மேலும் அறிய

இமாச்சல் தேர்தலில் 40 இடங்களை கைப்பற்றுவோம்: காங்கிரஸ் தலைவர் பிரதீபா நம்பிக்கை

இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று அம்மாநிலத் தலைவர் பிரதீபா வீர்பத்திர சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று அம்மாநிலத் தலைவர் பிரதீபா வீர்பத்திர சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 2023ம் ஆண்டு, ஜனவரி 8ம் தேதியோடு நிறைவடைய உள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள், டிசம்பர் 8ம் தேதி அறிவிக்கப்படுகிறது.  

தேர்தலில் மொத்தம் 412 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  இமாச்சல பிரதேச சட்டசபை மொத்தம் 68 இடங்களை கொண்டது. இந்த 68 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 65.92 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிகாரிகள் முன்னிலையில் சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்படும். வாக்குப்பதிவின்போது 157 வாக்குச்சாவடி மையங்களை மகளிர் மட்டுமே நிர்வகித்து சாதனை புரிந்துள்ளனர். வாக்குப்பதிவின்போது 105 வயது மூதாட்டியான நரோ தேவி, சம்பா மாவட்டம் சுரா தொகுதியில் அமைக்கப்பட்ட லதான் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.

இந்நிலையில், இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று அம்மாநிலத் தலைவர் பிரதீபா வீர்பத்திர சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் இமாச்சலப் பிரதேசம் எவ்வித வளர்ச்சியையும் காணவில்லை. மக்கள் அதிருப்தியில் இருந்தனர். அந்த எதிர்ப்பலைகள் காங்கிரஸுக்கு வாக்காக மாறும் என்றார். இதுவரை வெளியான தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் அத்தனையும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று சொல்லியிருந்தாலும் உட்கட்சிப் பூசல் போன்ற பிரச்சனைகளால் பாஜக வாக்குவங்கியில் சரிவு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

உட்கட்சிப் பூசலால் பாதிப்பு ஏற்படும்

பாஜக-வில், முன்னாள்  எம்எல்ஏ-க்கள் 4 பேருக்கு, இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. அந்த 4 பேரும் தற்போது, கட்சியின் மாநிலத் துணைத்தலைவர் கிருபால் பார்மர் தலைமையில் சுயேச்சைகளாக களமிறங்கி உள்ளனர். கின்னவூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் தேஜ்வந்த் சிங் நேஹி, அன்னி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கிஷோரி லால், இந்தோரா சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மனோஹர் திமான், நலகார்ஹ் சட்டமன்றதொகுதி முன்னாள் உறுப்பினர் கே.எல். தாகூர் ஆகியோர்தான் தற்போது பாஜக-வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக, சுயேச்சைகளாகப் போட்டியிடுகின்றனர். அதே போல், கட்சியின் துணைத்தலைவராக இருந்த கிருபால் பார்மர், சுயேச்சையாக ஃபதேபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால், ஒழுங்கு நடவடிக்கையாக, கட்சியின் துணைத் தலைவர் பார்மர் உட்பட 4 சட்டமன்ற உறுப்பினர்களையும் கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி, பாஜக-வின் இமாச்சலப்பிரதேச தலைவர் சுரேஷ் கஷ்யாப் நீக்கினார். இது தேர்தலில் எதிரொலித்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ModivsTrump: பயங்கரவாதத்தில் பாகிஸ்தானை பாராட்டிய அமெரிக்கா.. கோபத்தின் உச்சியில் இந்தியா!
ModivsTrump: பயங்கரவாதத்தில் பாகிஸ்தானை பாராட்டிய அமெரிக்கா.. கோபத்தின் உச்சியில் இந்தியா!
Independence Day 2025: நாளை சுதந்திர தினம்.. களைகட்டிய இந்தியா.. உற்சாகத்தின் உச்சியில் மக்கள்!
Independence Day 2025: நாளை சுதந்திர தினம்.. களைகட்டிய இந்தியா.. உற்சாகத்தின் உச்சியில் மக்கள்!
Coolie Review : அரங்கம் அதிர்ந்ததா ? தூங்கி வழிந்ததா..ரஜினிகாந்தின் கூலி திரைப்பட விமர்சனம் இதோ
Coolie Review : அரங்கம் அதிர்ந்ததா ? தூங்கி வழிந்ததா..ரஜினிகாந்தின் கூலி திரைப்பட விமர்சனம் இதோ
Mayiladuthurai Power Shutdown (14.08.2025): மயிலாடுதுறையில் இன்று மின் தடை:  உங்க ஏரியாவுல கரண்ட் இருக்காது உடனே செக் பண்ணுங்க!மயிலாடுதுறை மாவட்டத்தில் பல பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Mayiladuthurai Power Shutdown (14.08.2025): மயிலாடுதுறையில் இன்று மின் தடை: உங்க ஏரியாவுல கரண்ட் இருக்காது உடனே செக் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ModivsTrump: பயங்கரவாதத்தில் பாகிஸ்தானை பாராட்டிய அமெரிக்கா.. கோபத்தின் உச்சியில் இந்தியா!
ModivsTrump: பயங்கரவாதத்தில் பாகிஸ்தானை பாராட்டிய அமெரிக்கா.. கோபத்தின் உச்சியில் இந்தியா!
Independence Day 2025: நாளை சுதந்திர தினம்.. களைகட்டிய இந்தியா.. உற்சாகத்தின் உச்சியில் மக்கள்!
Independence Day 2025: நாளை சுதந்திர தினம்.. களைகட்டிய இந்தியா.. உற்சாகத்தின் உச்சியில் மக்கள்!
Coolie Review : அரங்கம் அதிர்ந்ததா ? தூங்கி வழிந்ததா..ரஜினிகாந்தின் கூலி திரைப்பட விமர்சனம் இதோ
Coolie Review : அரங்கம் அதிர்ந்ததா ? தூங்கி வழிந்ததா..ரஜினிகாந்தின் கூலி திரைப்பட விமர்சனம் இதோ
Mayiladuthurai Power Shutdown (14.08.2025): மயிலாடுதுறையில் இன்று மின் தடை:  உங்க ஏரியாவுல கரண்ட் இருக்காது உடனே செக் பண்ணுங்க!மயிலாடுதுறை மாவட்டத்தில் பல பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Mayiladuthurai Power Shutdown (14.08.2025): மயிலாடுதுறையில் இன்று மின் தடை: உங்க ஏரியாவுல கரண்ட் இருக்காது உடனே செக் பண்ணுங்க!
Coolie : லோகேஷ் கனகராஜின் முதல் ஃப்ளாப் படமா கூலி ? ரசிகர்கள் விமர்சனங்கள் சொல்வது என்ன?
Coolie : லோகேஷ் கனகராஜின் முதல் ஃப்ளாப் படமா கூலி ? ரசிகர்கள் விமர்சனங்கள் சொல்வது என்ன?
Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
Embed widget