மேலும் அறிய

Assam Boat Incident: அசாமில் இரு படகுகள் மோதிக்கொண்ட கோர விபத்து : 33 பேர் மாயம்!

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியில் இரு படகுகள் மோதிக்கொண்ட விபத்தில், நீரில் மூழ்கிய 33 பேர் மாயமாகியுள்ளனர்.

வடகிழக்கு இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்று அசாம். இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியின் கரையோரத்தில் உள்ள தீவு மஜூலி. உலகில் மக்கள் அதிகம் வாழும் தீவுகளில் இந்த மஜூலி தீவும் ஒன்றாகும்.

இந்த தீவில் இருந்து மக்கள் பிரம்மபுத்திராவின் தெற்கு கரையான ஜோர்ஹாத் நகரத்தில் உள்ள நீமதிகத்திற்கு வருவதற்கு நீர்வழிப் போக்குவரத்து மட்டுமே உள்ளது. இதற்காக, அவர்கள் படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று வழக்கம்போல பயணிகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்களை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று ஆற்றில் சென்று கொண்டிருந்தது. அந்த படகில் சுமார் 120 பயணிகள் பயணம் செய்தனர். மஜூலி தீவில் இருந்து சரியாக 1.5 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, அங்கே வந்து கொண்டிருந்த மற்றொரு படகுடன் இந்த படகு மோதியது.

திடீரென ஏற்பட்ட இந்த விபத்தாலும், ஏற்கனவே படகில் பயணிகள் மற்றும் வாகனங்கள், சரக்குகள் இருந்ததாலும் படகு திடீரென கவிழ்ந்தது. இதனால், கவிழ்ந்த படகில் இருந்த பெண்கள் உள்பட பயணிகள் தங்களது பயத்தில் அலறினர். உடனடியாக தங்களது உயிரை காப்பாற்ற பெண்கள் உள்பட பலரும் ஆற்றில் குதித்தனர். அவர்களை மற்றொரு படகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயற்சித்தனர். ஆனாலும், படகு வேகமாக நீரில் மூழ்கியதால் பலரும் படகுடன் சேர்ந்தே நீரில் மூழ்கினர். இதையடுத்து, உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து மாநில பேரிடர் மீட்புத்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

நேற்று இரவு நிலவரப்படி, படகில் பயணித்த 42 பேர் மீட்கப்பட்டு இருந்தனர். 4 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நேற்று இரவு முதல் தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும் தொடர்ந்து படகில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Assam Boat Incident: அசாமில் இரு படகுகள் மோதிக்கொண்ட கோர விபத்து : 33 பேர் மாயம்!

இந்த படகு விபத்து பற்றி மேலும் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த இரு படகிலும் சேர்த்து 120 பயணிகள் பயணித்துள்ளனர். படகு கவிழ்ந்ததில் தற்போதைய நிலவரப்படி ஒருவர் உயிரிழந்துள்ளார். 33 பேர் மாயமாகியுள்ளனர். உயிரிழந்தவர் போரிமிதா தாஸ் என்ற பெண் ஆவார். கவுகாத்தியைச் சேர்ந்த போரிமிதா தாஸ், மஜூலி தீவில் உள்ள ஒரு கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.

இந்த விபத்தில் காயமடைந்த மூன்று பேர் தற்போது ஜோர்கத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மிகவும் மோசமாக நிகழ்ந்துள்ள இந்த விபத்தில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் ராணுவத்தினரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.


Assam Boat Incident: அசாமில் இரு படகுகள் மோதிக்கொண்ட கோர விபத்து : 33 பேர் மாயம்!

இந்த விபத்து காரணமாக, அலட்சியமாக செயல்பட்ட மூன்று நீர்வழிப் போக்குவரத்து அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அசாம் மாநில அமைச்சர் பீமால் போரா விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேற்று இரவே நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா விபத்து நடைபெற்ற இடத்திற்கு இன்று நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அசாம் மாநில பேரிடர் மீட்புத்துறையினர் இந்த விபத்து தொடர்பாக உதவி எண்களையும் அறிவித்துள்ளது. 1070, 1079 மற்றும் 1077 ஆகியவை அந்த உதவி எண்கள் ஆகும். இந்த விபத்து ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துவதாக பிரதமர் மோடி நேற்று வருத்தம் தெரிவித்தார். மேலும், மத்திய அரசு மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதாகவும் உத்தரவாதம் அளித்துள்ளார். மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது, படகு விபத்து நடைபெற்ற காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. 

கர்நாடகா: நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை... புதைக்கப்பட்ட கொடூரம்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு - யாருக்கெல்லாம் லாபம்?
பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு - யாருக்கெல்லாம் லாபம்?
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Top 10 News Headlines: காங்., வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு? திருச்சியில் விஜய், அண்ணாமலைக்கு அழுத்தம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: காங்., வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு? திருச்சியில் விஜய், அண்ணாமலைக்கு அழுத்தம் - 11 மணி வரை இன்று
Indigo Fare Increased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
Indigo Fare Increased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்
மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்
விஜய்க்கு காவல்துறை செக்வீட்டில் இருந்தே பரப்புரை?கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Net Worth: உதயநிதியின் சொத்து மதிப்பு: எவ்வளவு கோடி, எத்தனை கார்கள் தெரியுமா? - முழு சொத்து விவரம் இதோ
உதயநிதியின் சொத்து மதிப்பு: எவ்வளவு கோடி, எத்தனை கார்கள் தெரியுமா? - முழு சொத்து விவரம் இதோ
CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?
CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?
Ponmudi Case Verdict : பொன்முடி, கெளதமசிகாமணி விடுதலை! செம்மண் வழக்கு: எதிர்பாராத திருப்பம், கண்ணீருடன் வெளியேறிய மகன்!
Ponmudi Case Verdict : பொன்முடி, கெளதமசிகாமணி விடுதலை! செம்மண் வழக்கு: எதிர்பாராத திருப்பம், கண்ணீருடன் வெளியேறிய மகன்!
Thilagabama: தராசுடன் வந்து திலகபாமா வேட்புமனுத் தாக்கல்! பெரம்பூர் தொகுதியில் களைகட்டும் தேர்தல் களம்!
Thilagabama: தராசுடன் வந்து திலகபாமா வேட்புமனுத் தாக்கல்! பெரம்பூர் தொகுதியில் களைகட்டும் தேர்தல் களம்!
சாத்தான்குளம் கொலை வழக்கு: 9 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுங்க- தண்டனை அறிவிப்பு எப்போது?
சாத்தான்குளம் கொலை வழக்கு: 9 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுங்க- தண்டனை அறிவிப்பு எப்போது?
TVK Vijay: விஜய் Vs ஸ்டாலின், விஜய் Vs உதயநிதி; வேட்புமனுத் தாக்கலில் தவெக தலைவரின் தரமான சம்பவம்!
TVK Vijay: விஜய் Vs ஸ்டாலின், விஜய் Vs உதயநிதி; வேட்புமனுத் தாக்கலில் தவெக தலைவரின் தரமான சம்பவம்!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
CM Stalin: இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு; காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது? முதல்வர் ஸ்டாலின் பேச்சு
CM Stalin: இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு; காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது? முதல்வர் ஸ்டாலின் பேச்சு
Embed widget