மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
திருவாரூரில் தாரை, தப்பட்டை, கரகத்துடன் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு
ஒரு நாளைக்கு 2 பள்ளிகள், 2 குடியிருப்பு பகுதிகள் வீதம் 10 நாட்களில் மாவட்டம் முழுவதும் கலைக்குழு மூலம் இல்லம் தேடிக் கல்வி திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திட திட்டம்
![திருவாரூரில் தாரை, தப்பட்டை, கரகத்துடன் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு illam thedi kalvi Education project awareness in Thiruvarur in search of home with tarai, tappattai and karakat திருவாரூரில் தாரை, தப்பட்டை, கரகத்துடன் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/25/916fe94beceed400c3dc8d6d4badc8db_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு வாகனம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு கலை பிரச்சார வாகனத்தை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திட்டம் தொடங்குவதற்கு முன்பாக கலைஞர்கள் தப்பாட்டம் கரகம் மேலும் படித்து இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்ததாவது… தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைகிணங்க இல்லம் தேடிக் கல்வி எனும் திட்டத்தினை பள்ளிக்கல்வி துறை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலமாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை ஈடுசெய்ய, தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது.
![திருவாரூரில் தாரை, தப்பட்டை, கரகத்துடன் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/25/821f9815dce47bf69e315cabe9a4ddb8_original.jpg)
இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் 10 ஒன்றியங்களிலும் 8 கலைக்குழுவினரைக் கொண்டு பொது மக்களிடையே இத்திட்டம் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த “விழிப்புணர்வு கலைப்பிரச்சார வாகனம்” தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்விழிப்புணர்வு கலைப்பிரச்சார வாகனத்தின் மூலம் மாவட்டத்திலுள்ள 10 ஒன்றியங்களிலும் ஒரு நாளைக்கு இரண்டு பள்ளிகள், இரண்டு குடியிருப்பு பகுதிகள் என்ற வகையில் 10 நாட்களில் மாவட்டம் முழுவதும் கலைக்குழு மூலம் இல்லம் தேடிக் கல்வி திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற தேர்தெடுக்கப்பட்ட வீதி நாடக கலைஞர்களைக் கொண்டு இத்திட்டத்தின் குறிக்கோளினை பொது மக்கள் மற்றும் மாணவர்களிடத்தில் எடுத்து செல்லப்பட உள்ளது.
![திருவாரூரில் தாரை, தப்பட்டை, கரகத்துடன் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/25/4ac34dddc6992b93886fdbef02ffb42d_original.jpg)
மேலும், இல்லம் தேடிக் கல்வி திட்டமானது கொரோனா பெருந்தொற்று பொது முடக்க காலங்களில் 1 முதல் 8 வகுப்புகள் வரை பயிலுகின்ற மாணவர்கள் கற்றல் இழப்பினை ஈடுசெய்தல் மற்றும் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக பள்ளி நேரங்களை தவிர்த்து மாணவர்களின் வசிப்பிடம் அருகே தன்னார்வலர்களைக் கொண்டு மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்குதல், கற்றல் திறன்களை திட்ட செயல்பாடுகளின் வாயிலாக மீண்டும் வலுப்படுத்துதல், குறைந்தபட்சம் 6 மாத காலத்திற்கு 1 முதல் ஒன்றரை மணி நேரம் எளிய முறையில் செயல்பாடுகள் வாயிலாக கற்றல் வாய்ப்பை வழங்குதல் ஆகும். இத்திட்டத்தில் தன்னார்வலர்களாக செயல்பட விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஊராட்சித்தலைவர் பாலசுப்ரமணியன், முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர்கள் மணிவண்ணன், பார்த்தசாரதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion