மேலும் அறிய

Bihar Kidney Issue : மருத்துவரின் சிறுநீரகங்களை கேட்கும் பீகார் பெண்...அதிர்ச்சியூட்டும் காரணங்கள் இதோ...

பீகாரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் சிறுநீரகங்களை திருடியதற்காக, மருத்துவரின் சிறுநீரகங்களை எடுத்து தனக்கு பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

பீகாரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் சிறுநீரகங்களை திருடியதற்காக, மருத்துவரின் சிறுநீரகங்களை எடுத்து தனக்கு பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். செப்டம்பர் மாதத்தில் தனியார்  மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்ற சுனிதாதேவிக்கு அறுவை சிகிச்சை செய்து, இரண்டு சிறுநீரகங்கள் திருடப்பட்டது அண்மையில் தெரியவந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த சுனிதா தேவி(38).  கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்காக பாரியார்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செப்டம்பர் 3-ஆம் தேதி சென்றுள்ளார். அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். பின்பு, சில நாட்களாகவே சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

பின்பு, முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவித்தனர்.அதாவது,  சுனிதா தேவியின் சிறுநீரகங்கள் இல்லை எனவும் அவை இல்லாமல் அவரால் உயிர்வாழ முடியாது என்றும் மருத்துவர்கள் அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவித்தனர். 


Bihar Kidney Issue : மருத்துவரின் சிறுநீரகங்களை கேட்கும் பீகார் பெண்...அதிர்ச்சியூட்டும் காரணங்கள் இதோ...

பின்பு, ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்து வருகிறார். சுனிதாவை சிகிச்சைக்காக பாட்னாவிலுள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கழகத்திற்கு பரிந்துரைத்தனர். அங்கு சிகிச்சைக்கு பின், மீண்டும் இந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சுனிதாவுக்கு சிறுநீரகம் இல்லாததால், ஒரு நாள் கூட டயாலிசிஸ் செய்யவில்லை என்றால், அவர் இறக்க நேரிடும் என்று முசாபர்பூர் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
இதுகுறித்து தேவியின் குடும்பத்தினர் மாவட்ட காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.  அவர்கள் அளித்த புகாரின் பேரில் கருப்பை அறுவை சிகிச்சை செய்த கிளிக் உரிமையாளர் பவன்குமார் மற்றும் மருத்துவர் ஆர்.கே.சிங் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த கிளினிக்கானது பதிவு செய்யப்படவில்லை என்றும், மருத்துவரின் கல்வித் தகுதியும் போலியானது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள மருத்துவர் ஆர்.கே.சிங்கை தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.

இந்த துயரம் குறித்து, சுனிதாதேவி பேசியதாவது, ”உடனடியாக இந்த மோசடியில் ஈடுபட்ட மருத்துவர் கைது செய்யப்பட்டு, அவரது இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டு தனக்கு பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார். "மருத்துவரின் சிறுநீரகம் பொருத்தப்பட்டால் தான் என்னால் உயிர் வாழ முடியும் என்றார். இப்படி செய்தால் மட்டுமே , அடுத்து இதுபோன்று மோசடியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு உகந்த பாடமாக இருக்கும். பணத்துக்காக ஏழைகளின் உயிரோடு விளையாட மாட்டார்கள்” என அவர் தெரிவித்தார்.

"தனக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களை கவனித்துக்கொள்ள நான் உயிருடன் இருக்க வேண்டும் என சுனிதாதேவி தெரிவித்தார். கருப்பை பிரச்னைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது அறுவை சிகிச்சை செய்து இரண்டு சிறுநீரகங்களையும் மருத்துவர்கள் அகற்றி விட்டதாகவும்,  அதன் பிறகு தனது உடல்நிலை மோசமடைந்தது எனவும் மற்றொரு மருத்துவமனைக்கு சென்றபோது தான், தனக்கு நேர்ந்த துயரம் குறித்து தெரிய வந்தது எனக் கூறினார்.


மேலும் படிக்க

அடுத்தடுத்து அத்துமீறல்: 14 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை; மீனவர்களுக்கு தொடரும் அவலம்!



தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget