மேலும் அறிய

"எந்த அடிப்படை வசதியும் இல்ல" திரிபுராவுக்கு அள்ளிக் கொடுத்த அமித் ஷா!

25 ஆண்டுகளாக, பழங்குடி மக்களுக்கு தண்ணீர், கழிப்பறை, மின்சாரம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திரிபுராவின் தலாய் பகுதியில் ரூ. 668 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். பின்னர், ஹடுக்லாவ் பாரா புரு செட்டில்மென்ட் காலனியில் புரு ரியாங் சமூக மக்களுடன் அமித் ஷா உரையாடினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர், "பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், புரு ரியாங் சமூகத்தைச் சேர்ந்த 38,000 பேரை குடியமர்த்த மத்திய அரசு வசதி செய்துள்ளது. சுமார் 25 ஆண்டுகளாக, மிகவும் கடினமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வரும் புரு ரியாங் மக்களுக்கு தண்ணீர், கழிப்பறை, மின்சாரம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை.

"துன்பங்களை கண்டு புரிந்து கொண்டவர் மோடி"

நீண்ட காலமாக இங்கு ஆட்சி செய்தவர்கள் புரு ரியாங் மக்களின் வலியை ஒருபோதும் பார்த்ததில்லை. ஆனால், அவர்களின் துன்பங்களைக் கண்டு, மோடி புரிந்துகொண்டுள்ளார். திரிபுராவில் மாற்றம் ஏற்பட்டு, தங்கள் கட்சி அரசை அமைத்தபோது, அந்த நேரத்தில் மத்தியில் நரேந்திர மோடி அரசும் இருந்தது.

அப்போதைய உடன்படிக்கையின் படி, 40,000 பேர் குடியேற்றப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி, சுத்தமான குடிநீர், கழிப்பறைகள் மற்றும் பெண்களுக்கான கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முந்தைய  ஆட்சிக் காலத்தில், பல திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆனால், அவை ஒருபோதும் நடைமுறைக்கு வரவில்லை. கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் மோசமான வாழ்க்கை வாழ்ந்து வரும் புரு ரியாங் மக்களுக்காக பிரதமர் மோடி ஒரு திட்டத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், 11 கிராமங்களை ரூ .900 கோடி செலவில் மறுகுடியமர்த்தவும் திட்டத்தை உருவாக்கினார்.

அமித் ஷா பேசியது என்ன?

இந்த கிராமங்களில் தற்போது மின்சாரம், சாலைகள், குடிநீர், இணைப்பு, சூரிய ஒளி தெரு விளக்குகள், மானிய விலையில் தானியக் கடைகள், அங்கன்வாடி பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்கள் உள்ளன. இந்த 11 காலனிகளில் வசிக்கும் மக்களுக்கும் நாட்டின் மற்ற குடிமக்களைப் போலவே அனைத்து உரிமைகளும் வழங்கப்படுவதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்.

இந்த நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காக மோடி அரசு அவர்களுக்கு ரேஷன் கார்டுகள், சுகாதார அட்டைகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளையும் வழங்கியுள்ளது.

இந்த மக்களுக்கு தற்போது 1200 சதுர அடி மனைகள் சொந்தமாக இருக்கிறது. மத்திய  அரசின் உதவியுடன் அவர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. கூடுதலாக, மோடி அரசு அவர்களுக்கு 24 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ 5000 உதவித்தொகையை வழங்குகிறது" என்றார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Embed widget