மேலும் அறிய

Bihar accident: வேகமாக வந்த லாரி.. மத ஊர்வலத்தில் பயங்கர விபத்து.. குழந்தைகள், பெண்கள் என 12 பேர் உயிரிழப்பு..!

வடக்கு பீகார் மாவட்டத்தின் தேஸ்ரி காவல் நிலையப் பகுதியில் மாநிலத் தலைநகரில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் இரவு 9 மணியளவில் விபத்து நிகழ்ந்தது.

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை மத ஊர்வலம் நடைபெற்று கொண்டிருக்கும்போது அதன் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

வடக்கு பீகார் மாவட்டத்தின் தேஸ்ரி காவல் நிலையப் பகுதியில் மாநிலத் தலைநகரில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் இரவு 9 மணியளவில் விபத்து நிகழ்ந்தது. சாலையோரத்தில் உள்ள அத்தி மரத்தின் முன் கூடியிருந்த மக்கள் உள்ளூர் தெய்வமான பூமியா பாபாவிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது, அவர்கள் மீது லாரி மோதியது.

இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "பீகார் மாநிலம் வைஷாலியில் நடந்த விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த குடும்பங்களுக்கு என் அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.

 

இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் PMNRF (பிரதமரின் தேசிய நிவாரண நிதி)யிலிருந்து 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும்" என பதிவிட்டுள்ளார்.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததுடன், விபத்து பற்றிய செய்தி வேதனையளிப்பதாக தெரிவித்திருந்தார். மஹுவா சட்டப்பேரவை தொகுதியின் கீழ் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த தொகுதியின் எம்எல்ஏ முகேஷ் ரூஷன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். 

"குறைந்தது ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பலர் ஹாஜிபூரில் உள்ள சதர் மருத்துவமனைக்கு (மாவட்டத் தலைமையகம்) கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கொண்டு செல்லும்போது மூவர் இறந்தனர். நிலைமை மோசமாக உள்ளவர்கள் பாட்னாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்" என முகேஷ் ரூஷன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வைஷாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணீஷ் குமார் கூறுகையில், "திருமணங்கள் தொடர்பான வழக்கத்தின் ஒரு பகுதியாக ஊர்வலம் நடத்தப்பட்டது. அருகில் உள்ள சுல்தான்பூர் கிராமத்தில் வசிக்கும் ஒருவரின் வீட்டில் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது. 

மஹ்னார்-ஹாஜிபூர் நெடுஞ்சாலையில் வேகமாக வந்த டிரக் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அவர் விபத்தில் சேதமடைந்த வாகனத்திற்குள் சிக்கிக் கொண்டார். அவர் இறந்திருக்கலாம் என்று நாங்கள் அஞ்சுகிறோம்" என்றார். பலியானவர்களில் குறைந்தது நான்கு குழந்தைகள் இருக்கலாம் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் தாமதமாக வந்ததாகக் கூறி மக்கள் அங்கு கோஷம் எழுப்பி வருகின்றனர். இதற்கிடையில், விபத்து குறித்து இரங்கல் தெரிவித்த பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் விதிமுறைகளின்படி இழப்பீடு விரைவாக வழங்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
Embed widget