மேலும் அறிய

கணவரை நக்சல்களிடமிருந்து மீட்பதற்காக, இரண்டரை வயது மகளுடன் காட்டுக்குள் புறப்பட்ட இளம்பெண்..

தனது கணவரை நக்சலைட்டுகள் கடத்திவிட்டனர் என்பதை அறிந்த இளம் பெண் ஒருவர் துணிச்சலாக தனது இரண்டரை வயது மகளை தூக்கிக் கொண்டு நக்சல்களின் இடத்திற்கே சென்றுள்ளார்.

கடத்தல் என்றால் ஒரு குடும்பம் எப்படி நடுங்கும் என்பதை நாம் சினிமாக்களில் பார்த்திருப்போம். ஆனால் தனது கணவரை நக்சலைட்டுகள் கடத்திவிட்டனர் என்பதை அறிந்த இளம் பெண் ஒருவர் துணிச்சலாக தனது இரண்டரை வயது மகளை தூக்கிக் கொண்டு நக்சல்களின் இடத்திற்கே சென்றுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர், நாராயணபூர் மாவட்டங்களை ஒட்டி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதிகள் நக்சல் ஆதிக்கம் நிறைந்தது. சிஆர்பிஎஃப், அதிரடி போலீஸ், உளவு அமைப்பினர் எனப் பல அங்கங்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்கும் பகுதி.

என்றாலும் இங்கு அவ்வப்போது கடத்தல் சம்பவங்கள் நடந்துவிடுவது வழக்கமாக இருக்கிறது.

அங்குள் அபுஜ்மத் வனம் நக்சல்களின் கோட்டையாகவே அறியப்படுகிறது. அந்த வனத்தை ஒட்டிய பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று பாலம் கட்டும் ஒப்பந்தத்தை எடுத்திருந்தது. இந்திராவதி ஆற்றின் குறுக்கே பால வேலைகள் நடைபெற்று வருகின்றன. பெட்ரே, நுகுர் கிராமங்களை இணைப்பதற்காக இந்தப் பாலம் கட்டப்பட்டு வருகிறது.

அந்தப் பாலப் பணியில் ஈடுபட்டிருந்த பொறியாளர்கள் அசோக் பவார் மற்றும் ஆனந்த் யாதவ் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி நக்சலைட்டுகளால் கடத்தப்பட்டனர். 

இந்தத் தகவல் யாதவின் மனைவி சோனாலிக்கு எட்டியது. இதனையடுத்து சோனாலி தனது கணவரை தங்களின் இரண்டரை வயது மற்றும் ஐந்து வயது நிரம்பிய பெண் குழந்தைகளுக்காக விடுவிக்குமாறு வேண்டி உருக்கமாகப் பேசி சமூகவலைதளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதற்கு எந்த பதிலும் நக்சல் தரப்பில் இருந்து வரவில்லை. நக்சலைட்டுகள் எங்கே தனது கணவரைக் கொன்று விடுவார்கள் என அஞ்சி அடுத்தக்கட்ட நடவடிக்கைக்குத் துணிந்தார் சோனாலி.

இந்நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை அவர் சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூருக்கு குடும்பத்துடன் வந்தார். தனது ஐந்து வயது மகளை உறவினர்களிடம் விட்டுவிட்டு இரண்டரை வயது மகளை மட்டும் தூக்கிக் கொண்டு அங்கிருந்து அவர் அபுஜ்மத் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டார்.

ஆனால் அதற்குள் நக்சலைட்டுகள் பொறியாளர் அசோக் பவார் மற்றும் தொழிலாளி ஆன்ந்த் யாதவை விடுவித்தனர். அவர்கள் இருவரும் நேற்று (பிப்.15) மாலை விடுதலையாகினர். இருவரும் தற்போது குட்ரு காவல் நிலையத்தில் பத்திரமாக உள்ளனர்.

நக்சலைட்டுகள் தங்கள் இருவரையும் விடுவிக்கும்போது அவரவர் சொந்த ஊருக்குச் செல்ல தலா ரூ.2000 கொடுத்ததாக போலீஸில் ஆனந்த் யாதவ் கூறினார். ஆனால், பொறியாளர் அசோக் பவார் இன்னும் தான் கடத்தப்பட்ட அதிர்ச்சியில் இருந்து வெளிவராமல் உள்ளார்.

இதற்கிடையில் வனத்துக்குள் சென்ற ஆனந்த் யாதவின் மனைவி சோனாலிக்கு கணவர் விடுவிக்கப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது. அவர் தனது கணவரைப் பார்க்கும் ஆவலில் உள்ளதாகக் கூறியுள்ளார். அவர் வனத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருக்கிறார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் பிஏ சுட்டுக்கொலை.. ஜிபே மூலம் சிக்கிய கொலையாளிகள்.. நடந்தது என்ன?
முதலமைச்சர் பிஏ சுட்டுக்கொலை.. ஜிபே மூலம் சிக்கிய கொலையாளிகள்.. நடந்தது என்ன?
Top 10 News Headlines: சட்டமன்றத்தில் முதல் நாளே சம்பவம்... தங்கம் வாங்காதீங்க! குண்டை போட்ட மோடி
Top 10 News Headlines: சட்டமன்றத்தில் முதல் நாளே சம்பவம்... தங்கம் வாங்காதீங்க! குண்டை போட்ட மோடி
மக்கள் என்ன செய்யணும்ன்னு நீங்க சொல்லாதீங்க - பிரதமர் மோடியை விளாசிய ராகுல்காந்தி!
மக்கள் என்ன செய்யணும்ன்னு நீங்க சொல்லாதீங்க - பிரதமர் மோடியை விளாசிய ராகுல்காந்தி!
PM Modi:
PM Modi: "எதிர்க்காதீங்க.. கூட்டணி சேருங்க!" தெலங்கானா முதல்வருக்கு பிரதமர் மோடி வைத்த சுவாரசிய 'செக்'
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: 2 வாரம் தான் டைம்... 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!
CM Vijay: 2 வாரம் தான் டைம்... 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!
TVK ADMK: கவலை வேண்டாம் CM விஜய்..! 30 MLA-க்களின் ஆதரவை இன்று அறிவிக்கும் அதிமுக - அமைச்சரவை இடம்?
TVK ADMK: கவலை வேண்டாம் CM விஜய்..! 30 MLA-க்களின் ஆதரவை இன்று அறிவிக்கும் அதிமுக - அமைச்சரவை இடம்?
MK Stalin: வெறும் 87 ஓட்டு வாங்கிய மு.க.ஸ்டாலின்.. தோற்ற காரணம் இதுதானா? - சம்பவம் செய்த கொளத்தூர் மக்கள்!
MK Stalin: வெறும் 87 ஓட்டு வாங்கிய மு.க.ஸ்டாலின்.. தோற்ற காரணம் இதுதானா? - சம்பவம் செய்த கொளத்தூர் மக்கள்!
CM Vijay: போட்டியே இல்லை..! CM விஜய்க்கு சட்டசபையில் கிடைத்த முதல் வெற்றி - முக்கிய பதவிகளின் அதிகாரம் என்ன?
போட்டியே இல்லை..! CM விஜய்க்கு சட்டசபையில் கிடைத்த முதல் வெற்றி - முக்கிய பதவிகளின் அதிகாரம் என்ன?
CM Vijay: முதலமைச்சராக பதவியேற்ற விஜய்.. இன்ப அதிர்ச்சியில் தவெக தொண்டர் உயிரிழப்பு..
CM Vijay: முதலமைச்சராக பதவியேற்ற விஜய்.. இன்ப அதிர்ச்சியில் தவெக தொண்டர் உயிரிழப்பு..
AIADMK Clash: இரண்டாக உடைந்த அதிமுக; இபிஎஸ் இல்லத்தில் குவியும் நிர்வாகிகள்; அடுத்த நகர்வு என்ன.?
இரண்டாக உடைந்த அதிமுக; இபிஎஸ் இல்லத்தில் குவியும் நிர்வாகிகள்; அடுத்த நகர்வு என்ன.?
AIADMK: உடைந்தது அதிமுக.! 30 MLA-க்களுடன் பேரவை சென்ற சிவி சண்முகம்; தலைவராகும் எஸ்பி வேலுமணி.!
உடைந்தது அதிமுக.! 30 MLA-க்களுடன் பேரவை சென்ற சிவி சண்முகம்; தலைவராகும் எஸ்பி வேலுமணி.!
CM Vijay: எல்லாரையும் பார்த்த விஜய் இபிஎஸ்-ஐ சந்திக்காதது ஏன்? இதுதான் காரணமோ!
CM Vijay: எல்லாரையும் பார்த்த விஜய் இபிஎஸ்-ஐ சந்திக்காதது ஏன்? இதுதான் காரணமோ!
Embed widget