மேலும் அறிய

புதுச்சேரியில் பேராசிரியர் உட்பட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

’’தனியார் நர்சிங் கல்லூரியில் பேராசிரியர் மற்றும் 3 மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் தொற்று ஏற்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை’’

புதுச்சேரியில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. புதுச்சேரி கிருமாம்பாக்கத்திலுள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் 3 மாணவிகள், பேராசிரியர் ஒருவருக்கு கொரோனா  தொற்று உறுதியானது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கல்லூரிக்கு இன்று சென்று ஆய்வு செய்தனர்.

புதுச்சேரியில் பேராசிரியர் உட்பட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இதுபற்றி சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, நர்சிங் கல்லூரியில் பேராசிரியர், 3 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானது. கொரோனா தொற்று கல்லூரியிலிருந்து வரவில்லை. விடுமுறை நாட்களின் போது அவர்கள் வசிக்கும் பகுதியில் ஏற்பட்டு அவரவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சையில் உள்ளனர். கல்லூரி சென்று பரிசோதித்தோம். கல்லூரியில் மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லை. இதனால் கல்லூரி தொடர்ந்து இயங்குகிறது என்று குறிப்பிட்டனர்.

புதுச்சேரியில் பேராசிரியர் உட்பட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மேலும் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று:

புதுச்சேரி பகுதியில் உள்ள கரையாம்புத்தூர் அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, இதைத்தொடர்ந்து சுகாதார துறையினர் மாணவர்களை சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டில் தனிமை படுத்தபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் பேராசிரியர் உட்பட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுவையில் நேற்று 3 ஆயிரத்து 434 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. புதிதாக 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 20, காரைக்காலில் 6, ஏனாமில் 1, மாஹேவில் 5 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 112, காரைக்காலில் 30, ஏனாமில் 8, மாகேவில் 25 பேர் என 175 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுவையில் 448, காரைக்காலில் 170, ஏனாமில் 27, மாகேவில் 94 பேர் என 739 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 914 பேர் கரோனா தொற்றுடன் உள்ளனர். புதுவையில் 47, காரைக்காலில் 17, ஏனாமில் 2, மாகேவில் 12 பேர் என 78 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்த 65 வயது பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 818 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் 2வது தவணை உட்பட 8 லட்சத்து 38 ஆயிரத்து 485 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget