மேலும் அறிய

ஜம்மு-காஷ்மீரில் வெளிமாநிலத்தவர் நிலம் வாங்கியுள்ளனரா?- மத்திய உள்துறை இணையமைச்சரின் பதில்

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இதுவரை எத்தனை வெளிமாநிலத்தவர் நிலம் வாங்கியுள்ளனர் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு  2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்த பிரிவு 370 மற்றும் 35 ஏ ஆகிய இரண்டையும் நீக்கியது. அப்போது அங்கு தொழிற்சாலைகள் அமைக்க முடியவில்லை மற்றும் சுற்றுலா வளர்ச்சி செய்ய முடியவில்லை என்ற காரணங்களை மத்திய உள்துறை அமைச்சகம் முன்வைத்தது. 

இதைத் தொடர்ந்து கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் நிலம் வாங்குவது தொடர்பாக நில வருவாய் சட்டத்தை திருத்தியது. அந்த திருத்தத்தின் மூலம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் வசிக்கும் நபர்களும் அங்கு வேளாண் நிலம் உள்பட அனைத்து வகையான நிலங்களையும் வாங்க முடியும் என்ற நிலை உருவானது. 


ஜம்மு-காஷ்மீரில் வெளிமாநிலத்தவர் நிலம் வாங்கியுள்ளனரா?- மத்திய உள்துறை இணையமைச்சரின் பதில்

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரில் மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அந்த கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் ஜர்னா தாஸ் பைத்யா, “ஜம்மு-காஷ்மீர் பகுதியில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் யாரும் நிலம் வாங்கியுள்ளனரா? அப்படி என்றால் இதுவரை எத்தனை பேர் வாங்கியுள்ளனர்? அந்த நிலங்கள் எந்த பகுதியில் அமைந்துள்ளது?” என்ற கேள்வியை அவர் கேட்டுள்ளார். 

அவருடைய கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இணையமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்துள்ளார். அதில்,”ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தரவுகளின்படி தற்போது வரை அங்கு வெளி மாநிலங்களை சேர்ந்த 7 பேர் நிலங்களை வாங்கியுள்ளனர். அவை அனைத்தும் ஜம்மு பகுதியில் மட்டும் அமைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 2 வெளி மாநில நபர்கள் நிலம் வாங்கியதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. தற்போது அது 7ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் தற்போது 12 மாநிலங்களில் நிலம் வாங்குவதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அவை அனைத்தும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 371 மூலம் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஜம்மு-காஷ்மீர் பகுதிக்கு மட்டும் 370 பிரிவு மற்றும் 35 ஏ பிரிவு முக்கியமான கட்டுபாட்டை விதித்து வந்தது. அந்த பிரிவு அமலில் இருந்த போது ஜம்மு-காஷ்மீரில் பிறந்தவர்கள் மட்டுமே அங்கு நிலம் வாங்க முடியும் என்ற நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ''என் பொண்ணு சாகவே இல்லை'' - பெரிய ட்விஸ்ட் வைத்த இந்திராணி.. குழப்பத்தில் போலீசார்!!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget