![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Breaking News Tamil LIVE: துபாய் எக்ஸ்போ 2022 : தமிழக அரங்கைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..
Breaking News Tamil LIVE Updates: இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
LIVE
![Breaking News Tamil LIVE: துபாய் எக்ஸ்போ 2022 : தமிழக அரங்கைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.. Breaking News Tamil LIVE: துபாய் எக்ஸ்போ 2022 : தமிழக அரங்கைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/25/f0938d3011d9caa8e42dbd64f0c56506_original.jpg)
Background
சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 137 நாட்களுக்கு பிறகு கடந்த மார்ச் 23-ம் தேதி உயர்ந்தது. அதனை அடுத்து, நேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 102.91க்கு விற்பனையானது. டீசல் ஒரு லிட்டருக்கு 92.95 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.103.67க்கு விற்பனையாகிறது. டீசல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.93.71-க்கு விற்பனையாகிறது.
முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். பெட்ரோல், டீசல் விலையை நான்கு மாதங்களுக்கும் மேலாக சீராக வைத்திருந்து நஷ்டத்தை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருவதால், இந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தனர்.
தமிழகத்தில் இன்று ஒருநாளில் 37 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..
தமிழகத்தில் இன்று ஒருநாளில் 37 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..
விருதுநகர் வன்கொடுமை : பாதிக்கப்பட்ட பட்டியலின பெண்ணிடம் விசாரணை நிறைவு செய்தது சிபிசிஐடி..
விருதுநகர் வன்கொடுமை : பாதிக்கப்பட்ட பட்டியலின பெண்ணிடம் விசாரணை நிறைவு செய்தது சிபிசிஐடி..
மீண்டும் யோகி: முதல்வராக பதவியேற்றார் ஆதித்யநாத்.. பதவிப்பிரமாணம் செய்துவைத்தார் ஆனந்தி பென் படேல்
மீண்டும் யோகி: முதல்வராக பதவியேற்றார் ஆதித்யநாத்.. பதவிப்பிரமாணம் செய்துவைத்தார் ஆனந்தி பென் படேல்
விதிமுறைகள் மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மூடி சீல் வைக்கப்படும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
பெருநகர சென்னை மாநகராட்சியில் வழங்கப்பட்ட கட்டட அனுமதியின் அடிப்படையில் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என்றும், விதிமுறைகள் மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மூடி சீல் வைக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
மக்களவையில் இருந்து திமுக, காங்கிரஸ் கட்சிகள் வெளிநடப்பு
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து அமைச்சர் பதில் அளிக்க மறுத்ததால் மக்களவையில் இருந்து திமுக, காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)