மேலும் அறிய

Second dose vaccination : 70% தடுப்பூசிகளை இரண்டாம் டோசுக்கு ஒதுக்க வேண்டும்- மத்திய அரசு நிபந்தனை

தடுப்பு மருந்து வீணாவதை தடுக்குமாறு மாநிலங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. வரும் காலங்களில் தடுப்பு மருந்துகள் வீணானால் மாநிலங்களுக்கு வழங்கப்பட இருக்கும் ஒதுக்கீட்டில் பிடித்தம் செய்யப்படும் என்றும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. 

முதல் டோஸ் தடுப்பு மருந்து செலுத்தி கொண்ட அனைத்து பயனாளிகளும் முன்னுரிமை அடிப்படையில் இரண்டாம் டோஸ் பெறுவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறித்தியது.

முன்னதாக, கொரோனா தடுப்பு மருந்து வழங்கலின் நிலவரம் குறித்து சுகாதார செயலாளர்கள் மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேசிய சுகாதார இயக்கத்தின் நிர்வாக இயக்குநர்களுடன் காணொலி மூலம் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆய்வு மேற்கொண்டார். 

அதிக அளவிலான பயனாளிகள் இரண்டாம் டோசுக்காக காத்திருகின்றனர். எனவே முதல் டோஸ் தடுப்பு மருந்து செலுத்தி கொண்ட அனைத்து பயனாளிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் இரண்டாம் டோஸ் பெறுவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்திய அரசு மூலம் வழங்கப்படும் தடுப்பு மருந்துகள் குறித்து மாநிலங்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தப்படுகிறது. எனவே அதன் அடிப்படையில் மாநிலங்கள்  திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதார செயலாளர் வலியுறித்தினார்.

 

Second dose vaccination : 70% தடுப்பூசிகளை இரண்டாம் டோசுக்கு ஒதுக்க வேண்டும்- மத்திய அரசு நிபந்தனை
தமிழகம்:மத்திய அரசிடம் இருந்து வாங்கும் தடுப்பூசிகளில் 70% க்கும்
குறைவாகவே இரண்டாம் டோஸ்களுக்கு பயன்படுத்துகிறது  

 

அதன் அடிப்படையில்,  மத்திய அரசு மூலம் பெறப்படும் 70 சதவிகித இலவச தடுப்பூசிகளை இரண்டாம் டோஸ்களுக்கு மட்டும் ஒதுக்க வேண்டும். மாநிலங்கள் விருப்பப்பட்டால் 100 சதவிகிதம் வரை கூட ஒத்துக்கலாம் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 

தடுப்பு மருந்து வீணாவதை தடுக்குமாறு மாநிலங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. வரும் காலங்களில் தடுப்பு மருந்துகள் வீணானால் மாநிலங்களுக்கு வழங்கப்பட இருக்கும் ஒதுக்கீட்டில் பிடித்தம் செய்யப்படும் என்றும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.    

Second dose vaccination : 70% தடுப்பூசிகளை இரண்டாம் டோசுக்கு ஒதுக்க வேண்டும்- மத்திய அரசு நிபந்தனை
வீணாகும் அளவு ஒட்டுமொத்தமாக குறைந்திருந்தாலும்
ஒரு சில மாநிலங்களில் மேலும் குறைக்கப்பட வேண்டும் .

 

மாநிலங்கள் இரண்டு அல்லது மூன்று மூத்த அதிகாரிகளை நியமித்து தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுடன் தினசரி ஒருங்கிணைத்து மாநிலங்கள் வைத்துள்ள நிலுவை கட்டணங்களையும், விநியோகங்களை முறைப்படுத்தலாம். இதே குழு தனியார் மருத்துவமனைகளையும் ஒருங்கிணைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

தடுப்பூசி கையிருப்பு: 

ஒட்டு மொத்தமாக ( மத்திய அரசு கொள்முதல் + மாநில அரசு கொள்முதல் + தனியார் மருத்துவமனைகள் கொள்முதல்) 97 லட்சத்திற்கும் அதிகமான (97.61) கொரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 


Second dose vaccination : 70% தடுப்பூசிகளை இரண்டாம் டோசுக்கு ஒதுக்க வேண்டும்- மத்திய அரசு நிபந்தனை

 

தமிழ்நாட்டுக்கு இதுவரை 76,43,010 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 4.13 விழுக்காடு வீணானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து, 68,53,391 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 7,89,619 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்தின் வசம் கையிருப்பில் உள்ளன

அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானவில் குறைவான தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன.  உத்தர பிரதேச மாநிலத்தில் 11 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களும், குஜாரத் மாநிலத்தில் 8 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன. 

18 வயது முதல் 44 வயது வரையிலான பயனாளிகள் தமிழகத்தில் மிகக் குறைவு ; 

நாடுமுழுவதும், இதுவரை 18 வயது முதல் 44 வயது வரையிலான பயனாளிகளில் 30,39,287 (30 லட்சம்) பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது.  டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான பயனாளிகளுக்கு போடப்பட்டுள்ளது. 

 

Second dose vaccination : 70% தடுப்பூசிகளை இரண்டாம் டோசுக்கு ஒதுக்க வேண்டும்- மத்திய அரசு நிபந்தனை

கொரோனா நோய்த் தொற்றுக்கு தமிழகத்தில் அதிகமான இளைஞர்கள் பலியாகி வருகின்றனர். எனினும், தமிழகத்தில் வெறும் 19,979 (18 - 44) பயனாளிகள் மட்டுமே தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.  எனவே, தமிழக அரசு இந்த ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி 18 - 44 வயது வரையிலான பயனாளிகளுக்கு தடுப்பூசியை ட வேண்டும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.              

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget