப்பட்ட 33 சதவீத மாதிரிகளிலும், தெலங்கானாவில் இருந்து சேகரிக்கப்பட்ட 53 மாதிரிகளிலும்  முன்பு கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.    

தலைப்பு செய்திகள்

”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
இந்தியாவுக்குப் பெருமை! முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் ஹரியானாவில் தொடக்கம்!
இந்தியாவுக்குப் பெருமை! முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் ஹரியானாவில் தொடக்கம்!

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget