மேலும் அறிய

Second dose vaccination : 70% தடுப்பூசிகளை இரண்டாம் டோசுக்கு ஒதுக்க வேண்டும்- மத்திய அரசு நிபந்தனை

தடுப்பு மருந்து வீணாவதை தடுக்குமாறு மாநிலங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. வரும் காலங்களில் தடுப்பு மருந்துகள் வீணானால் மாநிலங்களுக்கு வழங்கப்பட இருக்கும் ஒதுக்கீட்டில் பிடித்தம் செய்யப்படும் என்றும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. 

முதல் டோஸ் தடுப்பு மருந்து செலுத்தி கொண்ட அனைத்து பயனாளிகளும் முன்னுரிமை அடிப்படையில் இரண்டாம் டோஸ் பெறுவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறித்தியது.

முன்னதாக, கொரோனா தடுப்பு மருந்து வழங்கலின் நிலவரம் குறித்து சுகாதார செயலாளர்கள் மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேசிய சுகாதார இயக்கத்தின் நிர்வாக இயக்குநர்களுடன் காணொலி மூலம் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆய்வு மேற்கொண்டார். 

அதிக அளவிலான பயனாளிகள் இரண்டாம் டோசுக்காக காத்திருகின்றனர். எனவே முதல் டோஸ் தடுப்பு மருந்து செலுத்தி கொண்ட அனைத்து பயனாளிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் இரண்டாம் டோஸ் பெறுவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்திய அரசு மூலம் வழங்கப்படும் தடுப்பு மருந்துகள் குறித்து மாநிலங்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தப்படுகிறது. எனவே அதன் அடிப்படையில் மாநிலங்கள்  திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதார செயலாளர் வலியுறித்தினார்.

 

Second dose vaccination : 70% தடுப்பூசிகளை இரண்டாம் டோசுக்கு ஒதுக்க வேண்டும்- மத்திய அரசு நிபந்தனை
தமிழகம்:மத்திய அரசிடம் இருந்து வாங்கும் தடுப்பூசிகளில் 70% க்கும்
குறைவாகவே இரண்டாம் டோஸ்களுக்கு பயன்படுத்துகிறது  

 

அதன் அடிப்படையில்,  மத்திய அரசு மூலம் பெறப்படும் 70 சதவிகித இலவச தடுப்பூசிகளை இரண்டாம் டோஸ்களுக்கு மட்டும் ஒதுக்க வேண்டும். மாநிலங்கள் விருப்பப்பட்டால் 100 சதவிகிதம் வரை கூட ஒத்துக்கலாம் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 

தடுப்பு மருந்து வீணாவதை தடுக்குமாறு மாநிலங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. வரும் காலங்களில் தடுப்பு மருந்துகள் வீணானால் மாநிலங்களுக்கு வழங்கப்பட இருக்கும் ஒதுக்கீட்டில் பிடித்தம் செய்யப்படும் என்றும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.    

Second dose vaccination : 70% தடுப்பூசிகளை இரண்டாம் டோசுக்கு ஒதுக்க வேண்டும்- மத்திய அரசு நிபந்தனை
வீணாகும் அளவு ஒட்டுமொத்தமாக குறைந்திருந்தாலும்
ஒரு சில மாநிலங்களில் மேலும் குறைக்கப்பட வேண்டும் .

 

மாநிலங்கள் இரண்டு அல்லது மூன்று மூத்த அதிகாரிகளை நியமித்து தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுடன் தினசரி ஒருங்கிணைத்து மாநிலங்கள் வைத்துள்ள நிலுவை கட்டணங்களையும், விநியோகங்களை முறைப்படுத்தலாம். இதே குழு தனியார் மருத்துவமனைகளையும் ஒருங்கிணைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

தடுப்பூசி கையிருப்பு: 

ஒட்டு மொத்தமாக ( மத்திய அரசு கொள்முதல் + மாநில அரசு கொள்முதல் + தனியார் மருத்துவமனைகள் கொள்முதல்) 97 லட்சத்திற்கும் அதிகமான (97.61) கொரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 


Second dose vaccination : 70% தடுப்பூசிகளை இரண்டாம் டோசுக்கு ஒதுக்க வேண்டும்- மத்திய அரசு நிபந்தனை

 

தமிழ்நாட்டுக்கு இதுவரை 76,43,010 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 4.13 விழுக்காடு வீணானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து, 68,53,391 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 7,89,619 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்தின் வசம் கையிருப்பில் உள்ளன

அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானவில் குறைவான தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன.  உத்தர பிரதேச மாநிலத்தில் 11 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களும், குஜாரத் மாநிலத்தில் 8 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன. 

18 வயது முதல் 44 வயது வரையிலான பயனாளிகள் தமிழகத்தில் மிகக் குறைவு ; 

நாடுமுழுவதும், இதுவரை 18 வயது முதல் 44 வயது வரையிலான பயனாளிகளில் 30,39,287 (30 லட்சம்) பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது.  டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான பயனாளிகளுக்கு போடப்பட்டுள்ளது. 

 

Second dose vaccination : 70% தடுப்பூசிகளை இரண்டாம் டோசுக்கு ஒதுக்க வேண்டும்- மத்திய அரசு நிபந்தனை

கொரோனா நோய்த் தொற்றுக்கு தமிழகத்தில் அதிகமான இளைஞர்கள் பலியாகி வருகின்றனர். எனினும், தமிழகத்தில் வெறும் 19,979 (18 - 44) பயனாளிகள் மட்டுமே தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.  எனவே, தமிழக அரசு இந்த ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி 18 - 44 வயது வரையிலான பயனாளிகளுக்கு தடுப்பூசியை ட வேண்டும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.              

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tasmac Sale: தேர்தல் விடுமுறை - டாஸ்மாக்கில் குவிந்த கூட்டம் , ஒரே நாளில் ரூ.290 கோடிக்கு மது விற்பனை
தேர்தல் விடுமுறை - டாஸ்மாக்கில் குவிந்த கூட்டம், ஒரே நாளில் ரூ.290 கோடிக்கு மது விற்பனை
Today Movies in TV, April 18: காதல் முதல் காமெடி படங்கள் வரை.. டிவியில் இன்றைய படங்களின் லிஸ்ட் இதோ!
காதல் முதல் காமெடி படங்கள் வரை.. டிவியில் இன்றைய படங்களின் லிஸ்ட் இதோ!
Today RasiPalan: கும்பத்துக்கு தன்னம்பிக்கை; மீனத்துக்கு வாய்ப்பு- உங்கள் ராசிக்கான இன்றைய (ஏப்ரல் 18) பலன்கள்!
கும்பத்துக்கு தன்னம்பிக்கை; மீனத்துக்கு வாய்ப்பு- உங்கள் ராசிக்கான இன்றைய (ஏப்ரல் 18) பலன்கள்!
Uthiramerur: 1000 ஆண்டு கால மக்களாட்சி.. தமிழர்களின் ஜனநாயகத்தை பறைசாற்றும் உத்திரமேரூர் கல்வெட்டுகள்!
1000 ஆண்டு கால மக்களாட்சி.. தமிழர்களின் ஜனநாயகத்தை பறைசாற்றும் உத்திரமேரூர் கல்வெட்டுகள்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Deepan Chakravarthy Interview | செய்தியாளர் to நாடாளுமன்ற வேட்பாளர்..கவனம்பெற்ற இளைஞர் !Annamalai about NEET | ”எங்க உயிரே போனாலும் நீட் ரத்து கிடையாது” ஆவேசமான அண்ணாமலைOpinion Poll | மோடி vs ராகுல்1 ஆளப்போவது யார்? பிரம்மாண்ட கருத்துக்கணிப்புJothimani vs MR Vijayabaskar | ஜெயிலில் செந்தில்பாலாஜி..அடித்து ஆடும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Sale: தேர்தல் விடுமுறை - டாஸ்மாக்கில் குவிந்த கூட்டம் , ஒரே நாளில் ரூ.290 கோடிக்கு மது விற்பனை
தேர்தல் விடுமுறை - டாஸ்மாக்கில் குவிந்த கூட்டம், ஒரே நாளில் ரூ.290 கோடிக்கு மது விற்பனை
Today Movies in TV, April 18: காதல் முதல் காமெடி படங்கள் வரை.. டிவியில் இன்றைய படங்களின் லிஸ்ட் இதோ!
காதல் முதல் காமெடி படங்கள் வரை.. டிவியில் இன்றைய படங்களின் லிஸ்ட் இதோ!
Today RasiPalan: கும்பத்துக்கு தன்னம்பிக்கை; மீனத்துக்கு வாய்ப்பு- உங்கள் ராசிக்கான இன்றைய (ஏப்ரல் 18) பலன்கள்!
கும்பத்துக்கு தன்னம்பிக்கை; மீனத்துக்கு வாய்ப்பு- உங்கள் ராசிக்கான இன்றைய (ஏப்ரல் 18) பலன்கள்!
Uthiramerur: 1000 ஆண்டு கால மக்களாட்சி.. தமிழர்களின் ஜனநாயகத்தை பறைசாற்றும் உத்திரமேரூர் கல்வெட்டுகள்!
1000 ஆண்டு கால மக்களாட்சி.. தமிழர்களின் ஜனநாயகத்தை பறைசாற்றும் உத்திரமேரூர் கல்வெட்டுகள்!
Ethirneechal serial : திரும்பவும் தர்ஷினியை காணவில்லையா? பதட்டத்தில் ஈஸ்வரி.. தொடரும் பரபரப்பு
Ethirneechal serial : திரும்பவும் தர்ஷினியை காணவில்லையா? பதட்டத்தில் ஈஸ்வரி.. தொடரும் பரபரப்பு
Dubai Flood Exclusive: வெள்ளகாடாய் காட்சியளிக்கும் பாலைவன பூமி: துபாயிலிருந்து ஏபிபி நாடுக்கு பிரத்யேக தகவல்
Dubai Flood Exclusive: வெள்ளகாடாய் காட்சியளிக்கும் பாலைவன பூமி: துபாயிலிருந்து ஏபிபி நாடுக்கு பிரத்யேக தகவல்
"தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்" தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல்!
Lok sabha Election: ஓய்ந்தது பரப்புரை! முடிவுக்கு வந்த தலைவர்களின் அனல் பறந்த பிரச்சாரம் - ஓட்டுப்போட தயாரான மக்கள்
Lok sabha Election: ஓய்ந்தது பரப்புரை! முடிவுக்கு வந்த தலைவர்களின் அனல் பறந்த பிரச்சாரம் - ஓட்டுப்போட தயாரான மக்கள்
Embed widget