மேலும் அறிய

Railway: வெளுத்து வாங்கிய பொதுமக்கள் - அடித்து பிடித்து அறிக்கை வெளியிட்ட ரயில்வேதுறை, வந்த மாற்றம் என்ன?

Railway: பொதுமக்களிடம் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, ரயில்வேதுறை விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Railway: பொதுமக்களிடம் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, போர்வைகள் மாதத்திற்கு இரண்டு முறை துவைக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

சர்ச்சையில் ரயில்வே துறை:

ரயில் பயணிகளுக்கு ஏசி பெட்டிகளில் வழங்கப்படும் கம்பளி போர்வைகளின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்த கவலைகள் அதிகரித்து வருகிறது. ஏ.சி., கோச் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் போர்வைகள் குறைந்தது மாதத்திற்கு ஒருமுறையாவது துவைக்கப்படுகிறது என, நாடாளுமன்றத்திலேயே ரயில்வே அமைச்சர் விளக்கமளித்து இருந்தார். இது, ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், தூய்மைப்படுத்தப்படாத கம்பளிகளை பயன்படுத்துவதால் தொற்றுநோய் பரவும் வாய்ப்புள்ளதாகவும் அச்சத்தை வெளிப்படுத்தி இருந்தனர். 

வடக்கு ரயில்வே விளக்கம்:

இந்த  நிலையில் தான், 15 நாட்களுக்கு ஒருமுறை போர்வைகள் துவைக்கப்படுவதாகவும், ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சூடான நாப்தலீன் நீராவியைப் பயன்படுத்தி சுத்தம் செய்யப்படுவதாகவும் வடக்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. ஜம்மு மற்றும் திப்ருகர் ராஜ்தானி ரயில்களில் உள்ள அனைத்து போர்வைகளையும்,  புற ஊதா ரோபோ சுத்திகரிப்பு மூலம் ஒவ்வொரு சுற்று பயணத்திற்குப் பிறகும்  தூய்மையாக்கும் சோதனை முயற்சி விரைவில் தொடங்கப்படும் என்றும்  வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. UV ரோபோடிக் சுத்திகரிப்பு முறையானது,  கிருமிகளைக் கொல்ல புற ஊதா ஒளியைப் பயன்படுத்துகிறது.

பயன்பாட்டு விதிகள்:

வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர்  செய்தியாளர்களிடம் கூறுகையில், சூடான நாப்தலீன் நீராவியின் பயன்பாடு நேரத்தைச் சோதித்த மற்றும் பயனுள்ள சுத்திகரிப்பு முறையாகும். ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும் இயந்திரமயமாக்கப்பட்ட சலவைக் கூடங்களில் பருத்தி துணிகள் துவைக்கப்படுகின்றன. மேலும் பயன்பாட்டிற்கு முன்னர் இவை 'வைட்டோமீட்டர் சோதனையில்' தேர்ச்சி பெற வேண்டும் என்றார். மேலும், "2010-க்கு முன், கம்பளி போர்வைகள் 2-3 மாதங்களுக்கு ஒரு முறை துவைக்கப்படும். பின்னர் இது ஒரு மாதமாக குறைக்கப்பட்டது, இப்போது 15 நாட்களுக்கு ஒருமுறை துவைக்கப்படுகிறது. எங்களுக்கு லாஜிஸ்டிக் சவால்கள் உள்ள இடங்களில், அனைத்து போர்வைகளும் ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது துவைக்கப்படுகின்றன. ஒரு மாதத்தில் துவைக்கப்படும். ஒரு விதிவிலக்கு, ஆனால் வழக்கம் அல்ல" என்று வடக்கு ரயில்வே செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு ரயில்வே சொல்வது என்ன?

வடகிழக்கு எல்லை ரயில்வேயின் சிபிஆர்ஓ கபிஞ்சல் கிஷோர் ஷர்மா கூறுகையில், ”ரயில் பயணத்தின் போது பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் வழக்கமாக குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஒரு முறை துவைக்கப்படும். தேவைப்படின் 15 நாட்களுக்கு ஒருமுறையும் போர்வைகள் துவைக்கப்படும்” என விளக்கமளித்துள்ளார்.

இந்திய ரயில்வே நாடு முழுவதும் உள்ள பயணிகளுக்கு தினமும் 6 லட்சத்திற்கும் அதிகமான போர்வைகளை வழங்குகிறது. வடக்கு ரயில்வே மண்டலத்தில், ஒரு நாளைக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான போர்வைகள் மற்றும் படுக்கை ரோல்கள் விநியோகிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், 15 நாட்களுக்கு ஒருமுறை துவைப்பது என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், தூய்மையான மற்றும் சுகாதாரம் மிக்க பொருட்களை பயணிகளுக்கு வழங்குவதை ரயில்வே உறுதிப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Embed widget