மேலும் அறிய

உயிர்களை பலி கேட்கும் நீட் தேர்வு.. 20 வயது மாணவன் தற்கொலை.. கோட்டாவில் தொடர் மர்மம்!

ராஜஸ்தான் கோட்டாவில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த 20 வயது மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளங்களை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், வெற்றிபெற்ற பிறகும், அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காத காரணத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. சில சமயங்களில், நீட் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தாலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

உயிர்களை பலி கேட்கும் நீட் தேர்வு:

இம்மாதிரியான சம்பவங்கள் தமிழ்நாட்டில் மட்டும் நடப்பதில்லை மற்ற மாநிலங்களிலும் நடைபெறுகிறது. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. மற்ற இடங்களை காட்டிலும் கோட்டாவில் அதிக எண்ணிக்கையில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் இருக்கின்றன.

இதன் காரணமாக, வெளி மாநிலங்களில் இருந்து எல்லாம் மாணவர்கள் அங்கு வந்து படிப்பது உண்டு. ஆனால், கடும் மன அழுத்தம் காரணமாக, நீட் தேர்வு பயற்சிக்கு தயாராகி வரும் மாணவர்கள், தற்கொலை செய்து கொள்வது கோட்டாவில் அதிகளவில் நடந்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, கோட்டாவில் மற்றொரு தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த 20 வயது மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர், மிர்சாபூரை சேர்ந்த அசுதோஷ் சௌராசியா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கோட்டாவில் தொடரும் தற்கொலைகள்:

தாதாபரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள அவரது அறையில் நேற்று இரவு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். சௌராசியாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சடலம் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் வந்த பிறகு பிரேத பரிசோதனை செய்யப்படும் என காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

சௌராசியாவின் குடும்ப உறுப்பினர்கள், அவரை தொடர்பு கொள்ள முயன்றும், எந்த பதிலும் கிடைக்காததால், அவர்களின் PG உரிமையாளரிடம் விசாரித்திருக்கின்றனர். பின்னர், சௌர்சியாவின் அறையை PG உரிமையாளர் தட்டியுள்ளார். ​​ஆனால், அவர் பதில் அளிக்கவில்லை.

பின்னர், அவர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். நேற்று, 11.30 மணியளவில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர். அறையின் கதவுகளை உடைத்து திறந்து பார்த்தபோது சௌராசியா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

கொரோனா பெருந்தொற்றுநோய்க்குப் பிறகு தற்கொலைகள் 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. பெருந்தொற்று காலத்தில், மிகக் குறைவான எண்ணக்கையிலேயே மாணவர்கள் இறந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டில், 12 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டு, 10 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த ஆண்டு, 15 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சருக்கு டீ தான் வாங்கி கொடுக்கிறார் சேகர் பாபு - எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சருக்கு டீ தான் வாங்கி கொடுக்கிறார் சேகர் பாபு - எடப்பாடி பழனிசாமி
எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கையா ? -  அமைச்சர் துரை முருகன்
எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கையா ? - அமைச்சர் துரை முருகன்
India vs New Zealand 1st Test :தொடர்ந்து 5 வீரர்களும் டக் அவுட் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து 5 வீரர்களும் டக் அவுட் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
TN Rain Updates: இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.INDIA Vs BJP | பலத்தை காட்டுவாரா தாக்கரே?அடித்து ஆடும் I.ND.I.A! மகாராஷ்டிராவில் வெற்றி யாருக்கு?Priyanka Gandhi Wayanad : தெற்கில்  பிரியங்கா ராகுலின் மாஸ்டர் ப்ளான் கெத்து காட்டும் காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சருக்கு டீ தான் வாங்கி கொடுக்கிறார் சேகர் பாபு - எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சருக்கு டீ தான் வாங்கி கொடுக்கிறார் சேகர் பாபு - எடப்பாடி பழனிசாமி
எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கையா ? -  அமைச்சர் துரை முருகன்
எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கையா ? - அமைச்சர் துரை முருகன்
India vs New Zealand 1st Test :தொடர்ந்து 5 வீரர்களும் டக் அவுட் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து 5 வீரர்களும் டக் அவுட் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
TN Rain Updates: இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
புதுச்சேரியில் புதிய கணக்கு போடும் விஜய்.. எம்ஜிஆர் சாதித்ததை, விஜயால் சாதிக்க முடியுமா ? என்ன திட்டம் ?
புதுச்சேரியில் புதிய கணக்கு போடும் விஜய்.. எம்ஜிஆர் சாதித்ததை, விஜயால் சாதிக்க முடியுமா ? என்ன திட்டம் ?
சுடசுட பிரியாணி.! தூய்மை பணியாளர்களுக்கு, பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
சுடசுட பிரியாணி.! தூய்மை பணியாளர்களுக்கு, பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
IND vs NZ:  இந்திய பேட்டிங்கை நிலைகுலைத்த 2 கே கிட்! யார் இந்த ஓ ரோர்கி?
IND vs NZ: இந்திய பேட்டிங்கை நிலைகுலைத்த 2 கே கிட்! யார் இந்த ஓ ரோர்கி?
Breaking News LIVE 17th oct 2024: நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
Breaking News LIVE 17th oct 2024: நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
Embed widget