மேலும் அறிய

International Flight Update: சர்வதேச விமான பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த மத்திய அரசு

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக வரும் சூழலில் சர்வதேச விமான பயணிகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். 

இந்நிலையில் அதன் ஒருபகுதியாக சர்வதேச விமான பயணிகளுக்கு தற்போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கட்டுப்பாடு விதிகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒமிக்ரான் பரவல் அதிகம் இல்லாத நாடுகளில் இருந்து வருபவர்கள் கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். அதன்பின்னர் 8ஆவது நாளில் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அந்தப் பரிசோதனையில் தொற்று உறுதியாகிவிட்டால் அவர்களுடைய மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் ஒமிக்ரான் பரவல் அதிகமாக உள்ள நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு வந்தவுடன் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அந்த நபர்களுக்கு தொற்று உறுதியாகவில்லை என்றால் அவர்களும் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பின்னர் அவர்களுக்கும் இனிமேல் 8ஆவது நாளில் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கொரோனா பரவல் அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்படும். அந்தப் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதியாகிவிட்டால் அவர்கள் 7 நாட்கள் மட்டும் தனிமைப்படுத்தி கொண்டால் போதுமானது. ஆனால் தற்போது அந்த 7 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு கொரோனா பரிசோதனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 


International Flight Update: சர்வதேச விமான பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த மத்திய அரசு

இவை தவிர ஏற்கெனவே அமலில் உள்ள சில விதிமுறைகளும் சர்வதேச விமான பயணிகளுக்கு தொடர்ந்து பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆரோக்ய சேது செயலியை வைத்திருந்தல், விமானப்பயணம் தொடர்பான முழு விவரங்களை அளித்தல் ஆகியவை தொடர்ந்து அமலில் இருக்கும். அதேபோல் ஒமிக்ரான் தொற்று அதிகம் இல்லாத நாடுகளிலிருந்து வருபவர்களில் 2 சதவிகிதம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவது தொடர்ந்து நடைபெறும் என்றும் மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது. 

இந்தியாவில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் தொற்று  வகைகள் மீண்டும் வேகமாக பரவி வருகின்றன. இதனால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வாரத்தின் இறுதி நாட்களில் ஊரடங்கு எனப் பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கியுள்ள சூழலில் மத்திய அரசு இந்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க: “கொஞ்ச நாள் பொறுங்க” - பிரதமர் பாதுகாப்பு விசாரணைக் குழுக்களை தடுத்து நிறுத்திய உச்சநீதிமன்றம்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: கூட்டணிக்கு ஓகே.. ஆனால்..! எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் போட்ட கண்டிஷன் - என்னென்ன?
ADMK DMDK: கூட்டணிக்கு ஓகே.. ஆனால்..! எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் போட்ட கண்டிஷன் - என்னென்ன?
Independence Day Speech For Kids: குழந்தைகளே.. சுதந்திர தினத்தில் ஈஸியா பேசலாம்- இதோ டிப்ஸ்!
Independence Day Speech For Kids: குழந்தைகளே.. சுதந்திர தினத்தில் ஈஸியா பேசலாம்- இதோ டிப்ஸ்!
ஜனநாயக விரோதம், தனியார்மயம்- மாநில கல்விக் கொள்கையை உடனே திரும்பப்பெற கோரிக்கை!
ஜனநாயக விரோதம், தனியார்மயம்- மாநில கல்விக் கொள்கையை உடனே திரும்பப்பெற கோரிக்கை!
MDMK: பிரதமர் மோடியைச் சந்தித்தது பாஜக-வுடன் கூட்டணி பேசவா? உண்மையை உடைத்த துரை வைகோ
MDMK: பிரதமர் மோடியைச் சந்தித்தது பாஜக-வுடன் கூட்டணி பேசவா? உண்மையை உடைத்த துரை வைகோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: கூட்டணிக்கு ஓகே.. ஆனால்..! எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் போட்ட கண்டிஷன் - என்னென்ன?
ADMK DMDK: கூட்டணிக்கு ஓகே.. ஆனால்..! எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் போட்ட கண்டிஷன் - என்னென்ன?
Independence Day Speech For Kids: குழந்தைகளே.. சுதந்திர தினத்தில் ஈஸியா பேசலாம்- இதோ டிப்ஸ்!
Independence Day Speech For Kids: குழந்தைகளே.. சுதந்திர தினத்தில் ஈஸியா பேசலாம்- இதோ டிப்ஸ்!
ஜனநாயக விரோதம், தனியார்மயம்- மாநில கல்விக் கொள்கையை உடனே திரும்பப்பெற கோரிக்கை!
ஜனநாயக விரோதம், தனியார்மயம்- மாநில கல்விக் கொள்கையை உடனே திரும்பப்பெற கோரிக்கை!
MDMK: பிரதமர் மோடியைச் சந்தித்தது பாஜக-வுடன் கூட்டணி பேசவா? உண்மையை உடைத்த துரை வைகோ
MDMK: பிரதமர் மோடியைச் சந்தித்தது பாஜக-வுடன் கூட்டணி பேசவா? உண்மையை உடைத்த துரை வைகோ
IPL CSK: அஷ்வின் மட்டுமல்ல.. பர்ஸை நிரப்ப மொத்த அன்பு டென்னையும் காலியாக்கும் சிஎஸ்கே - ரூ.40 கோடிக்கு ஏலம்
IPL CSK: அஷ்வின் மட்டுமல்ல.. பர்ஸை நிரப்ப மொத்த அன்பு டென்னையும் காலியாக்கும் சிஎஸ்கே - ரூ.40 கோடிக்கு ஏலம்
Anbumani Rmadoss: அப்செட்டில் ராமதாஸ் - தலைவராகும் அன்புமணி? ஒகே சொன்ன நீதிமன்றம் - இன்று பாமக பொதுக்குழு
Anbumani Rmadoss: அப்செட்டில் ராமதாஸ் - தலைவராகும் அன்புமணி? ஒகே சொன்ன நீதிமன்றம் - இன்று பாமக பொதுக்குழு
ரூபாய் 4 லட்சம் வரை ஆஃபர்.. ஆடித்தள்ளுபடி விலையில் ஹுண்டாய் கார்கள் - எந்த காருக்கு எவ்ளோ கம்மி?
ரூபாய் 4 லட்சம் வரை ஆஃபர்.. ஆடித்தள்ளுபடி விலையில் ஹுண்டாய் கார்கள் - எந்த காருக்கு எவ்ளோ கம்மி?
Marakkanam To Puducherry: 20 நிமிஷம் தான் - மரக்காணம் டூ புதுச்சேரி 4 வழிச்சாலை  - ரூ.2,157 கோடி, சென்னை டூ நாகை இனி ஈசி
Marakkanam To Puducherry: 20 நிமிஷம் தான் - மரக்காணம் டூ புதுச்சேரி 4 வழிச்சாலை - ரூ.2,157 கோடி, சென்னை டூ நாகை இனி ஈசி
Embed widget