மேலும் அறிய

Amul: 'உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் அமுல்..' பின்னணி என்ன..? முதலமைச்சரே எதிர்த்தது ஏன்? - விரிவான அலசல்

மற்ற மாநில அரசுகளுக்கு சொந்தமான பால் நிறுவனங்களுக்கு போட்டியாக மாறும் அளவுக்கு அமுல் எப்படி வளர்ந்தது? அது யாருக்கு சொந்தம்? என்பதை பார்ப்போம்.

கர்நாடகாவை தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் அமுல் நிறுவனத்திற்கு எதிரான கோஷங்கள் எழுந்துள்ளன. ஒரு மாநிலத்தில் தேர்தல் விவகாரமாக எழுப்பப்பட்ட நிலையில், மற்றொரு மாநிலத்தில் மாநில முதலமைச்சரே மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதும் அளவுக்கு பிரச்னை வெடித்துள்ளது. அப்படி, என்னதான் நடந்தது? என்பதை பார்ப்போம்.

கர்நாடகாவில் தேர்தல் விவகாரம் மாறிய அமுல்:

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பால் பொருள்களை விற்க உள்ளதாக அமுல் நிறுவனம் அறிவித்ததே அனைத்து பிரச்னைக்கும் தொடக்கப்புள்ளி. கர்நாடக பால் கூட்டமைப்பு நிறுவனமான (மாநில அரசுக்கு சொந்தமான) நந்தினிக்கு போட்டியாக அமுல் நிறுவனம் வருவதாக கடும் எதிர்ப்பு எழுந்தது. இது, உள்ளூர் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் தேர்தல் விவகாரமாக மாறும் நிலைக்கு சர்ச்சை வெடித்தது.

அமித் ஷாவுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின்:

அமுல் நிறுவனம், இதுநாள்வரையில் தங்களது தயாரிப்புகளை தமிழ்நாட்டில் உள்ள அவர்களுடைய விற்பனை நிலையங்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில், பால் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் அந்நிறுவனம் பால் கொள்முதல் செய்ய தொடங்கியது பிரச்னையாக மாறியது.

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதும் அளவுக்கு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தொடர் சர்ச்சையை ஏற்படுத்தும் அமுல்:

மற்ற மாநில அரசுகளுக்கு சொந்தமான பால் நிறுவனங்களுக்கு போட்டியாக மாறும் அளவுக்கு அமுல் எப்படி வளர்ந்தது. அது யாருக்கு சொந்தம் என்பதை பார்ப்போம்.

பலர் நினைப்பது போல, அமுல் நிறுவனம், மத்திய அரசுக்கு சொந்தமானது அல்ல. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் ஆவின், கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் நந்தினியை போல குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்புக்கு சொந்தமானது.

மற்ற மாநில நிறுவனங்களுடன் மோதும் குஜராத் நிறுவனம்:

கிட்டத்தட்ட 76 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அமுல் நிறுவனம், இன்று இந்தியாவின் நம்பர் 1 பால் நிறுவனமாகவும் உலகளவில் அதிக அளவில் பால் உற்பத்தி செய்யும் 8ஆவது நிறுவனமாகவும் உள்ளது. குஜராத் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள போல்சன் டெய்ரிக்கு எதிரான கூட்டுறவு இயக்கத்தின் ஒரு பகுதியாக அமுல் உருவாக்கப்பட்டது.

போல்சன் டெய்ரி நிறுவனம், கைரா மாவட்டத்தின் உள்ளூர் விவசாயிகளிடமிருந்து மிகக் குறைந்த விலையில் பால் கொள்முதல் செய்து அப்போதைய பம்பாய் அரசாங்கத்திற்கு விற்றது. இந்த வியாபாரத்தால் விவசாயிகள் தவிர அனைவரும் பயனடைந்தனர். உள்ளூர் வர்த்தக நிறுவனமான போல்சன் பின்பற்றிய இந்த சுரண்டல் வர்த்தக நடைமுறைகள் கூட்டுறவு இயக்கத்தின் வழியாக அமுல் உருவாவதற்கு காரணமாக அமைந்தது.

வெண்மை புரட்சி:

சர்தார் வல்லபாய் படேலின் ஆலோசனையின்படி, ஆனந்த் மாவட்ட விவசாயிகள், சொந்த கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பை உருவாக்கினர். இந்தியாவில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவரும் இந்தியாவின் பால் மனிதர் என அழைக்கப்படும் டாக்டர் வர்கீஸ் குரியனின் சிறப்பான வழிகாட்டுதலில் இயங்கி வந்தது அமுல்.

இச்சூழலில், தற்போது, மற்ற மாநில கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புக்கு சொந்தமான பால் நிறுவனங்களுடன் போட்டியிடுவதாக புகார் எழுந்துள்ளது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget