மேலும் அறிய

Railway: வெளுத்து வாங்கிய பொதுமக்கள் - அடித்து பிடித்து அறிக்கை வெளியிட்ட ரயில்வேதுறை, வந்த மாற்றம் என்ன?

Railway: பொதுமக்களிடம் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, ரயில்வேதுறை விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Railway: பொதுமக்களிடம் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, போர்வைகள் மாதத்திற்கு இரண்டு முறை துவைக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

சர்ச்சையில் ரயில்வே துறை:

ரயில் பயணிகளுக்கு ஏசி பெட்டிகளில் வழங்கப்படும் கம்பளி போர்வைகளின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்த கவலைகள் அதிகரித்து வருகிறது. ஏ.சி., கோச் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் போர்வைகள் குறைந்தது மாதத்திற்கு ஒருமுறையாவது துவைக்கப்படுகிறது என, நாடாளுமன்றத்திலேயே ரயில்வே அமைச்சர் விளக்கமளித்து இருந்தார். இது, ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், தூய்மைப்படுத்தப்படாத கம்பளிகளை பயன்படுத்துவதால் தொற்றுநோய் பரவும் வாய்ப்புள்ளதாகவும் அச்சத்தை வெளிப்படுத்தி இருந்தனர். 

வடக்கு ரயில்வே விளக்கம்:

இந்த  நிலையில் தான், 15 நாட்களுக்கு ஒருமுறை போர்வைகள் துவைக்கப்படுவதாகவும், ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சூடான நாப்தலீன் நீராவியைப் பயன்படுத்தி சுத்தம் செய்யப்படுவதாகவும் வடக்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. ஜம்மு மற்றும் திப்ருகர் ராஜ்தானி ரயில்களில் உள்ள அனைத்து போர்வைகளையும்,  புற ஊதா ரோபோ சுத்திகரிப்பு மூலம் ஒவ்வொரு சுற்று பயணத்திற்குப் பிறகும்  தூய்மையாக்கும் சோதனை முயற்சி விரைவில் தொடங்கப்படும் என்றும்  வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. UV ரோபோடிக் சுத்திகரிப்பு முறையானது,  கிருமிகளைக் கொல்ல புற ஊதா ஒளியைப் பயன்படுத்துகிறது.

பயன்பாட்டு விதிகள்:

வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர்  செய்தியாளர்களிடம் கூறுகையில், சூடான நாப்தலீன் நீராவியின் பயன்பாடு நேரத்தைச் சோதித்த மற்றும் பயனுள்ள சுத்திகரிப்பு முறையாகும். ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும் இயந்திரமயமாக்கப்பட்ட சலவைக் கூடங்களில் பருத்தி துணிகள் துவைக்கப்படுகின்றன. மேலும் பயன்பாட்டிற்கு முன்னர் இவை 'வைட்டோமீட்டர் சோதனையில்' தேர்ச்சி பெற வேண்டும் என்றார். மேலும், "2010-க்கு முன், கம்பளி போர்வைகள் 2-3 மாதங்களுக்கு ஒரு முறை துவைக்கப்படும். பின்னர் இது ஒரு மாதமாக குறைக்கப்பட்டது, இப்போது 15 நாட்களுக்கு ஒருமுறை துவைக்கப்படுகிறது. எங்களுக்கு லாஜிஸ்டிக் சவால்கள் உள்ள இடங்களில், அனைத்து போர்வைகளும் ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது துவைக்கப்படுகின்றன. ஒரு மாதத்தில் துவைக்கப்படும். ஒரு விதிவிலக்கு, ஆனால் வழக்கம் அல்ல" என்று வடக்கு ரயில்வே செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு ரயில்வே சொல்வது என்ன?

வடகிழக்கு எல்லை ரயில்வேயின் சிபிஆர்ஓ கபிஞ்சல் கிஷோர் ஷர்மா கூறுகையில், ”ரயில் பயணத்தின் போது பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் வழக்கமாக குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஒரு முறை துவைக்கப்படும். தேவைப்படின் 15 நாட்களுக்கு ஒருமுறையும் போர்வைகள் துவைக்கப்படும்” என விளக்கமளித்துள்ளார்.

இந்திய ரயில்வே நாடு முழுவதும் உள்ள பயணிகளுக்கு தினமும் 6 லட்சத்திற்கும் அதிகமான போர்வைகளை வழங்குகிறது. வடக்கு ரயில்வே மண்டலத்தில், ஒரு நாளைக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான போர்வைகள் மற்றும் படுக்கை ரோல்கள் விநியோகிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், 15 நாட்களுக்கு ஒருமுறை துவைப்பது என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், தூய்மையான மற்றும் சுகாதாரம் மிக்க பொருட்களை பயணிகளுக்கு வழங்குவதை ரயில்வே உறுதிப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Jan.16th: அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
TN Roundup: பாலமேடு ஜல்லிக்கட்டு, குறைந்த தங்கம், மாநில அரசின் விருதுகள் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: பாலமேடு ஜல்லிக்கட்டு, குறைந்த தங்கம், மாநில அரசின் விருதுகள் - தமிழகத்தில் இதுவரை
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
ABP Premium

வீடியோ

திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Jan.16th: அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
TN Roundup: பாலமேடு ஜல்லிக்கட்டு, குறைந்த தங்கம், மாநில அரசின் விருதுகள் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: பாலமேடு ஜல்லிக்கட்டு, குறைந்த தங்கம், மாநில அரசின் விருதுகள் - தமிழகத்தில் இதுவரை
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
mattu pongal 2026: கம்பத்தில் மாடுகளுக்கு கோவில்! ராஜ மரியாதை பெறும் காளை! ஆச்சரியம் தரும் தொழுவம்!
mattu pongal 2026: கம்பத்தில் மாடுகளுக்கு கோவில்! ராஜ மரியாதை பெறும் காளை! ஆச்சரியம் தரும் தொழுவம்!
AR Rahman: ஹாலிவுட் முட்டாள் கிடையாது.. ஆஸ்கர் கிடைத்தது திறமை.. டென்ஷனான ஏ.ஆர்.ரஹ்மான்!
AR Rahman: ஹாலிவுட் முட்டாள் கிடையாது.. ஆஸ்கர் கிடைத்தது திறமை.. டென்ஷனான ஏ.ஆர்.ரஹ்மான்!
Parasakthi Box Office: கம்பேக் மோடில் பராசக்தி..மீண்டும் கல்லா கட்டுவாரா சிவகார்த்திகேயன்? டஃப் கொடுக்கும் ஜீவா?
Parasakthi Box Office: கம்பேக் மோடில் பராசக்தி..மீண்டும் கல்லா கட்டுவாரா சிவகார்த்திகேயன்? டஃப் கொடுக்கும் ஜீவா?
JSW Jetour T2: ஃபார்ட்சுனர், தார் மாடலை நான் அடிக்கிறேன்.. ரக்கட் ஆன ஜெடூர் T2.. JSW-வின் புதிய ஹைப்ரிட் கார்
JSW Jetour T2: ஃபார்ட்சுனர், தார் மாடலை நான் அடிக்கிறேன்.. ரக்கட் ஆன ஜெடூர் T2.. JSW-வின் புதிய ஹைப்ரிட் கார்
Embed widget