மேலும் அறிய

கேரளாவில் பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய விவகாரம்: தீவிர விசாரணை!

கொரோனா தடுப்பூசி போடப்பட்ட 2 மாணவிகளையும் மருத்துவமனையில் வைத்து உடல் நலக்குறைவு எதுவும் ஏற்படுகிறதா ? என தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்றின் தாக்கம் மக்களைப் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியது. வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டது. இருந்தப்போதும்  ஏப்ரலில் ஏற்பட்ட பாதிப்பின் எண்ணிக்கை நாளொன்றுக்கு  லட்சத்தைக்கடந்த நிலையில் பல்வேறு உயிரிழப்புகளும் பதிவாகின. இந்நிலையில் தான் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் முன்களப்பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்களுக்கு போடப்பட்ட தடுப்பூசிகள்  தற்போது 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டது.

இதனையடுத்து கொரோனா தொற்றிலிருந்து எப்படியாவது உயிரைக்காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று பலர் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். ஆனால் ஒரு சிலர் தடுப்பூசி செலுத்தினால் தேவையில்லாத உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் இன்னமும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவில்லை. இது ஒருபுறம் இருந்தாலும் சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டவர்களின் கணக்குகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நெருக்கடிகளை மாநில சுகாதாரத்துறைத் தருவதன் காரணமாக எந்த ஆவணங்களும் இன்றி தடுப்பூசி போட்டதாகக் கணக்கு காட்டுகின்றனர். இப்படி மேற்கொள்ளும் பொழுது தான் உயிரிழந்த நபர்களுக்குக்கூட தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக மெசேஜ் வருகிறது என அவர்களது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவங்கள் சமீபத்தில் அரங்கேறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  • கேரளாவில் பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய விவகாரம்: தீவிர விசாரணை!

தமிழகத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் அரங்கேறிவரும் சூழலில், கேரளா மாநிலத்தில் நிகழ்ந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று தான் கூற வேண்டும். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள  ஆரியநாடுஅரசு மருத்துவமனைக்கு 2 மாணவிகள்  15 வயது நிறைவடைந்த நிலையில் வழக்கமாக செலுத்தப்படும் தடுப்பூசி செலுத்துவதற்காக வந்துள்ளனர். ஆனால் மருத்துவமனை முழுவதும் தேடிய நிலையில் அவர்களுக்கு எந்த இடத்திற்கு சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தெரியவில்லையாம். இந்நிலையில் தான் ஒரு இடத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்ததைப்பார்த்த அவர்கள் அங்கு சென்று கேட்பதற்கு முன்னதாக அவர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தடுப்பூசியை செலுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.  பணியாளர்கள் ஊசி போடுவதற்கு முன்னதாக ஆதார் எண்ணை வாங்கவில்லை என்பதால் அலட்சியமாக 15 வயதுடைய பள்ளி மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழும்பியுள்ளது.

பின்னர் மாணவிகளிடம் தகவல்களைப்பெற தொடங்கியப்போது தான் சுகாதாரப்பணியாளர்கள் தவறு நடந்துவிட்டது என்பதை அறிந்து இதுக்குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கொரோனா தடுப்பூசி போடப்பட்ட 2 மாணவிகளையும் மருத்துவமனையில் வைத்து உடல் நலக்குறைவு எதுவும் ஏற்படுகிறதா ? என தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. பின்னர் எந்தவித பிரச்சனையும் இல்லை என்பதற்கு பிறகு தான் மருத்துவர்கள் மாணவிகளை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட மாணவிகளின பெற்றோர்களும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருவனந்தபுரம் மாவட்ட மருத்துவ அதிகாரி உறுதியளித்துள்ளார்.

  • கேரளாவில் பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய விவகாரம்: தீவிர விசாரணை!

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்துக்கொள்ளவதற்கு தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் தான். ஆனால் அதனை ஏதோ கணக்குக்காக மட்டுமில்லாமல் மனித நேயத்துடன் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
ஒரே சார்ஜில் 104 கி.மீட்டர் மைலேஜ்.. சீனியர் சிட்டிசன் கெத்து காட்ட Kinetic Green Zulu இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோ கம்மியா?
ஒரே சார்ஜில் 104 கி.மீட்டர் மைலேஜ்.. சீனியர் சிட்டிசன் கெத்து காட்ட Kinetic Green Zulu இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோ கம்மியா?
Chennai Power Cut: சென்னைல ஜூலை 16-ம் தேதி எங்கெங்க மின்சார தடை பண்ணப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க...
சென்னைல ஜூலை 16-ம் தேதி எங்கெங்க மின்சார தடை பண்ணப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க...
Hector Hawk Vs Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை தூக்கி சாப்பிடுமா எம்ஜி-யின் பிரமிக்க வைக்கும் பிளக்-இன் ஹைப்ரிட்.? என்ன வித்தியாசம்.?
இன்னோவா ஹைக்ராஸை தூக்கி சாப்பிடுமா எம்ஜி-யின் பிரமிக்க வைக்கும் பிளக்-இன் ஹைப்ரிட்.? என்ன வித்தியாசம்.?
Maruti WagonR CNG: ரூ.2 லட்சம் போதும்; 34 கிமீ மைலேஜ், நடுத்தர குடும்பங்களின் நண்பன்- ரூ. 8,612 இஎம்ஐயில் சொந்தமாக்குங்கள்!
Maruti WagonR CNG: ரூ.2 லட்சம் போதும்; 34 கிமீ மைலேஜ், நடுத்தர குடும்பங்களின் நண்பன்- ரூ. 8,612 இஎம்ஐயில் சொந்தமாக்குங்கள்!
Embed widget