மேலும் அறிய

கொரோனாவின் 3ம் அலையில் குழந்தைகளுக்கு பாதிப்பா? - எய்ம்ஸ் இயக்குநர் விளக்கம்

"மூன்றாவது அலையின்போது பச்சிளம் குழந்தைகளையும் குழந்தைகளையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்"

கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டால் அதில் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் எனக் கூறுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.

டெல்லியில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், அவர் இதைக் கூறினார்.முதலாவது, இரண்டாவது அலைகளில் குழந்தைகள் எப்போதும்போல பாதுகாக்கப்பட்டுள்ளனர். அதையும் மீறி தொற்று ஏற்பட்டவர்களுக்கும் லேசான அளவிலேயே பாதிப்பு இருக்கிறது என்றார் அவர்.    

இதேவேளை, இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் கல்வியில் கடைப்பிடிக்கப்படும் பாலினப் பாகுபாடு, மன அழுத்தம், மற்ற மனச் சிக்கல்கள், அதீத செல்போன் பயன்பாடு/ போதை, வழக்கமான கல்விச் செயல்பாடுகள் முடக்கம் ஆகியவற்றால் கூடுதல் சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளன என்று குலேரியா தெரிவித்தார். குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளின் கல்வி அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

” கொரோனா தொற்றின் முதலாம், இரண்டாம் அலைகளின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, ஒரேமாதிரியாகத்தான் இருக்கிறது. குழந்தைகள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை பாதிப்பு ஏற்பட்டாலும் அது லேசான அளவில்தான் இருக்கிறது. மேலும் கொரோனா கிருமி மாற்றம் அடையவில்லை. ஆகையால் மூன்றாவது அலையின்போது குழந்தைகள் அதிக பாதிப்புக்கு ஆளாவார்கள் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை.“ என்றவர்,
ஒரு கருதுகோளின் அடிப்படையிலேயே இப்படி ஒன்றை ஒரு சாரார் சொல்கின்றனர் என்றும் கூறினார்.
 
அதாவது, கொரோனா கிருமியானது மனித உடலில் இருக்கும் ஏசிஇ எனப்படும் ஏற்பிகள் மூலம் உடலுக்குள் நுழைகிறது; பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு இந்த ஏற்பிகள் குறைவாக இருப்பதால், அவர்களுக்கு குறைந்த அளவிலேயே தொற்று ஏற்படுகிறது என்பதை குலேரியா சுட்டிக்காட்டினார்.

இந்தக் கருதுகோளை முன்வைத்தவர்கள், குழந்தைகள் இதுவரை பாதிக்கப்படவில்லை; இதனாலேயே மூன்றாவது அலையின்போது அவர்கள் அதிக எண்ணிக்கையிலும் கடுமையாகவும் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறுவதை குலேரியா ஏற்கவில்லை. அதற்கான சான்று எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.

ஆனால், இதையொட்டி கவலைதெரிவித்துள்ள தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், மூன்றாவது அலையின்போது பச்சிளம் குழந்தைகளையும் குழந்தைகளையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளது.

மத்திய நலவாழ்வுத் துறைச் செயலாளர் ராஜேஷ் பூசணுக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கணூங்கோ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தேசிய அவசர ஊர்திப் போக்குவரத்தை அதற்கேற்ப தயாராகவைத்துக்கொள்ளவும் குறிப்பாக பச்சிளம் குழந்தைகளுக்கும் குழந்தைகளுக்கும் தேவையான அவசர ஊர்தி வசதியை ஏற்பாடுசெய்யவும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு அலையிலும் ஒரு தரப்பினர் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் தான் தற்போது இந்த கருத்து எழுந்துள்ளது. 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: பெட்ரோலுக்கு அலைமோதும் மக்கள்.. டென்ஷனான விஜய்.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: பெட்ரோலுக்கு அலைமோதும் மக்கள்.. டென்ஷனான விஜய்.. 11 மணி செய்திகள் இதோ!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
MDMK VAIKO : 4 தொகுதிக்கு மதிமுக ஒப்புக்கொண்டது எப்படி.? ஸ்டாலின் போட்ட பிளானால் குஷியான வைகோ
4 தொகுதிக்கு மதிமுக ஒப்புக்கொண்டது எப்படி.? ஸ்டாலின் போட்ட பிளானால் குஷியான வைகோ
Embed widget