Breaking News LIVE, Aug 07: ஆழமான அன்பை பரிசாக பெற்றுள்ளீர்கள் - நயன்தாரா
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதியான இன்று நாட்டில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளை இங்கு காணலாம். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து ஏபிபி நாடுவுடன் இணைந்திருங்கள்

Background
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதியான இன்று நாட்டில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளை இங்கு காணலாம். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து ஏபிபி நாடுவுடன் இணைந்திருங்கள்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 6வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதி பேரணி நடத்துகின்றனர்.
அதேபோல், தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளையில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னை வருகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது. வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கணை வினேஷ் போகத் வரலாற்று சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டிக்கு சென்ற முதல் வீராங்கணை என்ற சாதனையை படைத்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி கடைசிவரை போராடி தோல்வியை சந்தித்தது. 2-3 என்ற செட் கணக்கில் ஜெர்மனியிடம் தோற்றது.
காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
இன்னும் பல செய்திகளையும் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபி நாடுவுடன் இணைந்திருங்கள்.
மனு பாக்கர், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார்
ஒலிம்பிக்கில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற மனு பாக்கர், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார்
சஞ்சய் (10), பிரியதர்ஷினி (10) மற்றும் சுபஸ்ரீ (8) ஆகிய மூன்று குழந்தைகளின் சடலங்களும் மீட்கப்பட்டு போலீசார் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கோனேரிகுப்பம் கிராமத்தில் நாவல் பழம் பறிக்க, அங்குள்ள ஓடையை கடந்து செல்ல முயன்றபோது மூன்று குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சஞ்சய் (10), பிரியதர்ஷினி (10) மற்றும் சுபஸ்ரீ (8) ஆகிய மூன்று குழந்தைகளின் சடலங்களும் மீட்கப்பட்டு போலீசார் விசாரணை





















