மேலும் அறிய

Chhattisgarh Train Accident: கோர விபத்து.. பயணிகள் மீது சரக்கு ரயில் மோதல் - 6 பேர் மரணம்

சத்தீஸ்கரில் பயணிகள் மின்சார ரயில் சரக்கு ரயில் மீது மோதியதில் 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ளது பிலாஸ்பூர். இங்குள்ள பிலாஸ்பூர் - கட்னி இடையேயான ரயில் பாதை மிகவும் பரபரப்பான ரயில் பாதை ஆகும். 

பயணிகள் ரயில் - சரக்கு ரயில் மோதல்:

இந்த ரயில் பாதையில் இன்று பயணிகள் மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது, இந்த ரயில் வந்த அதே பாதையில்  சரக்கு ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது, மின்சார ரயில் முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பலத்த வேகத்துடன் மோதியது. 

6 பேர் மரணம்:

இதில் மின்சார ரயில் சரக்கு ரயிலின் பெட்டிகள் மீது ஏறி நின்றது. இந்த இரண்டு ரயில்களும் மோதிய கோர விபத்தில் பயணிகள் நிலைகுலைந்தனர். இந்த கோர விபத்துச் சம்பவத்தில் தற்போது வரை 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜெய்ராம்நகர் ரயில் நிலையம் அருகே இந்த விபத்து அரங்கேறியுள்ளது. இந்த விபத்தில் மின்சார ரயிலின் முதல் பெட்டி அப்படியே மோதிய வேகத்தில் சரக்கு ரயிலின் மீது ஏறி நிற்கிறது. இந்த விபத்து வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விபத்து எப்படி நடந்தது? இந்த விபத்திற்கான காரணம் என்ன? யாருடைய அலட்சியம்? சிக்னல் கோளாறா?  என்ற பல கட்டத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இந்த கோர விபத்தால்  மிகுந்த அதிர்ச்சிக்கும், சோகத்திற்கும் ஆளாகியுள்ளனர்.


Chhattisgarh Train Accident: கோர விபத்து.. பயணிகள் மீது சரக்கு ரயில் மோதல் - 6 பேர் மரணம்

20 பேர் மருத்துவமனையில் அனுமதி:

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், ரயில்வே போலீசார், தீயணைப்பு படையினர் உள்ளிட்ட பலரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கவும் அரசு மருத்துவக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

தற்போதைய தகவலின்படி, 20 பேர் வரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தால் பல ரயில்களும் பாதி வழியிலே நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே ரயில் விபத்துகள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. திருவள்ளூரில் கச்சா எண்ணெய் கொண்டு வந்த ரயில் தீ விபத்தில் சிக்கியது என்று பல மோசமான சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கவும் அரசு மருத்துவக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே துறை அமைச்சராக பதவி வகித்து வரும் இந்த காலகட்டத்தில் அதிகளவில் ரயில் விபத்துகள் அரங்கேறி வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. அதற்கு கடந்த கால ரயில் விபத்துகளே சான்றாகும். இந்த நிலையில், இந்த சம்பவம் மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு மேலும் ஒரு பின்னடைவாகவே மாறியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
TN BJP : ‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க முடியாமல் திணறும் பாஜக..!
‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க திணறும் பாஜக..!
’’முதல்வருக்கு கூச்சமில்லையா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு’’- ஆசிரியர்கள் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
’’முதல்வருக்கு கூச்சமில்லையா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு’’- ஆசிரியர்கள் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
Ukraine Zelensky: விரைவில் அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி; அமெரிக்க தூதர்களுடன் பேச்சு; முடியும் போர்..
விரைவில் அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி; அமெரிக்க தூதர்களுடன் பேச்சு; முடியும் போர்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி
Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்
TVK Ajitha ICU| ’’நான் திமுக கைக்கூலியா?’’ICU-வில் தவெக அஜிதா! தவெகவில் நடப்பது என்ன?
Priyanka Gandhi to lead Congress | ராகுல் தலைமைக்கு ENDCARD?பவருக்கு வரும் பிரியங்கா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
TN BJP : ‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க முடியாமல் திணறும் பாஜக..!
‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க திணறும் பாஜக..!
’’முதல்வருக்கு கூச்சமில்லையா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு’’- ஆசிரியர்கள் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
’’முதல்வருக்கு கூச்சமில்லையா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு’’- ஆசிரியர்கள் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
Ukraine Zelensky: விரைவில் அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி; அமெரிக்க தூதர்களுடன் பேச்சு; முடியும் போர்..
விரைவில் அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி; அமெரிக்க தூதர்களுடன் பேச்சு; முடியும் போர்..
TN MRB Recruitment 2025: டிப்ளமோ போதும்; மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தில் பணி- ரூ.1.3 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TN MRB Recruitment 2025: டிப்ளமோ போதும்; மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தில் பணி- ரூ.1.3 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
Jana Nayagan Audio Launch: டைம் நோட் பண்ணுங்க.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நேரம் இதுதான்!
Jana Nayagan Audio Launch: டைம் நோட் பண்ணுங்க.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நேரம் இதுதான்!
Teachers Protest: முற்றும் போராட்டங்கள்; முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது- சென்னையில் பரபரப்பு!
Teachers Protest: முற்றும் போராட்டங்கள்; முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது- சென்னையில் பரபரப்பு!
GK Mani removed from PMK: பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.! ராமதாசுக்கு காலையிலேயே ஷாக் கொடுத்த அன்புமணி
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.! ராமதாசுக்கு காலையிலேயே ஷாக் கொடுத்த அன்புமணி
Embed widget