மேலும் அறிய

வங்கியில் தவறாக அனுப்பிய பணம்: பிரதமர் மோடி அனுப்பியதாக திருப்பித்தர மறுக்கும் நபர்!

பீகாரின் காகரியா மாவட்டத்தில் வங்கியின் தவறால் தனது கணக்கில் செலுத்தப்பட்ட 5 லட்ச ரூபாயைத் திருப்பி தர மறுத்துள்ளதோடு, அந்தப் பணம் பிரதமர் நரேந்திர மோடியால் தனக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். 

பீகார் மாநிலம் காகரியா மாவட்டத்தில் வங்கியின் தவறால் தனது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 5 லட்ச ரூபாயைத் திருப்பி தர மறுத்துள்ளதோடு, அந்தப் பணம் பிரதமர் நரேந்திர மோடியால் தனக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறி மிரள வைத்துள்ளார். 

பீகார் மாநிலம் காகரியா மாவட்டத்தில் கிராமின் வங்கி செயல்பட்டு வருகிறது. கிராமப் புறத்தில் செயல்பட்டு வரும் இந்த வங்கி, அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்குப் பயன் தரும் வகையில் கட்டப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், இந்த வங்கியில் இருந்து பணப் பரிவர்த்தனை ஒன்றின் போது, அருகில் உள்ள பக்தியார்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் தாஸ் என்பவரின் வங்கிக் கணக்கிற்கு, 5.5 லட்சம் ரூபாய் பணம் தவறுதலாகச் சென்றுள்ளது. இதனையடுத்து, வங்கி அலுவலர்கள் பக்தியார்பூர் எல்லைக்கு உட்பட்ட மான்சி காவல் நிலையத்தில் புகார் அளித்து, ரஞ்சித் தாஸிடம் இருந்து 5.5 லட்சம் ரூபாய் பணத்தை மீட்டுத் தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எனினும், பல முறை கோரிக்கை விடுத்தும், ரஞ்சித் தாஸ் பணத்தைத் திரும்ப அளிப்பதற்கு மறுத்துள்ளதோடு, முழுத் தொகையையும் செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வங்கியில் தவறாக அனுப்பிய பணம்: பிரதமர் மோடி அனுப்பியதாக திருப்பித்தர மறுக்கும் நபர்!

`கடந்த மார்ச் மாதம் எனது வங்கிக் கணக்கில் 5.5 லட்சம் ரூபாய் பணம் வந்தடைந்த போது நான் மிகவும் மகிழ்ந்தேன். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் பணம் அனுப்புதாக வாக்குறுதி கொடுத்துள்ளார் என நான் நம்புகிறேன். அதனால் இந்தப் பணம் எனக்கு கிடைத்த போது, பிரதமர் மோடி எனக்கு அனுப்பிய முதல் தவணை இது என நான் எண்ணி, முழுத் தொகையையும் செலவு செய்துவிட்டேன். இப்போது என்னிடம் எனது கையிலோ, வங்கிக் கணக்கிலோ எந்தப் பணமும் இல்லை’ எனக் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார் ரஞ்சித் தாஸ். இவர் மான்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 2013ஆம் ஆண்டு, சத்திஸ்கர் மாநிலம் காங்கர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, `இந்தியாவின் ஊழல் அரசியல்வாதிகள் தங்கள் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் சேமித்துள்ளனர் என உலகமே அறியும். எனது அருமை காங்கர் சகோதர, சகோதரிகளே! இந்தப் பணம் நமக்கு வந்து சேர வேண்டும் அல்லவா? வெளிநாடுகளில் இருக்கும் இந்தப் பணத்தை நாம் எடுத்து வந்தால், ஒவ்வொரு ஏழை இந்தியனுக்கும் சுமார் 15 முதல் 20 லட்சம் வரை பணம் கிடைக்கும். அங்கு அவ்வளவு பணம் இருக்கிறது’ என்று கூறியிருந்தது, பலராலும் பிரதமர் மோடி அனைவருக்கும் 15 லட்சம் ரூபாய் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவார் எனப் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வங்கியில் தவறாக அனுப்பிய பணம்: பிரதமர் மோடி அனுப்பியதாக திருப்பித்தர மறுக்கும் நபர்!

இந்த விவகாரம் குறித்து மான்சி காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி தீபக் குமார், `வங்கி மேலாளர் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் ரஞ்சித் தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்தகட்ட விசாரணைகள் நடைபெற்று வருகின்றன’ எனக் கூறியுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget