Breaking LIVE: எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம்
Breaking Live: தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் அடுத்த 24 மணிநேரத்தில் நடைபெற இருக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

Background
குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு- குளிக்க தடை விதிப்பு!
தொடர் மழை காரணமாக குற்றால அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மூவர் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல். இதில் உயிர்ழந்தவர் ஒருவரின் மீட்கப்பட்டுள்ளார். நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஒருவர் உயிரிழப்பு!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; வளையப்பட்டி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.
விருதுநகர்: பட்டாசுஆலையில் வெடி விபத்து ஒருவர் உயிரிழப்பு!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; வளையப்பட்டி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.
5ஜி: இதுவரை ரூ.1.49 லட்சம் கோடிக்கு ஏலம்- மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் தகவல்
5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் தொடங்கி 9-வது சுற்று நடைபெற்று கொண்டிருப்பதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தியிடம் விசாரணை நிறைவு
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாவிடம் 3ஆம் நாளாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவு பெற்றது.

