![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Breaking News LIVE: தமிழ்நாட்டிற்கு கூடுதலாக உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம் - இந்திய தேர்தல் ஆணையம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
![Breaking News LIVE: தமிழ்நாட்டிற்கு கூடுதலாக உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம் - இந்திய தேர்தல் ஆணையம் Breaking News LIVE: தமிழ்நாட்டிற்கு கூடுதலாக உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம் - இந்திய தேர்தல் ஆணையம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/29/b7132c727427d2a4eca3ba52d2c964cb1716951392477589_original.jpg)
Background
தமிழ்நாட்டில் கோடை மழை முடிந்த நிலையில், கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்படுகிறது. காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது என காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கோயம்பேடு சந்தையில் இருந்து தான் வியாபாரிகள் தங்கள் பகுதிகளில் இருக்கும் கடைகளுக்கு வாங்கிச் செல்வார்கள். இதனால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உதாரணத்திற்கு கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வியாபாரத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ. 70 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
அதேபோல், கோடை மழை முடிவுக்கு வந்துள்ள நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக 41.3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், 2024 மக்களவைத் தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப்பதிவிற்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி ஏபிபி செய்தி குழுமத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அமோக ஆதரவுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்ததோடு, இடஒதுக்கீடுகள்,மேற்கு வங்க மாநில ஊழல் மற்றும் அந்த மாநிலத்தில் ரெமால் புயல் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் விரிவாக பேசியுள்ளார்.
ரூ. 6.97 கோடி ஜிஎஸ்டி செலுத்த பிறப்பித்த ஆணைக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஜிஎஸ்டி கூடுதல் இயக்குநரிடமிருந்து தமிழ்நாடு ஒழுங்குமுறை மின்பகிர்மானத்திற்கு பிறப்பிக்கப்பட்ட ரூ.6.97 கோடி ஜிஎஸ்டி செலுத்தவேண்டும் என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
Breaking News LIVE: சென்னையில் அதிகபட்ச வெயில் பதிவானது!
சென்னையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இந்தாண்டில் சென்னையில் அதிகபட்ச அளவு இது. சென்னை மீனம்பாக்கத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது.
தீடீரென ரத்து செய்யப்பட்ட விமான சேவை - சேலத்தில் தவிக்கும் பயணிகள்!
பெங்களூரில் இருந்து சேலம் வழியாக கொச்சி செல்லும் விமானமும், கொச்சியில் இருந்து பெங்களூரு செல்லும் விமானமும் ரத்து செய்யப்பட்டதால் சேலம் விமான நிலையத்தில் பயணிகள் தவித்து வருகின்றனர். மேலும் விமானக் கட்டணத்தினை விமான நிறுவனம் திருப்பித் தரவேண்டும் எனவும் முறையிட்டு வருகின்றனர்.
Breaking News LIVE: தமிழ்நாட்டிற்கு கூடுதலாக உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம் - இந்திய தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டிற்கு கூடுதலாக உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Breaking News LIVE: சிங்கபூரில் இருந்து வந்த பயணி; ஒரு கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் - திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு!
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணி ஒருவரிடம் இருந்து சுமார் ரூ. 1.3 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தினை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)