மேலும் அறிய

3500 கிலோ வெடி பொருள்கள்... நொய்டா இரட்டை கோபுரத்தை எப்படி இடிக்க போகிறார்கள்?

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, சூப்பர் டெக்கின் 40 மாடி நொய்டா இரட்டைக் கோபுரம், ஆகஸ்ட் 28 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு இடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்தும் தயார் செய்யப்பட்டுவிட்டது. தேதி குறிக்கப்பட்டுவிட்டது. துப்பாக்கி வெடிபொருள்கள் கூட தயார் செய்யப்பட்டுவிட்டது. எதற்கு தெரியுமா? விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள நெய்டா இரட்டைக் கோபுரத்தை இடிக்கத்தான். 

 

விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை கண்டறிந்து இடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், உத்தரவுக்கு இணங்க, சூப்பர் டெக்கின் 40 மாடி நொய்டா இரட்டைக் கோபுரம், ஆகஸ்ட் 28 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு இடிக்கப்படும் என்பதால் குடியிருப்பாளர்கள் கட்டிடம் அமைந்துள்ள பகுதியில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஏறக்குறைய 100 மீட்டர் உயரமுள்ள கட்டிடத்தை இடிக்கும் பணி ஆகஸ்ட் 21 ஆம் தேதி தொடங்க இருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் நொய்டா ஆணையத்தின் நீட்டிப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 900க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள், 21 கடைகள்  நொய்டாவின் செக்டார் 93B இல் அமைந்துள்ள இரட்டை கோபுரத்தில் வரவிருந்தன.

கட்டிடத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் - எமரால்டு கோர்ட் மற்றும் ஏடிஎஸ் கிராமம் - ஆகஸ்ட் 28ஆம் தேதி காலை 7 மணிக்குள் வீடுகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குடியிருப்பாளர்கள், அதே நாளில் மாலை 4 மணிக்குப் பிறகுதான் வீடு திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இரட்டைக் கோபுர கட்டிட அமைப்புகளின் நெடுவரிசைகள் மற்றும் துளையிடப்பட்ட 9,400 துளைகளில் சுமார் 3,500 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்கள் நிரப்பப்படும் என அலுவலர்கள் கூறியுள்ளனர். இந்த வார தொடக்கத்தில், வெடிபொருள்களை ஏற்றிச் செல்லும் பல லாரிகள் இடிக்க வேண்டிய பகுதிக்கு வந்ததைக் காண முடிந்தது.

இதுகுறித்து RWA சூப்பர்டெக்கின் தலைவர் உதய் குமார் தெவாடியா கூறுகையில், "மக்கள் பயப்படுகிறார்கள். ஆனால், நிபுணர்கள் அதை செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இங்கிலாந்தில் இருந்து நிபுணர்கள் கூட வரவழைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம். இந்த வெடிப்பின் தாக்கம் 50 மீட்டர் சுற்றளவில் உணரப்படும்" என்றார்.

கட்டிடம் இடிக்கும்போது இரு பகுதிகளில் இருந்தும் வாகனங்கள் அப்பகுதியில் அனுமதிக்கப்படாது. மீட்பு பணிகளின் போது, நொய்டா ஆணையம் அவர்களுக்கு பார்க்கிங் இடத்தை வழங்கும். இரட்டைக் கோபுரத்திற்கு அருகே உள்ள நொய்டா-கிரேட்டர் நொய்டா விரைவுச்சாலை, இடிக்கபோகும் தினம் அன்று பிற்பகல் 2:15 முதல் 2.45 வரை வாகனப் போக்குவரத்துக்காக மூடப்பட்டிருக்கும் என திட்டமிடப்பட்டுள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget