மேலும் அறிய

Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்துக்கு 'சதி' செயல் காரணமா..? வழக்குப்பதிவு செய்த சிபிஐ...அடுத்தக்கட்டத்திற்கு நகரும் விசாரணை..!

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை, ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் உலகையே சோகத்தில் ஆழ்த்தியது. 278 பேரின் உயிரை பலி வாங்கிய இந்த விபத்தின் விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று காலை பாலசோரில் விபத்து நடந்த பகுதிக்கு சென்ற சிபிஐ விசாரணைக் குழு, ஒடிசா காவல்துறையிடம் விசாரணை தொடர்பான ஆவணங்களை பெற்றது.

வழக்குப்பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள்:

இதையடுத்து, இந்த விபத்து தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ரயில்வே அமைச்சகம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்க ஒடிசா அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

அலட்சியத்தால் ஏற்படும் மரணங்கள், பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்தது என ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் ஒடிசா காவல்துறை நேற்று வழக்கு பதிவு செய்தது. 

உயர்மட்ட விசாரணை குழுவின் விரிவான விசாரணையின் மூலம் மட்டுமே சதி நடந்ததா? இல்லையா? என்பதை நிறுவ முடியும் என்று அதிகாரிகள் கூறுவதால், சிபிஐயிடம் இது தொடர்பான விசாரணை ஒப்படைக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கப்படுகிறது.

ரயில் விபத்துக்கு காரணம் என்ன?

ரயில்கள் சரியா செல்கிறதா? இல்லையா? என்பதை கண்டறிய உதவும் இன்டர்லாக்கிங் அமைப்பில் ஏற்பட்ட குளறுபடி, சதி செயல் ஆகியவை ரயில் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் கூறி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையின்படி, "சிக்னலில் ஏற்பட்ட கோளாறால் விபத்து ஏற்பட்டது. மோதல் ஏதும் ஏற்படவில்லை" என ரயில்வே சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ரயிலின் தடத்தை மாற்றக்கூடிய மின்னணு இண்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட மாற்றமே விபத்திற்கு காரணம் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்திருந்தார். அதேபோல, விபத்தில் சிக்கிய ரயில்கள் அதிவேகமாக இயக்கப்படவிலலை என ரயில்வே போர்டு உறுப்பினர் ஜெய வர்மா சின்ஹா தெரிவித்திருந்தார். 

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான இந்த விபத்து தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பதில் சிபிஐ விசாரணை கவனம் செலுத்தும். இயந்திர கோளாறு, மனிதப் பிழை, நாசவேலை உள்ளிட்ட அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்திருந்தார். ஆனால், தார்மீக பொறுப்பெற்று அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என முன்னாள் ரயில்வே அமைச்சர்கள் நிதிஷ் குமார், மம்தா, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Attagasam Re Release: அமர்க்களப்படுத்தும் அட்டகாசம் ரீ ரிலீஸ்.. துள்ளிக்குதிக்கும் அஜித் ரசிகர்கள்!
Attagasam Re Release: அமர்க்களப்படுத்தும் அட்டகாசம் ரீ ரிலீஸ்.. துள்ளிக்குதிக்கும் அஜித் ரசிகர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Attagasam Re Release: அமர்க்களப்படுத்தும் அட்டகாசம் ரீ ரிலீஸ்.. துள்ளிக்குதிக்கும் அஜித் ரசிகர்கள்!
Attagasam Re Release: அமர்க்களப்படுத்தும் அட்டகாசம் ரீ ரிலீஸ்.. துள்ளிக்குதிக்கும் அஜித் ரசிகர்கள்!
IND vs SA: நாளை நடக்குது முதல் போட்டி.. தெ. ஆப்பிரிக்கா ஆணவத்தை அடக்குமா இந்தியா? ரோ-கோ அசத்தல் தொடருமா?
IND vs SA: நாளை நடக்குது முதல் போட்டி.. தெ. ஆப்பிரிக்கா ஆணவத்தை அடக்குமா இந்தியா? ரோ-கோ அசத்தல் தொடருமா?
Chennai Metro: சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Embed widget