மேலும் அறிய

இருமல் மருந்து குடித்ததால் கண் பார்வை இழந்த சிறுவன்.. சோகத்தில் குடும்பத்தினர்!

2025ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி குணால் யதுவன்ஷிக்கு குடும்பத்தில் இலேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவரது குடும்பத்தினர் குணாலை உள்ளூர் மருத்துவர் டாக்டர் பிரவீன் சோனியிடம் அழைத்துச் சென்று காட்டியுள்ளனர்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருமல் மருந்து குடித்து 24 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த சிறுவன் 115 நாட்களுக்குப் பின் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளான். 

சிந்த்வாராவைச் சேர்ந்த அந்த ஐந்து வயது சிறுவன் இருமல் மருந்து குடித்ததால் கண் பார்வையை இழந்துள்ளான். அந்த மாவட்டத்தின் ஜடாச்சாபர் என்ற கிராமத்தைச் சேர்ந்த குணால் யதுவன்ஷி என்ற சிறுவன், கோல்ட் ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டு பாதிக்கப்பட்டவர்களில் ஒருவன். இந்த கோர சம்பவத்தில் 24 குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை இழந்த நிலையில் குணால் யதுவன்ஷி மட்டும் பல மாத தீவிர சிகிச்சைக்குப் பின்னர் உயிர் பிழைத்தான். அவனுக்கு நீண்ட நாட்கள் டயாலிசிஸ் மற்றும் தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

3 மாதங்களுக்குப் பின் குணால் யதுவன்ஷி மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளது அவனது குடும்பத்திற்கு மீண்டும் நம்பிக்கை வெளிச்சத்தை கொடுத்துள்ளது. எனினும் சிறுவனுக்கு கண் தெரியாமல் போனது பெரும் இழப்பாக மாறியுள்ளது. இருமல் மருந்தால் ஏற்பட்ட பின் விளைவுகள் சிறுவனை முழுவதுமாக பாதித்துள்ளது. கண் பாதிப்பு மட்டுமல்லாது, நடப்பதிலும் குணால் யதுவன்ஷி சிரமத்தை எதிர்கொண்டிருக்கிறார். அவர் முழுவதுமாக குணமடைவார் என்பது நிச்சயமற்றது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நடந்தது என்ன?

2025ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி குணால் யதுவன்ஷிக்கு குடும்பத்தில் இலேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவரது குடும்பத்தினர் குணாலை உள்ளூர் மருத்துவர் டாக்டர் பிரவீன் சோனியிடம் அழைத்துச் சென்று காட்டியுள்ளனர். அவர் மாத்திரை அளித்ததோடு, இருமல் சிரப்பையும் கொடுத்துள்ளார். ஆனால் அந்த இருமல் மருந்தால் சிறுவன் குணால் குணமடைவதற்கு பதில் மிகப்பெரிய அளவில் உடல்நிலையில் மோசமடைந்தார். 

இதனால் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் குணால் யதுவன்ஷியின் இரண்டு சிறுநீரகங்களும் இருமல் மருந்தால் பாதிக்கப்பட்டு செயலிழந்ததாக தெரிய வந்தது. ஆகஸ்ட் 30ம் தேதி உடல் நிலை மேலும் மோசமடைய சிறுவன் நாக்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன்பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். கிட்டதட்ட ஒன்றரை மாதங்களாக தினமும் வலி மிகுந்த டயாலிசிஸ் சிகிச்சையளிக்கப்பட்டது. 

அவன் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். எனினும் முடிந்தவரை சிகிச்சையளிப்பதாக உறுதியளித்தனர். தொடர்ந்து மருத்துவ உதவியுடன் போராடிய குணால் யதுவன்ஷி இறுதியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். 

இந்த இருமல் மருந்தால்  அவரது கண்களில் இருந்த திரவம் வறண்டு பார்வை இழக்க காரணமாக அமைந்தது. குணால் திரும்பி வரமாட்டான் என தாங்கள் நம்பிக்கை இழந்து காணப்பட்டதாகவும், தற்போது பார்வை இல்லாவிட்டாலும் அவன் இருப்பதே போதும் என தந்தை தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Happy New Year 2026: Confident- ஆ இருங்க.. நல்லதே நடக்கும்.. 2026 வெற்றி நிச்சயம் மக்களே!
Happy New Year 2026: Confident- ஆ இருங்க.. நல்லதே நடக்கும்.. 2026 வெற்றி நிச்சயம் மக்களே!
புத்தாண்டு கொண்டாட்டத்தில் மழை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
புத்தாண்டு கொண்டாட்டத்தில் மழை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
New Year 2026 Celebrations: புத்தாண்டு கொண்டாட்டம், உள்ளூர் தொடங்கி உலகம் வரை.. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் வீடியோ
New Year 2026 Celebrations: புத்தாண்டு கொண்டாட்டம், உள்ளூர் தொடங்கி உலகம் வரை.. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Happy New Year 2026: Confident- ஆ இருங்க.. நல்லதே நடக்கும்.. 2026 வெற்றி நிச்சயம் மக்களே!
Happy New Year 2026: Confident- ஆ இருங்க.. நல்லதே நடக்கும்.. 2026 வெற்றி நிச்சயம் மக்களே!
புத்தாண்டு கொண்டாட்டத்தில் மழை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
புத்தாண்டு கொண்டாட்டத்தில் மழை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
New Year 2026 Celebrations: புத்தாண்டு கொண்டாட்டம், உள்ளூர் தொடங்கி உலகம் வரை.. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் வீடியோ
New Year 2026 Celebrations: புத்தாண்டு கொண்டாட்டம், உள்ளூர் தொடங்கி உலகம் வரை.. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் வீடியோ
Upcoming MPVs: குடும்பமா போக.. தரமா, வசதியா, சொகுசா வரும் 5 புதிய எம்பிவிக்கள் - பட்ஜெட்& ப்ரீமியம், ICE & EV
Upcoming MPVs: குடும்பமா போக.. தரமா, வசதியா, சொகுசா வரும் 5 புதிய எம்பிவிக்கள் - பட்ஜெட்& ப்ரீமியம், ICE & EV
Jana Nayagan vs Parasakthi: ரிலீசுக்கு முன்பே மல்லுகட்டும் ஜனநாயகன் - பராசக்தி.. ஒரே நாளில் ஆடியோ லாஞ்ச் ஒளிபரப்பு!
Jana Nayagan vs Parasakthi: ரிலீசுக்கு முன்பே மல்லுகட்டும் ஜனநாயகன் - பராசக்தி.. ஒரே நாளில் ஆடியோ லாஞ்ச் ஒளிபரப்பு!
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Embed widget