மேலும் அறிய

பயங்கரவாதத்தை எந்த ஒரு மதத்துடனும் தொடர்புபடுத்தக்கூடாது...என்ன சொல்ல வருகிறார் அமித்ஷா?

எந்த மதத்துடனும் அல்லது குழுவுடனும் பயங்கரவாதத்தை தொடர்புபடுத்த கூடாது என அமித்ஷா கூறியுள்ளார். 

பயங்கரவாதத்தை குறிப்பிட்ட மதத்துடன் தொடர்புபடுத்தி பேசும் போக்கு தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சிறுபான்மையினர்கள் மத்தியில் அச்ச உணர்வு நிலவி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, குறிப்பிட்ட மத பிரிவினர் மட்டுமே பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது போன்ற கதை அம்சம் கொண்ட திரைப்படங்கள் வெளியாகி சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது பயங்கரவாதத்தை விட ஆபத்தானது. அதை எந்த மதத்துடனும் அல்லது குழுவுடனும் தொடர்புபடுத்த கூடாது என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.

பயங்கரவாத செயல்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியை தடுக்கும் வகையில் நடப்பட்ட மூன்றாவது மாநாட்டில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார்.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சார்பில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், "பயங்கரவாதிகள் தொடர்ந்து வன்முறையை நடத்துவதற்கும், இளைஞர்களை தீவிரமயமாக்குவதற்கும், நிதி ஆதாரங்களை உயர்த்துவதற்கும் புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர்.

தீவிரவாதிகள் தீவிரமான உள்ளடக்கத்தைப் பரப்பவும், தங்கள் அடையாளங்களை மறைக்கவும் Darknet மென்பொருளை பயன்படுத்தி வருகின்றனர். பயங்கரவாதம் சந்தேகத்திற்கு இடமின்றி, உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகக் கடுமையான அச்சுறுத்தலாகும். ஆனால், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வது பயங்கரவாதத்தை விட ஆபத்தானது என்று நான் நம்புகிறேன்.

ஏனெனில், பயங்கரவாதத்தின் 'வழிகள் மற்றும் முறைகள்' அத்தகைய நிதியிலிருந்து வளர்க்கப்படுகின்றன. மேலும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வது உலக நாடுகளின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்துகிறது. எந்த மதத்துடனும் தேசியத்துடனும் அல்லது குழுவுடனும் பயங்கரவாதத்தை தொடர்புபடுத்த முடியாது. இணைக்கவும் கூடாது என்பதையும் நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

பயங்கரவாதத்தை எதிர்கொள்ள, பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் சட்ட மற்றும் நிதி அமைப்புகளை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம்" என்றார்.

பாகிஸ்தானை சாடி பேசிய அவர், "பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நமது கூட்டுத் தீர்மானத்தை குறைத்து மதிப்பிடவும் அதை தடுக்கவும் சில நாடுகள் முற்படுகின்றன. சில நாடுகள் பயங்கரவாதிகளைப் பாதுகாப்பதையும் அவர்களுக்கு அடைக்கலம் தருவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

ஒரு பயங்கரவாதியைப் பாதுகாப்பது பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்குச் சமம். அத்தகைய கூறுகள் அவர்களின் நோக்கங்களில் ஒருபோதும் வெற்றிபெற வைக்க கூடாது என்பது நமது கூட்டுப் பொறுப்பாகும்" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Embed widget