மேலும் அறிய

திருவாரூரில் விவசாயிகள் சாலை மறியல் - மழை பாதித்த பயிர்களுக்கு ஏக்கருக்கு 30,000 வழங்க கோரிக்கை

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தாளடி மற்றும் சம்பா நெல் பயிர்கள் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கும் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும்,

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒன்று மற்றும் இரண்டாம் தேதி மூன்றாம் தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கனமழையால் மழை நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்திருந்தனர். உடனடியாக பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாசிலாமணி தலைமையில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருவாரூரில் விவசாயிகள் சாலை மறியல் - மழை பாதித்த பயிர்களுக்கு ஏக்கருக்கு 30,000 வழங்க கோரிக்கை

நிவாரண பணிகளுக்கு தமிழ்நாடு அரசு கோறும் நிதியை மத்திய அரசு குறைக்காமல் உடனடியாக வழங்கிட வேண்டும், அறுவடையாகும் நிலையில் மழை நீரில் மூழ்கி அழிந்து போன குறுவை நெல் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும், மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தாளடி மற்றும் சம்பா நெல் பயிர்கள் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கும் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும், தோட்டப்பயிர்கள் பாதிப்பிற்கு உரிய அளவில் நிவாரணம் வழங்கிட வேண்டும், மனித உயிரிழப்புக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.


திருவாரூரில் விவசாயிகள் சாலை மறியல் - மழை பாதித்த பயிர்களுக்கு ஏக்கருக்கு 30,000 வழங்க கோரிக்கை

ஆடு மாடுகள் உயிரிழப்பிற்கு உரிய அளவு இழப்பீடு வழங்க வேண்டும், தொடர்மழையால் வேலைவாய்ப்பு இழந்துள்ள விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 10,000 நிவாரணம் வழங்க வேண்டும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் இலவச உணவு பொருளோடு 3000 வழங்கிட வேண்டும், 2020-21 ஆம் ஆண்டு காப்பீடு திட்டத்தில் விடுபட்டுப்போன கிராமங்களுக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
தென்னையைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈ: கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி
தென்னையைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈ: கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி
அரசு கேபிள் டிவி தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதா? ஆபரேட்டர்கள் திடீர் அச்சம்
அரசு கேபிள் டிவி தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதா? ஆபரேட்டர்கள் திடீர் அச்சம்
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Embed widget