மேலும் அறிய

Assam Boat Incident: அசாமில் இரு படகுகள் மோதிக்கொண்ட கோர விபத்து : 33 பேர் மாயம்!

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியில் இரு படகுகள் மோதிக்கொண்ட விபத்தில், நீரில் மூழ்கிய 33 பேர் மாயமாகியுள்ளனர்.

வடகிழக்கு இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்று அசாம். இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியின் கரையோரத்தில் உள்ள தீவு மஜூலி. உலகில் மக்கள் அதிகம் வாழும் தீவுகளில் இந்த மஜூலி தீவும் ஒன்றாகும்.

இந்த தீவில் இருந்து மக்கள் பிரம்மபுத்திராவின் தெற்கு கரையான ஜோர்ஹாத் நகரத்தில் உள்ள நீமதிகத்திற்கு வருவதற்கு நீர்வழிப் போக்குவரத்து மட்டுமே உள்ளது. இதற்காக, அவர்கள் படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று வழக்கம்போல பயணிகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்களை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று ஆற்றில் சென்று கொண்டிருந்தது. அந்த படகில் சுமார் 120 பயணிகள் பயணம் செய்தனர். மஜூலி தீவில் இருந்து சரியாக 1.5 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, அங்கே வந்து கொண்டிருந்த மற்றொரு படகுடன் இந்த படகு மோதியது.

திடீரென ஏற்பட்ட இந்த விபத்தாலும், ஏற்கனவே படகில் பயணிகள் மற்றும் வாகனங்கள், சரக்குகள் இருந்ததாலும் படகு திடீரென கவிழ்ந்தது. இதனால், கவிழ்ந்த படகில் இருந்த பெண்கள் உள்பட பயணிகள் தங்களது பயத்தில் அலறினர். உடனடியாக தங்களது உயிரை காப்பாற்ற பெண்கள் உள்பட பலரும் ஆற்றில் குதித்தனர். அவர்களை மற்றொரு படகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயற்சித்தனர். ஆனாலும், படகு வேகமாக நீரில் மூழ்கியதால் பலரும் படகுடன் சேர்ந்தே நீரில் மூழ்கினர். இதையடுத்து, உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து மாநில பேரிடர் மீட்புத்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

நேற்று இரவு நிலவரப்படி, படகில் பயணித்த 42 பேர் மீட்கப்பட்டு இருந்தனர். 4 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நேற்று இரவு முதல் தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும் தொடர்ந்து படகில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Assam Boat Incident: அசாமில் இரு படகுகள் மோதிக்கொண்ட கோர விபத்து : 33 பேர் மாயம்!

இந்த படகு விபத்து பற்றி மேலும் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த இரு படகிலும் சேர்த்து 120 பயணிகள் பயணித்துள்ளனர். படகு கவிழ்ந்ததில் தற்போதைய நிலவரப்படி ஒருவர் உயிரிழந்துள்ளார். 33 பேர் மாயமாகியுள்ளனர். உயிரிழந்தவர் போரிமிதா தாஸ் என்ற பெண் ஆவார். கவுகாத்தியைச் சேர்ந்த போரிமிதா தாஸ், மஜூலி தீவில் உள்ள ஒரு கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.

இந்த விபத்தில் காயமடைந்த மூன்று பேர் தற்போது ஜோர்கத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மிகவும் மோசமாக நிகழ்ந்துள்ள இந்த விபத்தில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் ராணுவத்தினரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.


Assam Boat Incident: அசாமில் இரு படகுகள் மோதிக்கொண்ட கோர விபத்து : 33 பேர் மாயம்!

இந்த விபத்து காரணமாக, அலட்சியமாக செயல்பட்ட மூன்று நீர்வழிப் போக்குவரத்து அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அசாம் மாநில அமைச்சர் பீமால் போரா விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேற்று இரவே நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா விபத்து நடைபெற்ற இடத்திற்கு இன்று நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அசாம் மாநில பேரிடர் மீட்புத்துறையினர் இந்த விபத்து தொடர்பாக உதவி எண்களையும் அறிவித்துள்ளது. 1070, 1079 மற்றும் 1077 ஆகியவை அந்த உதவி எண்கள் ஆகும். இந்த விபத்து ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துவதாக பிரதமர் மோடி நேற்று வருத்தம் தெரிவித்தார். மேலும், மத்திய அரசு மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதாகவும் உத்தரவாதம் அளித்துள்ளார். மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது, படகு விபத்து நடைபெற்ற காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. 

கர்நாடகா: நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை... புதைக்கப்பட்ட கொடூரம்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ”அராஜகப் போக்கு! மனசாட்சி இருக்கா” தூய்மை பணியாளர்கள் கைது... சாட்டையை சுழற்றிய விஜய்
TVK Vijay: ”அராஜகப் போக்கு! மனசாட்சி இருக்கா” தூய்மை பணியாளர்கள் கைது... சாட்டையை சுழற்றிய விஜய்
தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு
தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு
மீண்டும் கூட்டணியில் OPS?  நிராகரித்த பி.எல். சந்தோஷ்!  தூது போன அண்ணாமலை!
மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Top 10 News Headlines: தூய்மைப் பணியாளர்கள் கைது, விமான கட்டண உயர்வு- ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை-11 மணி செய்திகள்
Top 10 News Headlines: தூய்மைப் பணியாளர்கள் கைது, விமான கட்டண உயர்வு- ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை-11 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ”அராஜகப் போக்கு! மனசாட்சி இருக்கா” தூய்மை பணியாளர்கள் கைது... சாட்டையை சுழற்றிய விஜய்
TVK Vijay: ”அராஜகப் போக்கு! மனசாட்சி இருக்கா” தூய்மை பணியாளர்கள் கைது... சாட்டையை சுழற்றிய விஜய்
தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு
தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு
மீண்டும் கூட்டணியில் OPS?  நிராகரித்த பி.எல். சந்தோஷ்!  தூது போன அண்ணாமலை!
மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Top 10 News Headlines: தூய்மைப் பணியாளர்கள் கைது, விமான கட்டண உயர்வு- ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை-11 மணி செய்திகள்
Top 10 News Headlines: தூய்மைப் பணியாளர்கள் கைது, விமான கட்டண உயர்வு- ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை-11 மணி செய்திகள்
ModivsTrump: பயங்கரவாதத்தில் பாகிஸ்தானை பாராட்டிய அமெரிக்கா.. கோபத்தின் உச்சியில் இந்தியா!
ModivsTrump: பயங்கரவாதத்தில் பாகிஸ்தானை பாராட்டிய அமெரிக்கா.. கோபத்தின் உச்சியில் இந்தியா!
Independence Day 2025: நாளை சுதந்திர தினம்.. களைகட்டிய இந்தியா.. உற்சாகத்தின் உச்சியில் மக்கள்!
Independence Day 2025: நாளை சுதந்திர தினம்.. களைகட்டிய இந்தியா.. உற்சாகத்தின் உச்சியில் மக்கள்!
Independence Day 2025 Wishes: ஜெய் ஹிந்த்.. ஜெய்ஹிந்த்! சுதந்திர தினத்தை போற்றும் இந்த வாழ்த்துகளை ஷேர் பண்ணுங்க..!
Independence Day 2025 Wishes: ஜெய் ஹிந்த்.. ஜெய்ஹிந்த்! சுதந்திர தினத்தை போற்றும் இந்த வாழ்த்துகளை ஷேர் பண்ணுங்க..!
Coolie Review : அரங்கம் அதிர்ந்ததா ? தூங்கி வழிந்ததா..ரஜினிகாந்தின் கூலி திரைப்பட விமர்சனம் இதோ
Coolie Review : அரங்கம் அதிர்ந்ததா ? தூங்கி வழிந்ததா..ரஜினிகாந்தின் கூலி திரைப்பட விமர்சனம் இதோ
Embed widget