Breaking News LIVE: திருமண நாளை முன்னிட்டு திருப்பதியில் அன்புமணி ராமதாஸ் குடும்பத்துடன் தரிசனம்
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்

Background
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்புமணி ராமதாஸ் குடும்பத்துடன் தரிசனம்
தன்னுடைய திருமண நாளை ஒட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் குடும்பத்தோடு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார்
Breaking News LIVE: நாட்றம்பள்ளி: கல்குவாரி அமைக்க எதிர்ப்பு - பொதுமக்கள் சுமார் 2மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி கல்லூர் பகுதியில் கல்குவாரி அமைக்கப்படுவதாக தெரிகிறது.
அதன் காரணமாக அப்பகுதியில் கல்குவாரி அமைக்கப்பட்டால் வனவிலங்குகள் பாதிக்கப்படும் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் மற்றும் பெரியார் முதல் சிறியவர்கள் வரை பல்வேறு நோய் தொற்று ஏற்படும் எனவே அப்பகுதி கல்குவாரி அமைக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அளித்துள்ளனர்.
ஆனால் கல்லியூர் பகுதியில் மீண்டும் கல்வாரி அமைக்கப் பணிகள் நடைபெற்றதால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் திடீரென பச்சூர் வழியாக குப்பம் செல்லும் சாலையில் சென்றாய சுவாமி கோவில் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
Breaking News LIVE: திரைத்துறையில் பாலியல் சுரண்டல்கள் முடிவுக்கு வர வேண்டும் - குஷ்பு
மலையாள திரையுலகில் எழுந்துள்ள பாலியல் புகார்கள் மனதை உலுக்குகிறது. பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுகளை முறியடிக்க ஹேமா கமிட்டி அறிக்கை அவசியமானதாக அமைகிறது. பாலியல் வன்கொடுமைகளை யாரும் மறைக்க வேண்டியதில்லை. உங்கள் கண்ணியம், மரியாதையை ஒருபோதும் சமரசம் செய்ய தேவையில்லை. திரைப்படத்துறையில் பாலியல் சீண்டல்கள் முடிவுக்கு வர வேண்டும்
💔 This moment of #MeToo prevailing in our industry breaks you. Kudos to the women who have stood their ground and emerged victorious. ✊ The #HemaCommittee was much needed to break the abuse. But will it?
— KhushbuSundar (@khushsundar) August 28, 2024
Abuse, asking for sexual favors, and expecting women to compromise to…
Breaking News LIVE: நீலகிரி: மான் இறைச்சி பறிமுதல் - 15 பேர் கைது
நீலகிரி கோத்தகிரி அருகே மான் இறைச்சியை பறிமுதல் செய்து 15 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன் இருச்சக்கர வாகனத்தில் மான் இறைச்சி கொண்டு சென்ற பொம்மன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரனையில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோத்தகிரி அருகே இறைச்சிக்காக மான் வேட்டையாடி சமைத்து சாப்பிடுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Breaking News LIVE: தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,715க்கும் சவரன் ரூ.53,720க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ. 93.50க்கு விற்பனை ஆகிறது.

