மேலும் அறிய

பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்த சோனியா காந்தி..? கர்நாடக துணை முதல்வர் பதவிக்கு ஒப்புக்கொண்ட டி.கே. சிவக்குமார்..!

நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் முடிவுக்கு வராத பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி என கட்சி வட்டாரங்கள் கூறுகிறது.

கர்நாடக தேர்தலில் மிக பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தாலும் முதலமைச்சரை தேர்வு செய்வதில் தொடர் பிரச்னை நீடித்து வந்தது. பதவியை முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு வழங்குவதா? கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமாருக்கு வழங்குவதா? என குழப்பம் நீடித்து வந்த நிலையில், தற்போது அந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

பிடிவாதமாக இருந்த டி.கே. சிவக்குமார்:

சித்தராமையாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்கவும் டி.கே.சிவக்குமாருக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கவும் காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் முடிவுக்கு வராத பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி என கட்சி வட்டாரங்கள் கூறுகிறது.

முதலமைச்சர் பதவி தனது தனக்கு தர வேண்டும் என பிடிவாதமாக இருந்த டி.கே.சிவக்குமாரிடம், நேற்று மாலை சோனியா காந்தி பேசியுள்ளார். இதற்கு பிறகுதான், துணை முதலமைச்சர் பதவியை ஏற்று கொண்டுள்ளார் டி.கே.சிவக்குமார். "தியாகம் செய்ய முடிவு செய்துள்ளேன். கட்சியின் நலன் கருதி கர்நாடகாவின் துணை முதலமைச்சராக இருக்க ஒப்புக்கொண்டேன்" என சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "நாங்கள் அதை மேலிடத்திற்கு விட்டுவிட்டோம். அவர்கள் முடிவு செய்கிறார்கள். தனிப்பட்ட நலனை விட கட்சியின் நலன் பெரிது. தலைமையின் முடிவை ஏற்க வேண்டும். இதுதான் இறுதி தீர்ப்பு. நம்மில் பலர் நீதிமன்றத்தில் வாதிடுவோம். இறுதியில், நீதிபதி கூறியதை ஏற்க வேண்டும்" என்றார்.

பிரச்னையை தீர்த்து வைத்த சோனியா காந்தி:

கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏக்களின் ஆதரவு, சித்தராமையாவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய டி.கே.சிவக்குமார், சித்தராமையாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்க ஒப்பு கொள்ளவில்லை.  

இதற்கிடையே, சித்தராமையா, சிவகுமார் ஆகியோர் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை சந்தித்து பேசினர். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, "முதலமைச்சர் பதவி விவகாரத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்" என்றார்.

வரும் சனிக்கிழமை நடைபெறும் கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் ஒத்து கருத்துடைய எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், இதில் கலந்து கொள்ள உள்ளனர்.

கர்நாடக அரசியல் வரலாற்றில் இதுவரை மூன்று முதலமைச்சர்கள்தான் ஐந்தாண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ளனர். அதில், ஒருவர் சித்தராமையா. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையில், கர்நாடக முதலமைச்சராக பதவி வகித்தார். மக்கள் மத்தியில் செல்வாக்க படைத்த தலைவரான இவர் ஆட்சியில்தான், கர்நாடகவுக்கு தனிக்கொடு அறிவிக்கப்பட்டது. 

இந்தி திணிப்புக்கு எதிரான நடவடிக்கையை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget