(Source: ECI | ABP NEWS)
Breaking News LIVE 17th oct 2024: அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Background
- சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்
- சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்த அதிகனமழைக்கான ரெட் அலர்ட் வாபஸ் – சென்னைவாசிகள் நிம்மதி
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும்
- மழையின் தாக்கம் குறைந்ததால் புதுச்சேரியில் பள்ளி,கல்லூரிகள் இன்று வழக்கம்போல செயல்படும்
- பள்ளி கட்டிடங்களை முறையாக ஆய்வு செய்து பின்னர் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் – தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
- கட்டுப்பாட்டு அறைக்கு 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 963 அழைப்புகள்
- சென்னையில் மழைநீர் தேங்கிய 542 இடங்களில் 501 இடங்களில் மழைநீர் முற்றிலும் அகற்றம்
- சென்னையில் கனமழை நின்ற பிறகும் 3வது நாளாக வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டுள்ள கார்கள்
- தருமபுரியில் அரசு பேருந்துக்குள் ஒழுகிய மழைநீர் – பயணிகள் பெரும் அவதி
- திருச்சியில் இருந்து ஷார்ஜா சென்ற விமானத்தில் மீண்டும் தொழில்நுட்ப கோளாறு
- விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சத்தீஸ்கர் சிறுவன் கைது
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் தடையின்றி பருப்பு, பாமாயில் விநியோகம் – அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
- சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூபாய் 1 லட்சம் பறிமுதல்
- தேவேந்திர குல வேளாளர் சங்கத் தலைவர் குமுளி ராஜ்குமார் திருச்சி போலீசாரால் கைது – எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட ராஜ்குமார் ஆதரவாளர்கள்
- போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற 3 பெண்கள் உள்பட 9 பேர் கைது
- புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு விரைவில் தீபாவளி போனஸ்
- கனட பிரதமருடன் சீக்கிய அமைப்புக்கு தொடர்பு உள்ளது – காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்பன்சிங் அறிவிப்பால் பரபரப்பு
- இந்திய – கனடா உறவு விவகாரத்தில் கனட பிரதமருக்கு அழுத்தம்
- ஹரியானா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சைனி இன்று பதவியேற்பு
- இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து ; இன்று போட்டி முன்கூட்டியே தொடங்கும் என அறிவிப்பு
அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் - சென்னை உயர்நீதிமன்றம்
கொலை வழக்கில் ஆயுள் கைதியாக புழல் சிறையில் உள்ள வீரபாரதி தன்னை முன் கூட்டியே விடுவிக்க கோரி மனு செய்திருந்தார். அதில் முன்கூட்டியே விடுவிக்கும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் எனவும் அதை ஆளுநர் மீற முடியாது எனவும் கருத்து தெரிவித்துள்ளது. மனுதாரரை முன் கூட்டியே விடுதலை செய்யக்கோரும் மனுவை மீண்டும் பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ளுநர் கட்டுப்பட்டவர்; அதை ஆளுநர் மீற முடியாது.
Breaking News LIVE 17th oct 2024: நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 17, 2024





















