மேலும் அறிய

வீட்டுப்பாடம் முடிக்காத மாணவன்.. கயிற்றில் கட்டி தொங்கவிட்ட ஆசிரியர்!

சத்தீஸ்கரின் சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள நாராயண்பூர் கிராமத்தில்   ஹன்ஸ் வாஹினி வித்யா மந்திர் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் வீட்டுப்பாடம் முடிக்காத 4 வயது மாணவனுக்கு ஆசிரியர்கள் கொடூரமான தண்டனை வழங்கிய சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மாணவனின் வளர்ச்சிக்கு கல்வி நிலையங்களே அடிப்படையாக உள்ளது. இத்தகைய கல்வி நிலையங்களில் அவ்வப்போது விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுகிறது. ஆசிரியரிடம் அடி வாங்கினால் நிச்சயம் பின்னாளில் பெரிய ஆளாய் வருவோம் என்ற எண்ணம் நம் முந்தைய தலைமுறையினருக்கு இருந்தது. என்னதான் அடித்தாலும் ஆசிரியர் - மாணவன் உறவு என்பது எந்த விரிசலும் இல்லாமல் சுமூகமாக உள்ளது.

ஆனால் இப்போதெல்லாம் ஆசிரியர் - மாணவர் உறவு என்பது மெச்சிக்கொள்ளும்படி இல்லை என்பதே உண்மை. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கொடூரமான தண்டனை வழங்குவது, சக மாணவர்கள் முன்பு கேலி பேசுவது போன்ற விஷயங்கள் வளரும் மாணவர்களுக்கு உளவியல் ரீதியிலான பிரச்னையை உண்டாக்குகிறது. இதனால் மாணவர்கள் விபரீத முடிவு எடுப்பது, ஆசிரியர் மீது தாக்குதல் நடத்துவது போன்ற மோசமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இப்படியான நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்றுள்ள சம்பவம் கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது. 

தலைகீழாக தொங்க விடப்பட்ட அவலம்

சத்தீஸ்கரின் சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள நாராயண்பூர் கிராமத்தில்   ஹன்ஸ் வாஹினி வித்யா மந்திர் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதனிடையே இப்பள்ளியைச் சேர்ந்த இரண்டு பெண் ஆசிரியர்கள், வீட்டுப்பாடத்தை முடிக்காததற்காக நான்கு வயது மாணவனுக்கு கொடூரமான தண்டனை விதித்ததாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும் சம்பவம், பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து குழப்பமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

பள்ளி வளாகத்திற்குள் இருந்த ஒரு மரத்தில் குழந்தையின் ஆடைகளை கழற்றி, கயிற்றால் கட்டி தொங்கவிட்ட சம்பவம் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வீடியோவை அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் பதிவு செய்துள்ளார். காஜல் சாஹு மற்றும் அனுராதா தேவாங்கன் என்ற இரு ஆசிரியர்கள் அருகில் நின்று அந்த மாணவனை மிரட்டும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. 

மன்னிப்பு கேட்ட பள்ளி நிர்வாகம்

மணிக்கணக்கில் உதவியற்ற நிலையில் தொங்கிய அந்த 4 வயது மாணவன் கடுமையாக அழுதுள்ளான், தன்னை கீழே இறக்குமாறு கதறியுள்ளான். பலமுறை ஆசிரியையிடம் கெஞ்சிய நிலையிலும் அவர் மாணவனின் வேண்டுகோளை புறக்கணித்து மோசமாக நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குழந்தையின் தந்தையான சந்தோஷ் குமார் சாஹு, பள்ளி நிர்வாகத்தின் மீது தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மனிதாபிமானமற்ற தண்டனைக்கு காரணமான ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. உடனடியாக வட்டார கல்வி அதிகாரி டி.எஸ். லக்ரா உடனடியாக பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கை அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக மேல் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என கூறியிருந்தார். இதற்கிடையில் மாணவனுக்கு கொடூர தண்டனை வழங்கிய விவகாரத்தில் செய்தது தவறு தான் என பள்ளி நிர்வாகம் ஒப்புக்கொண்டு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட மாணவன் பாதுகாப்பாகவும் காயமின்றியும் இருப்பதாகக் கூறப்பட்டாலும், இந்த சம்பவம் பெற்றோர்கள், ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

ஜூலை 15க்குள் PF கணக்கில் 8.25% வட்டி வரவு.. உங்கள் பேலன்ஸை எப்படி செக் செய்வது?
ஜூலை 15க்குள் PF கணக்கில் 8.25% வட்டி வரவு.. உங்கள் பேலன்ஸை எப்படி செக் செய்வது?
மெட்டா AI: உங்கள் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுகிறதா?
மெட்டா AI: உங்கள் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுகிறதா?
ஏடிஎம் பின் ஏன் 4 இலக்கங்கள்? சுவாரஸ்யமான உளவியல் கதை! விபரம் இதோ..
ஏடிஎம் பின் ஏன் 4 இலக்கங்கள்? சுவாரஸ்யமான உளவியல் கதை! விபரம் இதோ..
Onam special train : ஓணம் பண்டிகை.! சென்னையில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
ஓணம் பண்டிகை.! சென்னையில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
Automatic Cars Under 6 Lakh: வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
Embed widget