மேலும் அறிய

முதலமைச்சர் பிஏ சுட்டுக்கொலை.. ஜிபே மூலம் சிக்கிய கொலையாளிகள்.. நடந்தது என்ன?

நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு சுவேந்து அதிகாரியின் பிஏ சந்திரநாத் ரத் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

மேற்கு வங்கத்தின் புதிய முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் கடந்த மே 6ம் தேதி தற்போது மேற்கு வங்க முதலமைச்சராக பதவியேற்றுள்ள சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளர் சந்திரநாத் ரத் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், மத்யம்கிராமில் உள்ள தனது வீட்டிலிருந்து புறப்பட்டு சில அடி தூரம் சென்ற நிலையில் கொலை செய்யப்பட்டார். 

காரின் முன் இருக்கையில் ரத் அமர்ந்திருந்த நிலையில் அந்த காரை மற்றொரு கார் முன்னாள் சென்று வழிமறித்துள்ளது. அப்போது பைக்கில் வந்த 3 பேர் சந்திரநாத் தத்தை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் காவல்துறையினர் இணைந்து நடத்திய நடவடிக்கையில், விஷால் ஸ்ரீவஸ்தவா, ராஜ் சிங் மற்றும் மயங்க் மிஸ்ரா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் தொழில்முறை கொலையாளிகள் என தெரிய வந்துள்ளது. மூன்று பேரும் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் போலீசார் பிற மாநிலங்களில் இருந்து கொலை குற்றவாளிகள் வந்திருக்கலாம் என்ற கணிப்பில் சுங்கச்சாவடிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு காரில் கைது செய்யப்பட்ட 3 பேர் அமர்ந்திருந்தது தெரிய வந்தது. அவர்களில் ஒருவர் சுங்கச்சாவடியில் யுபிஐ மூலம் பணம் செலுத்தியது தெரிய வந்தது. அதனைக் கண்டறிந்த போலீசார் அதன்மூலம் கொலையாளிகளை எளிதில் நெருங்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றச்செயலில் பயன்படுத்தப்பட்ட 2 பைக்குகள், ஒரு கார் கண்டறியப்பட்டது. 

சந்திரநாத் தத்தின் கொலை முன்கூட்டியே திட்டமிட்டப்பட்டது எனவும், பவானிபூரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மமதா பானர்ஜியை சுவேந்து அதிகாரி தோற்கடித்தார். அதனால் இந்த கொலை நடந்துள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.முன்னாள் இந்திய விமானப்படை ஊழியரான சந்திரநாத் ரத் உடல் பூர்வா மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்திற்கு முதலில் கொண்டு செல்லப்பட்டது. மேலும் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது குலூப் கிராமத்தில் உள்ள ஒரு மைதானத்தில் அவரது உடல் தேசியக் கொடி போர்த்தப்பட்டு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
Embed widget