மேலும் அறிய

வெந்நீரை உடலில் ஊற்றி கொடூரம்.. இரும்புக்கம்பியால் சூடு..! 4 வயது தத்து மகளை சித்திரவதை செய்த மருத்துவ தம்பதி...!

4 வயது பெண் குழந்தையை அவர்களது பெற்றோர் கொடுமைபடுத்திய சம்பவம் அசாம் மாநிலத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற செயல்கள் மனதை உலுக்கும் வகையில் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, அசாமில் நடந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அசாமில் கொடூரம்:

4 வயது பெண் குழந்தையை அவர்களது பெற்றோர் கொடுமைப்படுத்திய சம்பவம் அசாம் மாநிலத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பெற்றோரில், கணவன், மனைவி என இருவரும் மருத்துவர்கள் ஆவார்கள். கவுகாத்தியில் வசித்து வருகின்றனர். 

சில ஆண்டுகளுக்கு முன்புதான், அந்த குழந்தையை அவர்கள் தத்தெடுத்துள்ளனர். மொட்டை மாடியில் கடும் வெயிலுக்கு மத்தியில் அக்குழந்தை தூணில் கட்டிவைக்கப்பட்டுள்ளது. அதனை  புகைப்படமாக எடுத்த, மருத்துவர்களின் அண்டை வீட்டார், காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.

இதையடுத்து, இந்த சம்பவம், வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மருத்து தம்பதிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். இரைப்பை குடல் மற்றும் மேம்பட்ட பொது அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் வாலியுல் இஸ்லாம், கவுகாத்தியின் மணிப்பூரி பஸ்தி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சூடான இரும்பு கம்பியால் அடித்து உதைக்கப்பட்ட குழந்தை:

மனநல மருத்துவரான அவரது மனைவி சங்கீதா பருவா, மேகாலயாவின் ரிபோய் மாவட்டத்தில் பதுங்கியிருந்த வீட்டில் இருந்து நேற்று இரவு கைது செய்யப்பட்டார். கொலை முயற்சி (307), கடுமையான காயத்தை ஏற்படுத்துதல் (325) உட்பட இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பல பிரிவுகளின் கீழ் தம்பதியினர் மீது போலீஸார் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பு பேசுகையில், "முதற்கட்ட விசாரணையில், டாக்டர் பருவா அந்த சிறுமியை சூடான இரும்பு கம்பியால் அடித்ததையும், குழந்தையின் உடலில் வெந்நீரை ஊற்றுவதையும் கண்டறிந்தோம். விசாரணையில் பாருவா தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

கொடூர தண்டனைகள்:

அந்தத் தம்பதியின் வீட்டு உதவியாளரையும் விசாரணை செய்தோம். சொன்னதை கேட்காததாலும், குறும்பு தனமாக நடந்து கொண்டதாலும் அதற்கு தண்டனையாக அந்த சிறுமியை கட்டி வைக்கச் சொன்னதாக வீட்டின் உதவியாளர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த தம்பதி, சில ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளை தத்தெடுத்தனர். கடந்த காலங்களில் கூட, குழந்தையை கொடுமைப்படுத்தியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால் அதிகாரப்பூர்வ புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை" என்றார்.

இதுகுறித்து மனித உரிமை ஆர்வலர் மிகுவல் தாஸ் கூறுகையில், "மருத்துவ தம்பதிகள் தங்களின் வளர்ப்பு மகளை துன்புறுத்துவதாகமுன்னர் புகார்கள் வந்தன. இருப்பினும், தம்பதியரால் குழந்தை துன்புறுத்தலுக்கு உள்ளான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget