மேலும் அறிய

24 மணி நேரத்தில்...சுட்டு வீழ்த்தப்பட்ட 4 ட்ரோன்கள்... எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் செய்த சதி வேலை..!

பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் நான்கு வெவ்வேறு இடங்களில் பாகிஸ்தானை சேர்ந்த நான்கு ட்ரோன்களை இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இடைமறித்து, சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது. சுதந்திரம் பெற்றதிலிருந்து, காஷ்மீரை சொந்தம் கொண்டாடி வரும் பாகிஸ்தான், ஐநா உள்ளிட்ட சர்வதேச மன்றங்களில் இந்த விவகாரத்தை தொடர்ந்து எழுப்பி வருகிறது. அதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

காஷ்மீர் விவகாரம்:

நிலைமை இப்படியிருக்க, காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது அதற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, கடந்த 2019ஆம் ஆண்டு பாஜக இரண்டாவது முறையாக அமைத்த பின் திரும்ப பெறப்பட்டது. இதன்மூலம், ஜம்மு காஷ்மீர், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த விவகாரம் இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவில் மேலும் சிக்கலை உருவாக்கியது. 

இதை தொடர்ந்து, இரு நாட்டு எல்லையில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் எல்லை தாண்டி வந்து அட்டூழியத்தில் ஈடுபடுதவாக இந்திய ராணுவம் குற்றம்சாட்டி வருகிறது. குறிப்பாக, பஞ்சாப்புக்கு உள்ளே ட்ரோன் மூலம் போதை பொருளை கடத்துவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 24 மணி நேரத்தில் பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் நான்கு வெவ்வேறு இடங்களில் பாகிஸ்தானை சேர்ந்த நான்கு ட்ரோன்களை இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இடைமறித்து, சுட்டு வீழ்த்தியுள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு மூன்று ட்ரோன்களை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இடைமறித்த நிலையில், நான்காவது ஆளில்லா விமானம் சனிக்கிழமை இரவு சுட்டு வீழ்த்தப்பட்டது.

24 மணி நேரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட நான்கு ட்ரோன்கள்:

இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படையின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், "டிஜேஐ மெட்ரிஸ் 300 ஆர்டிகே தயாரிப்பின் கறுப்பு குவாட்காப்டரான முதல் ட்ரோன், அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள உதர் தரிவால் கிராமத்தில் இருந்து மீட்கப்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில் ட்ரோனை இடைமறித்த வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள ரத்தன் குர்த் கிராமத்தில் இரவு 9.30 மணியளவில், இரண்டாவது ட்ரோனை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். ரத்தன் குர்த் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆளில்லா விமானத்தில் இருந்து 2.6 கிலோ ஹெராயினை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்தனர்.

வெள்ளிக்கிழமை இரவு மூன்றாவது ஆளில்லா விமானம் இடைமறிக்கப்பட்டது. ஆனால், அது, பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் விழுந்ததால் அதை மீட்க முடியவில்லை. நான்காவது ஆளில்லா விமானம் சனிக்கிழமை இரவு இந்திய வான்வெளி விதிகளை மீறி அமிர்தசரஸ் செக்டார் எல்லையில் பறந்தது. துப்பாக்கிச் சூடு நடத்தியதன் மூலம் அதுவும் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதிலிருந்தும், சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் பை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது" என்றார்.

தலைப்பு செய்திகள்

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Embed widget