மேலும் அறிய

சத்தீஸ்கர் முதலமைச்சருக்கு நெருக்கடி...முதலமைச்சரின் துணை செயலாளர் கைது...உச்சக்கட்ட அரசியல் பதற்றம்..!

சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேலின் துணைச் செயலாளர் சௌமியா சௌராசியா, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 4 நாள்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பண மோசடி வழக்கில் சத்தீஸ்கர் மாநிலத்தின் முக்கிய ஐஏஎஸ் அதிகாரி அமலாக்கத்துறை இயக்குநரக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேலின் துணைச் செயலாளர் சௌமியா சௌராசியா, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 4 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பிறகு, உடல்நலப் பரிசோதனைக்காக சௌராசியா அழைத்துச் செல்லப்பட்டார். மத்திய ரிசர்வ் போலீஸ் படை உதவியுடன் அவர் உள்ளூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த வழக்கில் சோதனை நடத்திய பிறகு, அக்டோபர் மாதம் ஐஏஎஸ் அதிகாரி சமீர் விஷ்னோய் மற்றும் இருவரை அமலாக்கத்துறை கைது செய்தது.

வருமான வரித்துறையின் புகாரை அமலாக்கத்துறை கவனத்தில் எடுத்ததைத் தொடர்ந்து பணமோசடி விசாரணை தொடங்கப்பட்டது.

சத்தீஸ்கரில் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு டன் நிலக்கரியிலிருந்தும் டன் ஒன்றுக்கு ₹ 25 சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்டது. இதில், மூத்த அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் இடைத்தரகர்கள் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

பிப்ரவரி 2020 இல் சௌராசியாவின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில், மத்திய அமைப்பின் சோதனையை அரசியல் பழிவாங்கல் என்றும், தனது அரசாங்கத்தை நிலையற்றதாக மாற்றும் முயற்சி இருப்பதாகவும் முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பூபேஷ் பாகேலி தனது ட்விட்டர் பக்கத்தில், "உள்ளூர் போலீஸாருக்குத் தெரிவிக்காமல் மக்களைக் காவலில் வைப்பது, சம்பவ இடத்திலேயே சம்மன் அனுப்புவது, முட்டி போட வைத்து, இரவு வரை உணவு, தண்ணீர் வழங்காமல் வைத்து, கம்பியால் அடித்து, சிறையில் அடைக்கப் போவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மிரட்டினர்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையின் போது வீடியோ பதிவு செய்ய வேண்டும். ஊழலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை மற்றும் வருமான வரி போன்ற ஏஜென்சிகள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரி துறையின் விசாரணையின் போது சட்டவிரோத நடவடிக்கைகள் வெளிவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என பதிவிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget