மேலும் அறிய

வெந்நீரை உடலில் ஊற்றி கொடூரம்.. இரும்புக்கம்பியால் சூடு..! 4 வயது தத்து மகளை சித்திரவதை செய்த மருத்துவ தம்பதி...!

4 வயது பெண் குழந்தையை அவர்களது பெற்றோர் கொடுமைபடுத்திய சம்பவம் அசாம் மாநிலத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற செயல்கள் மனதை உலுக்கும் வகையில் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, அசாமில் நடந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அசாமில் கொடூரம்:

4 வயது பெண் குழந்தையை அவர்களது பெற்றோர் கொடுமைப்படுத்திய சம்பவம் அசாம் மாநிலத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பெற்றோரில், கணவன், மனைவி என இருவரும் மருத்துவர்கள் ஆவார்கள். கவுகாத்தியில் வசித்து வருகின்றனர். 

சில ஆண்டுகளுக்கு முன்புதான், அந்த குழந்தையை அவர்கள் தத்தெடுத்துள்ளனர். மொட்டை மாடியில் கடும் வெயிலுக்கு மத்தியில் அக்குழந்தை தூணில் கட்டிவைக்கப்பட்டுள்ளது. அதனை  புகைப்படமாக எடுத்த, மருத்துவர்களின் அண்டை வீட்டார், காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.

இதையடுத்து, இந்த சம்பவம், வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மருத்து தம்பதிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். இரைப்பை குடல் மற்றும் மேம்பட்ட பொது அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் வாலியுல் இஸ்லாம், கவுகாத்தியின் மணிப்பூரி பஸ்தி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சூடான இரும்பு கம்பியால் அடித்து உதைக்கப்பட்ட குழந்தை:

மனநல மருத்துவரான அவரது மனைவி சங்கீதா பருவா, மேகாலயாவின் ரிபோய் மாவட்டத்தில் பதுங்கியிருந்த வீட்டில் இருந்து நேற்று இரவு கைது செய்யப்பட்டார். கொலை முயற்சி (307), கடுமையான காயத்தை ஏற்படுத்துதல் (325) உட்பட இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பல பிரிவுகளின் கீழ் தம்பதியினர் மீது போலீஸார் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பு பேசுகையில், "முதற்கட்ட விசாரணையில், டாக்டர் பருவா அந்த சிறுமியை சூடான இரும்பு கம்பியால் அடித்ததையும், குழந்தையின் உடலில் வெந்நீரை ஊற்றுவதையும் கண்டறிந்தோம். விசாரணையில் பாருவா தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

கொடூர தண்டனைகள்:

அந்தத் தம்பதியின் வீட்டு உதவியாளரையும் விசாரணை செய்தோம். சொன்னதை கேட்காததாலும், குறும்பு தனமாக நடந்து கொண்டதாலும் அதற்கு தண்டனையாக அந்த சிறுமியை கட்டி வைக்கச் சொன்னதாக வீட்டின் உதவியாளர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த தம்பதி, சில ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளை தத்தெடுத்தனர். கடந்த காலங்களில் கூட, குழந்தையை கொடுமைப்படுத்தியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால் அதிகாரப்பூர்வ புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை" என்றார்.

இதுகுறித்து மனித உரிமை ஆர்வலர் மிகுவல் தாஸ் கூறுகையில், "மருத்துவ தம்பதிகள் தங்களின் வளர்ப்பு மகளை துன்புறுத்துவதாகமுன்னர் புகார்கள் வந்தன. இருப்பினும், தம்பதியரால் குழந்தை துன்புறுத்தலுக்கு உள்ளான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை" என்றார்.

தலைப்பு செய்திகள்

எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget