மேலும் அறிய

கொரோனாவின் 3ம் அலையில் குழந்தைகளுக்கு பாதிப்பா? - எய்ம்ஸ் இயக்குநர் விளக்கம்

"மூன்றாவது அலையின்போது பச்சிளம் குழந்தைகளையும் குழந்தைகளையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்"

கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டால் அதில் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் எனக் கூறுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.

டெல்லியில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், அவர் இதைக் கூறினார்.முதலாவது, இரண்டாவது அலைகளில் குழந்தைகள் எப்போதும்போல பாதுகாக்கப்பட்டுள்ளனர். அதையும் மீறி தொற்று ஏற்பட்டவர்களுக்கும் லேசான அளவிலேயே பாதிப்பு இருக்கிறது என்றார் அவர்.    

இதேவேளை, இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் கல்வியில் கடைப்பிடிக்கப்படும் பாலினப் பாகுபாடு, மன அழுத்தம், மற்ற மனச் சிக்கல்கள், அதீத செல்போன் பயன்பாடு/ போதை, வழக்கமான கல்விச் செயல்பாடுகள் முடக்கம் ஆகியவற்றால் கூடுதல் சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளன என்று குலேரியா தெரிவித்தார். குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளின் கல்வி அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

” கொரோனா தொற்றின் முதலாம், இரண்டாம் அலைகளின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, ஒரேமாதிரியாகத்தான் இருக்கிறது. குழந்தைகள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை பாதிப்பு ஏற்பட்டாலும் அது லேசான அளவில்தான் இருக்கிறது. மேலும் கொரோனா கிருமி மாற்றம் அடையவில்லை. ஆகையால் மூன்றாவது அலையின்போது குழந்தைகள் அதிக பாதிப்புக்கு ஆளாவார்கள் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை.“ என்றவர்,
ஒரு கருதுகோளின் அடிப்படையிலேயே இப்படி ஒன்றை ஒரு சாரார் சொல்கின்றனர் என்றும் கூறினார்.
 
அதாவது, கொரோனா கிருமியானது மனித உடலில் இருக்கும் ஏசிஇ எனப்படும் ஏற்பிகள் மூலம் உடலுக்குள் நுழைகிறது; பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு இந்த ஏற்பிகள் குறைவாக இருப்பதால், அவர்களுக்கு குறைந்த அளவிலேயே தொற்று ஏற்படுகிறது என்பதை குலேரியா சுட்டிக்காட்டினார்.

இந்தக் கருதுகோளை முன்வைத்தவர்கள், குழந்தைகள் இதுவரை பாதிக்கப்படவில்லை; இதனாலேயே மூன்றாவது அலையின்போது அவர்கள் அதிக எண்ணிக்கையிலும் கடுமையாகவும் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறுவதை குலேரியா ஏற்கவில்லை. அதற்கான சான்று எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.

ஆனால், இதையொட்டி கவலைதெரிவித்துள்ள தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், மூன்றாவது அலையின்போது பச்சிளம் குழந்தைகளையும் குழந்தைகளையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளது.

மத்திய நலவாழ்வுத் துறைச் செயலாளர் ராஜேஷ் பூசணுக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கணூங்கோ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தேசிய அவசர ஊர்திப் போக்குவரத்தை அதற்கேற்ப தயாராகவைத்துக்கொள்ளவும் குறிப்பாக பச்சிளம் குழந்தைகளுக்கும் குழந்தைகளுக்கும் தேவையான அவசர ஊர்தி வசதியை ஏற்பாடுசெய்யவும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு அலையிலும் ஒரு தரப்பினர் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் தான் தற்போது இந்த கருத்து எழுந்துள்ளது. 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
RailOne App Discount: முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
RailOne App Discount: முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
Trump Warns Iran: “அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
“அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
Affordable Mileage Cars 2026: புத்தாண்டு பிறந்ததும் கார் வாங்கப் போறீங்களா.? குறைந்த விலை, நிறைந்த மைலேஸ் தரும் கார்கள் லிஸ்ட்
புத்தாண்டு பிறந்ததும் கார் வாங்கப் போறீங்களா.? குறைந்த விலை, நிறைந்த மைலேஸ் தரும் கார்கள் லிஸ்ட்
Ukraine Putin Trump: புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Embed widget