![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
காதலனுக்கே மனைவியை கல்யாணம் செய்து வைத்த சம்பவம்.. சினிமாவையே மிஞ்சிய உண்மை..
பீகாரில் மனைவியை காதலித்த நபருடனே கணவர் திருமணம் செய்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![காதலனுக்கே மனைவியை கல்யாணம் செய்து வைத்த சம்பவம்.. சினிமாவையே மிஞ்சிய உண்மை.. Bihar Man Gets Wife Married to Her Lover know what was happened காதலனுக்கே மனைவியை கல்யாணம் செய்து வைத்த சம்பவம்.. சினிமாவையே மிஞ்சிய உண்மை..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/16/6caa7f907a7abcc2095c368019b93e031700141712386102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திரைப்படங்களில்தான் நாம் திருமணமான மனைவியை அவரது காதலுடன் கணவர் சேர்த்து வைத்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால், நிஜ வாழ்க்கையில் இது மிகவும் கடினமான ஒன்று. அப்படி ஒரு சம்பவம் தற்போது பீகாரில் அரங்கேறியுள்ளது.
மனைவியின் காதல்:
பீகாரில் வசித்து வருபவர் அஜய்குமார். இவருக்கு வயது 24. இவரது மனைவி காஜல். இவருக்கு வயது 22. இவர்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு திருமணம் ஆகியது. திருமணமாகி 5 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த சூழலில், காஜலுக்கு அதே பகுதியில் வசித்து வந்த ராஜ்குமார் தாக்கூர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், இவர்களது காதல் விவகாரம் காஜலின் கணவர் அஜய்குமாருக்கு தெரிய வந்துள்ளது.
காதலருடன் திருமணம் செய்து வைத்த கணவர்:
மனைவி வேறு ஒரு நபரை காதலிக்கிறார் என்று அறிந்த அஜய்குமார் அதிர்ச்சியடைந்துள்ளார். தனக்காகவும், தன் குழந்தைகளுக்காகவும் காஜலிடம் பேசியுள்ளார். ஆனால், அவர் ராஜ்குமாரை தீவிரமாக காதலிப்பதை உணர்ந்த அவர் இனியும் காஜலுடன் வாழ்வது சரியல்ல என முடிவு செய்தார். மேலும், காஜலை அவரது காதலுடனே திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.
இதையடுத்து, அதே ஊரில் உள்ள கோயிலில் தனது மனைவி காஜலுக்கும், ராஜ்குமார் தாக்கூருக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார். அஜய்குமாரின் இந்த செயலுக்கு அந்த ஊர்க்காரர்களும், அவர்களது உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், தனது முடிவில் இருந்து பின்வாங்காத அஜய்குமார் தனது மனைவி காஜலுக்கும், அவர் காதலித்த ராஜ்குமாருக்கும் அதே ஊரில் உள்ள கோயிலில் திருமணம் செய்து வைத்தார்.
அவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததன் மூலமாக தனது ஊர்காரர்களிடம் இருந்தும், அவர்களது குடும்பத்தினரிடம் இருந்தும் காஜல் – ராஜ்குமாரை காப்பாற்றலாம் என்று அஜய்குமார் கருதியதாலே இந்த ஏற்பாட்டை அவர் செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும், காஜல் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் தன்னுடனே அழைத்துச் செல்வதாகவும் கூறியுள்ளார்.
கணவனே தனது மனைவியின் காதலுக்காக அவர் விரும்பிய நபருடன் அவருக்கு ஊரார் முன்னிலையில் திருமணம் செய்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Crime: பெண் மருத்துவருக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்! வீடியோ எடுத்து மிரட்டல்!
மேலும் படிக்க: INDIAN NAVY: கடற்கொள்ளைக்கு செக்! இந்திய கடற்படையின் மூவ்! கினியா வளைகுடாவில் ஐஎன்எஸ் சுமேதா ரோந்து வெற்றி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)