மேலும் அறிய

மகாராஷ்டிர அரசியலில் அடுத்து என்ன?...சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் திட்டம் இதுதான்...

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், இந்த பிரச்சினைக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என பாஜக மறுப்பு தெரிவித்து வருகிறது.

மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சரும் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிஸ், டெல்லியில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். இந்த சந்திப்பு கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் நடைபெற்றது. மும்பைக்கு சென்று மகாராஷ்டிர ஆளுநரை சந்திக்க தயாராக உள்ளதாக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே குவஹாத்தியில் கூறிய நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.


மகாராஷ்டிர அரசியலில் அடுத்து என்ன?...சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் திட்டம் இதுதான்...

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், இந்த பிரச்சினைக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என பாஜக மறுப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், அதிருப்தி எம்எல்ஏக்கள் முதலில் பாஜக ஆட்சியில் உள்ள குஜராத்திலும் பின்னர் அஸ்ஸாமிலும்தான் தங்கியிருந்தனர். இதற்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

அஸ்ஸாமில் மகாராஷ்டிர எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதியில் அவர்களுக்கு உதவியாக பல பாஜக எம்எல்ஏக்கள் இருப்பதாக தகவல் வெளியானது. குறிப்பாக, விடுதிக்கு அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா வந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. 

சமீபத்தில், தங்களுக்கு ஆதரவாக பெரிய தேசிய கட்சி இருப்பதாக ஷிண்டே ஒப்பு கொண்டிருந்தார். ஆனால், கட்சியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.


மகாராஷ்டிர அரசியலில் அடுத்து என்ன?...சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் திட்டம் இதுதான்...

மஹாராஷ்டிர மாநிலத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் போர்க்கொடித் தூக்கியுள்ளனர். கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நடந்து வரும் இந்த அரசியல் சதுரங்கம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. உத்தவ் தாக்கரேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள நட்சத்திர விடுதியில் முகாமிட்டுள்ளனர்.

சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்யும்படி மகாராஷ்டிர துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வாலிடம், சிவசேனா கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதனை ஏற்ற நர்ஹரி ஜிர்வால், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 எம் எல் ஏக்களுக்கு தகுதி நீக்கம்  நோட்டீஸ் அளித்தார். அந்த நோட்டீஸில் கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன்? கட்சிக்கு விரோதமாக செயல்படும் உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது? என்பது உள்ளிட்ட  கேள்விகளுக்கு பதிலளிக்கும் படி வலியுறுத்தியிருந்தார்.

இந்த நோட்டீஸை எதிர்த்து அதிருப்தி எம்எல்ஏக்கள் சார்பாக ஏக்நாத் ஷிண்டே உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடந்திருந்தார். அந்த மனுவில், துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பியிருப்பது அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது என்றும், தகுதி நீக்கம் செய்யும் மனு தொடர்பாக துணை சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட ஏக்நாத் ஷிண்டே தரப்பு, மகாராஷ்டிராவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் சிவசேனா கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சிவசேனாவின் 38 எம்எல்ஏக்கள் விலக்கிக் கொண்டுள்ளதால் அந்த அரசு பெரும்பான்மை இழந்து விட்டது என்று தெரிவித்துள்ளது. அதே போல சட்டப்பேரவை கட்சித் தலைவராக சிவசேனாவைச் சேர்ந்த அஜய் சவுத்ரி நியமனமும் செல்லாது. சிவசேனாவின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் இந்த முடிவை ஆதரிக்கவில்லை என்று வாதிட்டனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7131
Active
10976
Recovered
78
Deaths
Last Updated: Fri 13 June, 2025 at 12:16 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS Vs Stalin: நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
Netanyahu Spoke to Modi: போருக்கு நடுவே இந்திய பிரதமருடன் பேசிய நெதன்யாகு; மோடி வலியுறுத்தியது என்ன தெரியுமா.?
போருக்கு நடுவே இந்திய பிரதமருடன் பேசிய நெதன்யாகு; மோடி வலியுறுத்தியது என்ன தெரியுமா.?
Trump Warns Iran: மாறி மாறி தாக்கிக்கொண்ட இஸ்ரேல்-ஈரான்; ட்ரம்ப் கொடுத்த வார்னிங் - மத்திய கிழக்கில் பதற்றம்
மாறி மாறி தாக்கிக்கொண்ட இஸ்ரேல்-ஈரான்; ட்ரம்ப் கொடுத்த வார்னிங் - மத்திய கிழக்கில் பதற்றம்
Air India Black Box: சீக்கிரமே உண்மை தெரிஞ்சுடும் - விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
சீக்கிரமே உண்மை தெரிஞ்சுடும் - விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நமக்கு எதுக்கு அதிக சீட்” வார்னிங் கொடுத்த அமித்ஷா! EPS-ஐ வைத்து மோடியின் ப்ளான்பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Driving

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Stalin: நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
Netanyahu Spoke to Modi: போருக்கு நடுவே இந்திய பிரதமருடன் பேசிய நெதன்யாகு; மோடி வலியுறுத்தியது என்ன தெரியுமா.?
போருக்கு நடுவே இந்திய பிரதமருடன் பேசிய நெதன்யாகு; மோடி வலியுறுத்தியது என்ன தெரியுமா.?
Trump Warns Iran: மாறி மாறி தாக்கிக்கொண்ட இஸ்ரேல்-ஈரான்; ட்ரம்ப் கொடுத்த வார்னிங் - மத்திய கிழக்கில் பதற்றம்
மாறி மாறி தாக்கிக்கொண்ட இஸ்ரேல்-ஈரான்; ட்ரம்ப் கொடுத்த வார்னிங் - மத்திய கிழக்கில் பதற்றம்
Air India Black Box: சீக்கிரமே உண்மை தெரிஞ்சுடும் - விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
சீக்கிரமே உண்மை தெரிஞ்சுடும் - விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
Annamalai's Plan: கூட்டணிக்குள் குண்டு வைத்த அண்ணாமலை.!! அதிமுக-வை சீண்டும் வகையில் பேச்சு - உடைக்க திட்டமா.?
கூட்டணிக்குள் குண்டு வைத்த அண்ணாமலை.!! அதிமுக-வை சீண்டும் வகையில் பேச்சு - உடைக்க திட்டமா.?
வெளியானது 10ஆம் வகுப்பு விடைத்தாள் நகல்; எங்கே, எப்படி பெறலாம்?- வழிமுறைகள் இதோ!
வெளியானது 10ஆம் வகுப்பு விடைத்தாள் நகல்; எங்கே, எப்படி பெறலாம்?- வழிமுறைகள் இதோ!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. இதோ கடைசி வாய்ப்பு- டிஎன்பிஎஸ்சி அழைப்பு
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. இதோ கடைசி வாய்ப்பு- டிஎன்பிஎஸ்சி அழைப்பு
NEET Cut Off Marks 2025: நாளை வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்; யார் யாருக்கு எவ்வளவு கட் ஆஃப் மதிப்பெண் தேவை?
NEET Cut Off Marks 2025: நாளை வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்; யார் யாருக்கு எவ்வளவு கட் ஆஃப் மதிப்பெண் தேவை?
Embed widget